Articleகொரோனா பாதிப்பு ஏற்பட்டோருக்கு அதிகரிக்கும் ஞாபகமறதி - ஆய்வில் வெளிவந்த தகவல்!

கொரோனா பாதிப்பு ஏற்பட்டோருக்கு அதிகரிக்கும் ஞாபகமறதி – ஆய்வில் வெளிவந்த தகவல்!

-

கொரோனா வைரஸ் சுவாச மண்டலங்களை வெகுவாகப் பாதித்தது என்பது பரவலாகவே அறியப்பட்ட தகவல்தான் ஆனால், அது மனிதனின் அறிவாற்றல் செயற்பாட்டையும் பாதித்துள்ளது என்பது பலரும் அறியாத தகவலாகவே உள்ளது.

கொரோனா பாதித்த பலருக்கும் மூளையின் செயற்பாட்டில் ஒரு மந்தம் அல்லது சுணக்க நிலை இருப்பது தொடர்ந்து பதிவாகி வருகிறது. அதாவது, ஒரு தகவலை நினைவில் வைப்பது, ஒரு செயற்பாட்டில் கவனம் செலுத்துவது, தினந்தோறும் செய்யும் வேலைகளை நினைவூட்டுதல் போன்றவற்றில் சிக்கல்கள் இருந்தது பல தரப்பிலிருந்தும் கூறப்பட்டு வருகிறது

நீண்ட அல்லது கடுமையாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்ன் ஃபோக் எனப்படும் மூளை மந்த நிலை காணப்படுகிறது. ஒரு சிலருக்கு மாதக்கணக்கிலும் சிலருக்கு வருடக் கணக்கிலும் இந்த பாதிப்பு உள்ளது.

அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனா வைரஸ் மூளையின் அறிவாற்றல் செயற்பாட்டை பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதுவும் 25 மற்றும் அதற்கும் மேற்பட்ட வயதினருக்குத்தான் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதே ஆய்வில், காலப்போக்கில் நிச்சயம் இந்த குறைபாடு சரிசெய்யப்படும் என்றாலும், அறிவாற்றல் செயல்பாட்டில் முழுமையாக இந்த பாதிப்பு மேம்படுமா? என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.

குறுகிய கால நினைவாற்றல் எனப்படும் செயற்பாட்டுத் திறனானது, அவ்வப்போது நடக்கும் செயற்பாடுகளை நினைவில் வைத்துக் கொள்வது, ஒரு பிரச்சினை வரும் போது அதனை எவ்வாறு சரி செய்வது என்ற யோசனையை தருவது, படிப்பது, பேசுவது அல்லது விவாதம் செய்யும் போது உடனுக்குடன் செயற்படுவது போன்றவற்றை உள்ளடக்கியது.

எனவே பலவீனமான நினைவாற்றல் செயற்பாடு ஒரு நபரின் அன்றாட வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும்.

ஒரே நேரத்தில் பல வேலைகளைச் செய்யும் திறன் படைத்தவர்கள் கூட, நீண்ட அல்லது தீவிர கொரோனா பாதிப்புக்குப் பிறகு அந்த திறனை இழந்துவிட்டதாகவே உணர்கிறார்கள் என்று ஆய்வு கூறுகிறது.

பல்வேறு வகையில் மனிதர்களை பரிசோதித்து, அவர்களுக்கு ஏற்பட்ட மாற்றங்கள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்பட்டு, இந்த ஆய்வு மேறகொள்ளப்பட்டுள்ளது. கொரோனாவுக்குப் பிறகு ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகள், பொதுவான கேள்வி பதில்கள் என இதில் பல சோதனைகள் அடங்கியிருந்தன. இதில் 5,400 பேர் பங்கேற்றனர்.

பிரிட்டனில், ஹல் பல்கலைக்கழகம், யோர்க் ஹல் பல்கலைக்கழகம் இணைந்து இந்த ஆய்வினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

எலிகளைக் கொல்லப் பயன்படுத்தப்படும் ஒரு விஷப் பொருளைத் தடை செய்யக் கோரிக்கை

ஆஸ்திரேலியாவில் உள்ள பல பல்பொருள் அங்காடிகளில் விற்கப்படும் ஒரு கொடிய நச்சுப் பொருளைத் தடை செய்யுமாறு நிபுணர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர். Second-generation anticoagulant rodenticides (SGARs)...

ஆஸ்திரேலியாவில் உருவாகியுள்ள ஒரு புதிய சுற்றுச்சூழல் பிரச்சனை

ஆஸ்திரேலிய பூங்கா ஒன்றில் அகழ்வாராய்ச்சியின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு நிழல் துணி , ஒரு கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினையை வெளிப்படுத்தியுள்ளது. ஒரு பெண் தனது தோட்டத்தில் தோண்டும்போது...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...

NSW-வில் ஒவ்வொரு நாளும் $24 மில்லியன் இழக்கும் சூதாட்டக்காரர்கள்

NSW-ல் சூதாட்டக்காரர்கள் ஒவ்வொரு நாளும் Poker இயந்திரங்களால் 24 மில்லியன் டாலர்களை இழக்கிறார்கள் என்று Poker சூதாட்டக் கருவிகள் மீதான விதிமுறைகளை வலுப்படுத்தும் ஒரு தொண்டு...

அடமான வைத்திருப்பவர்கள் திருப்பிச் செலுத்தும் கட்டணங்களை சரிபார்க்குமாறு வேண்டுகோள்

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகள் மில்லியன் கணக்கான வீட்டு உரிமையாளர்களிடம் தங்கள் கடன் திருப்பிச் செலுத்துதல்களைச் சரிபார்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன. ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதக் குறைப்புகளுக்கு ஏற்ப...