Newsஅபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

அபராதத் தொகையை திருப்பிக் கொடுக்கும் நியூ சவுத் வேல்ஸ்!

-

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் (New South Wales) மாநிலத்தில் கொரோனா பரவலின் போது விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதங்கள் விதிக்கப்பட்டன.

அவ்வாறு விதிக்கப்பட்ட 33,000க்கும் அதிகமான அபராதங்கள் ரத்து செய்யப்படும் அல்லது அபராதத் தொகை திருப்பித் தரப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட ஆதரவுக் குழுவொன்று தொடுத்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது சில அபராதங்கள் செல்லாது என்று அரசாங்க வழக்கறிஞர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதையடுத்து அவற்றைத் திருப்பிக்கொடுக்க அல்லது ரத்து செய்ய முடிவெடுக்கப்பட்டது. கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பில் மொத்தம் 60,000 அபராதங்கள் விதிக்கப்பட்டன.

பொதுச் சுகாதார உத்தரவுகளை மீறியவர்களுக்கு 670 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் விதிக்கப்பட்டவர்கள் பலர் அது செல்லுபடியாகுமா என்று கேள்வி எழுப்பினர்.

தண்டனை அறிவிப்பில் குற்றத்தைப் பற்றி போதுமான அளவு விவரிக்கவில்லை என்றும் அது சட்டப்படி குற்றம் சுமத்துவதற்கான விதிகளைப் பூர்த்தி செய்யவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

மாநில உச்ச நீதிமன்றமும் அந்தக் கருத்தை ஒப்புக்கொண்டது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளை விதித்த நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest news

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...

போப் லியோவின் பதவியேற்பு விழாவிற்காக ரோம் செல்கிறார் பிரதமர்

போப் லியோ XIV இன் பதவியேற்பு திருப்பலியில் கலந்து கொள்ளவும், வெளிநாட்டுத் தலைவர்களைச் சந்திக்கவும் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் ரோம் செல்கிறார். ஞாயிற்றுக்கிழமை போப்பின் முறையான பதவியேற்பு...

IPL 2025 தொடர் மே 17 தொடங்கும் – BCCI அறிவிப்பு

ஒத்திவைக்கப்பட்ட IPL தொடர் மே 17-ஆம் திகதி முதல் தொடங்கும் என்று BCCI நேற்று (மே 12) அறிவித்துள்ளது. இறுதிப்போட்டி ஜூன் 3-ஆம் திகதி நடைபெறும்...

அமெரிக்காவும் சீனாவும் வரி குறைப்புக்கு ஒப்புக்கொண்டன!

அமெரிக்காவும் சீனாவும் 90 நாள் கட்டண இடைவெளிக்கு ஒப்புக்கொண்டுள்ளன. இரு தரப்பினரும் விதிக்கும் கட்டணங்களைக் குறைத்துள்ளன. சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளை 145% லிருந்து 30% ஆகவும்,...