Newsஆஸ்திரேலியாவில் கோலியின் அறையின வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகர்! கோபத்தில் அனுஷ்கா

ஆஸ்திரேலியாவில் கோலியின் அறையின வீடியோ எடுத்து வெளியிட்ட ரசிகர்! கோபத்தில் அனுஷ்கா

-

தனது அறையை வீடியோ எடுத்தது குறித்து வருத்தத்துடன் ரசிகர்களை விராட்கோலி மற்றும் அனுஷ்கா சர்மா கண்டித்திருக்கின்றனர்.

விராட் கோலியின் ரசிகர் ஒருவர், கோலி தங்கியிருந்த ஹோட்டல் அறையினுள் நுழைந்து ‘இதுதான் கோலி தங்கியிருக்கும் அறை’ என்று அறையை சுற்றிக் காட்டும் விதமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு விராட்கோலியின்
ரசிகர்கள் பலரும் இதைப் பகிர்ந்து வருகின்றனர்.

பலர் இதை ஆர்வதுடன் பகிர்ந்து வந்தாலும் சிலர் ‘இது விராட்கோலியின் தனிப்பட்ட விடயங்களில் குறுக்கிடுவதாக இருக்கிறது. அவரது ‘Privacy’-க்கு மதிப்பளிக்க வேண்டும்’ என்று கூறிவருகின்றனர். இருப்பினும், இந்த வீடியோ பதிவு சமூக வலைதளங்களில் தீயாகப் பரவி வருகிறது. இந்நிலையில் வைரலாகி வரும் இந்த வீடியோவைக் கண்ட விராட்கோலி மற்றும் அவரின் மனைவி அனுஷ்கா சர்மா இருவரும் இந்த வீடியோவைத் தங்களது சமூக வலைதளப்பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களின் இந்தச் செயலைக் கண்டித்து வருத்தத்துடன் பதிவிட்டுள்ளனர்.

இது குறித்து பதிவிட்டுள்ள விராட்கோலி, “ரசிகர்கள் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டு வீரர்களை நேரில் காண ஆசைப்படுவதைப் பாராட்டுகிறேன். ஆனால், இந்த வீடியோப் பதிவு என்னை அதிர்ச்சியடையச் செய்கிறது. இது எனது தனிப்பட்ட விடயங்களில் (privacy) குறுக்கிடுவதாகக் கருதுகிறேன்.

இது சரியானதும் அல்ல. எனது தனிப்பட்ட அறையில் கூட எனக்குப் பிரைவசி இல்லையென்றால் பிறகு வேறெந்த இடங்களில் நான் எனது தனிபட்ட நேரங்களைச் செலவிடுவது. இதுபோன்ற தீவிர ரசிக செயல்களில் எனக்கு சற்றும் உடன்பாடியில்லை. இது அத்துமீறல். தயவு செய்து அனைவரது தனிப்பட்ட விசயங்களுக்கும் மதிப்புக் கொடுங்கள். யாரையும் பொழுதுபோக்குப் பொருளாக நடத்த வேண்டாம்”என்று தனது வருத்தத்தைப் பதிவிட்டுள்ளார்.

மேலும் இது பற்றிக் கூறியுள்ள அனுஷ்கா சர்மா, “இது மிகவும் தவறான செயல். அனைவரும் சுய கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழகிக் கொள்ள வேண்டும்” என்று கூறியுள்ளார். தங்களது தனிப்பட்ட விடயங்கள் பற்றிய செய்திகள் அல்லது புகைப்படங்கள் பொதுவெளியில் பகிரப்படுவதில் விருப்பம் இல்லை என்று கூறிவரும் இருவரும் தங்களது குழந்தையின் புகைப்படத்தை பகிரவேண்டாம் என்று கூறியிருந்த நிலையில் தற்போது இந்த வீடியோ குறித்தும் தங்களது தனிப்பட்ட விஷயங்களில் யாரும் குறுக்கிட வேண்டாம் என கூறியுள்ளார்.

Latest news

பள்ளி பருவ தேர்வுகளில் தோல்வியடைந்துள்ள 1/10 ஆஸ்திரேலிய பள்ளி மாணவர்கள்

ஆஸ்திரேலியாவில் 10 பள்ளி மாணவர்களில் ஒருவர் பள்ளி பருவத் தேர்வில் தோல்வி அடைவது சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சித்தியடைந்த மாணவர்களை சித்தியடையச் செய்வதற்கு ஆசிரியர்கள் பெரும் முயற்சிகளை...

இலங்கை கைதிகள் பலரை விடுவிக்க தயாராக உள்ள ஐக்கிய அரபு அமீரக அரசு

சிறைகளில் உள்ள 44 இலங்கையர்களை விடுதலை செய்ய ஐக்கிய அரபு இராச்சியம் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அது நிறைவேற்று ஆணையின் மூலம் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காரணமாகும். அவர்கள் வெவ்வேறு சிறைகளில்...

ஆஸ்திரேலியாவில் தகுதிகள் இருந்தபோதிலும் குறைந்த ஊதியத்திற்கு வேலை செய்யும் புலம்பெயர்ந்தோர்

அவுஸ்திரேலியாவில் வாழும் புலம்பெயர்ந்தோர் உயர் தகுதி வாய்ந்தவர்களாக இருந்தாலும் குறைந்த சம்பளத்தில் வேலை செய்கிறார்கள் என்பது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் அறிக்கைகள், நாட்டில் திறமையான...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகள் எவை தெரியுமா?

ஆஸ்திரேலியர்கள் அதிக பணம் செலவழிக்கும் பகுதிகளை கண்டறிந்துள்ளனர். அதன்படி, பெரும் லாபம் ஈட்டுவதற்காக சூப்பர் மார்க்கெட்டுகள், எரிசக்தி வழங்குநர்கள் மற்றும் விமான நிறுவனங்கள் அதிக செலவுகளை மக்களுக்கு...

4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது பெங்களூரு – IPL 2024

IPL தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற பெங்களூரு அணியின்...