Breaking Newsஆண்டின் கடைசி தேசிய அமைச்சரவை கூட்டம் இன்று - முக்கிய முடிவுகள்...

ஆண்டின் கடைசி தேசிய அமைச்சரவை கூட்டம் இன்று – முக்கிய முடிவுகள் எடுக்க தீர்மானம்!

-

இந்த ஆண்டின் கடைசி தேசிய அமைச்சரவை கூட்டம் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தலைமையில் இன்று நடைபெறவுள்ளது.

இதற்குக் காரணம், எரிசக்திக் கட்டணத்தைக் குறைப்பதற்கான பிரேரணை சமர்ப்பிக்கப்பட உள்ளமையே.

அதற்கு ஒப்புதல் அளித்து, எரிசக்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், சில மாதங்களில் மின் கட்டணம் குறைக்கப்படும் என்பது விமர்சகர்களின் கருத்து.

எனினும், எரிசக்தி நிறுவனங்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்காவிட்டால், நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து பிரதமர்கள் இந்த முன்மொழிவை நிராகரிக்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.

அந்த நிறுவனங்களின் பெரும்பான்மையான பங்குகள் அந்தந்த மாநில அரசுகளுக்குச் சொந்தமானவை என்பதால், பல பில்லியன் டாலர்களை இழப்பீடாகப் பெறுவதே அவர்களின் நோக்கம்.

ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு இதுவரை 20 சதவீதம் மின்சார கட்டணம் அதிகரித்துள்ள நிலையில் அடுத்த ஆண்டு மேலும் 30 சதவீதம் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

அது நடந்தால் இன்னும் 02 வருடங்களில் இந்த நாட்டில் வீடொன்றின் மின்சாரம் மற்றும் எரிவாயுக் கட்டணம் 1300 டொலர்களால் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தடைகளை பொருட்படுத்தாமல், ஒரு சில மாதங்களுக்குள் ஆஸ்திரேலியர்களுக்கான எரிசக்தி கட்டண பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என்று பிரதமர் அல்பானீஸ் உறுதியளிக்கிறார்.

பெப்ரவரி மாதத்திற்குள் கட்டணத்தை குறைப்பதே தமது இலக்கு என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சப்ளையர்களுக்கு பணம் செலுத்தும் தீர்மானத்தில் மத்திய மற்றும் மாநில எரிசக்தி அமைச்சர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

குறைந்த மின்கட்டணம் ஏற்படும் பட்சத்தில், உற்பத்தி செலவுக்கு கூடுதல் தொகை வழங்க வேண்டும்.

இதன் கீழ் 10 பில்லியன் டொலர் நிதியொன்று நிறுவப்படும் என மத்திய எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

எரிசக்தி அமைச்சர்கள் எடுக்கும் தீர்மானங்களுக்கு இன்று ஒப்புதல் வழங்கப்படவுள்ளது.

Latest news

பீட்டர் டட்டன் வீசிய பந்தால் காயமடைந்த கேமராமேன்

எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் வீசிய கால்பந்து தலையில் அடிபட்டு தொலைக்காட்சி கேமராமேன் ஒருவர் காயமடைந்துள்ளார். டார்வினில் ஒரு புகைப்படப் படப்பிடிப்பிற்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்த டட்டன்,...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

NSW-வில் உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட வீடு ஏலத்தில்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lismore உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் குழுவால் கட்டப்பட்ட முதல் சிறிய வீடு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் குறித்த வீடானது...

விக்டோரியா வீடுகளில் கழிவுகளை அகற்றும் முறையில் ஏற்படவுள்ள மாற்றம்

விக்டோரியாவில் வீட்டுக் கழிவு மறுசுழற்சி சேவைகளில் மாற்றங்களைச் செய்ய அரசாங்கம் தயாராகி வருகிறது. அதன்படி, விக்டோரியாவில் உள்ள அனைத்து கவுன்சில்களும் ஜூலை 2027 க்குள் Four-bin மறுசுழற்சி...

Super Funds- இலிருந்து திருடப்பட்ட லட்சக்கணக்கான டாலர்கள்

ஆஸ்திரேலியாவில் பல Super Funds மீதான சைபர் தாக்குதலில் லட்சக்கணக்கான டாலர்கள் திருடப்பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. இன்று, ஆஸ்திரேலிய நிதி நிறுவனங்களான சூப்பர், ரெஸ்ட் மற்றும்...

Facebook Marketplace-இல் கள்ளநோட்டு வர்த்தகம் செய்த விக்டோரிய நபர்

விக்டோரியா காவல்துறையினர் $10,000க்கும் அதிகமான மதிப்புள்ள போலி நாணயங்களை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளனர். அந்தப் பணத்தைப் பயன்படுத்தி அவர் Facebook Marketplace மூலம் Pokemon அட்டைகள்...