Breaking Newsஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை - தொடரும் நெருக்கடி

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை – தொடரும் நெருக்கடி

-

ஆஸ்திரேலியாவில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நீக்குவதற்கு நீண்ட காலம் எடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

2022/23 ஆம் ஆண்டிற்கான குடியேற்ற ஒதுக்கீட்டை 195,000 ஆக உயர்த்திய போதிலும், திறமையான விசாவின் கீழ் ஆஸ்திரேலியாவிற்கு வருவதற்கு வெளிநாட்டினர் விண்ணப்பிப்பதில் பற்றாக்குறை இருப்பதாக சமீபத்திய கருத்துக் கணிப்பு வெளிப்படுத்தியுள்ளது.

எவ்வாறாயினும், நாட்டிற்கு செல்வதற்காக பெறப்படும் மாணவர் வீசா மற்றும் சுற்றுலா விசா விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

விருந்தோம்பல் – தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் தொழிலாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவினாலும், உரிய தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கிடைக்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.

அதன்படி, மத்திய அரசு எதிர்பார்த்தபடி பணியாளர் பற்றாக்குறைக்கு முடிவு கட்டுவது அடுத்த ஆண்டில் நடக்காது என கணிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...