Newsஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

ஆஸ்திரேலியாவில் தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் கொடுக்கும் இலங்கை கோடீஸ்வரர்கள்!

-

ஆஸ்திரேலியாவில் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலவுக்கு சிட்னி நீதிமன்றத்தினால் 150,000 டொலர் பிணைத்தொகை விதிக்கப்பட்டது.

அந்த பிணைத்தொகையை, மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த செல்வந்த பெண் ஒருவரால் வைப்பு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பிணையைப் பெறுவதற்குத் தேவையான முழுத் தொகையையும் நீதிமன்றத்தில் வைப்பிலிடுவதற்கு அவர் நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அவருக்கும் தனுஷ்க குணதிலக்கவுக்கும் இடையிலான உறவு இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

இதேவேளை, ஆஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் குழுவொன்று தனுஷ்க குணதிலவுக்கு அடைக்கலம் வழங்க முன்வந்துள்ளது.

அவர் தற்போது இரண்டாவது முறையாக ஜாமீன் பெறுவதற்காக ஆஸ்திரேலிய முகவரி வழங்கப்பட்ட இலங்கை பணக்கார குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் சிட்னியில் வசிக்கும் இலங்கையின் செல்வந்த குடும்பங்கள் பல அவரது செலவுகளை ஈடுகட்டவும், தங்குமிட வசதிகளை வழங்கவும் முன்வந்துள்ளதுடன், சிட்னி நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது தவிர மெல்பேர்னில் வசிக்கும் இலங்கையர்கள் குழுவொன்றும் தனுஷ்கவின் செலவுகளுக்கு பணத்தை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலிய பெண்ணொருவரை பாலியல் வன்கொடுமை செய்தமை உள்ளிட்ட நான்கு குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்ட தனுஷ்க குணதிலக்கவின் வழக்கின் அடுத்த அழைப்பாணை எதிர்வரும் ஜனவரி மாதம் 12ஆம் திகதி வழங்கப்படவுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...