Cinemaபிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார் - திரையுலகினர் பலர்...

பிரபல நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி காலமானார் – திரையுலகினர் பலர் இரங்கல்.

-

தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் சிவ நாராயணமூர்த்தி (67) திடீர் உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 7ம் திகதி காலமானார்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த பொன்னவராயன் கோட்டையைச் சேர்ந்தவர் சிவ நாராயணமூர்த்தி. இவர் மறைந்த நடிகரும், இயக்குநருமான விசு மூலம் தமிழ் திரையுலகில் இவர் நடிகராக பூந்தோட்டம் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டார்.

தமிழ் திரையுலக நகைச்சுவை நடிகர்களான விவேக், வடிவேல் கூட்டணியில் பல நகைச்சுவை காட்சிகளில் நடித்து நகைச்சுவை நடிகனாக அறியபட்டவர்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், அஜித், விஜய் உள்பட பல நடிகர்களுடன் 200இற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நேற்றிரவு 8.30 மணியளவில் திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பொன்னவராயன் கோட்டையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் 2 மணியளவில் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிவ நாராயணன் காலமானதை அடுத்து திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

நன்றி தமிழன்

Latest news

வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் தன்னார்வல வாகனங்கள்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு நூற்றுக்கணக்கான வைக்கோல் மூட்டைகள் லாரிகளில் கொண்டு செல்லப்பட்டு, மாநிலத்தின் வடக்கு-மத்திய பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு இதுவரை இல்லாத...

நாய் தாக்குதல்களைத் தடுக்க ஆஸ்திரேலிய அஞ்சல் ஊழியர்களுக்கு கிடைத்துள்ள புதிய சாதனம்

ஆஸ்திரேலியாவில் தபால் ஊழியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளதால், பணியில் இருக்கும்போது நாய் தாக்குதல்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, தபால் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக citronella மற்றும்...

வெள்ளத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முழுவதும் பரவும் மற்றுமொரு நோய்

வெள்ளத்தைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா முழுவதும் மலேரியா வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். பதிவான தொற்றுநோய்களின் எண்ணிக்கை இப்போது 71 ஆக உயர்ந்துள்ளதாகவும், அது ஆஸ்திரேலிய...

200 ஆண்டுகள் பழமையான ஆணுறையை காட்சிப்படுத்த ஒரு சிறப்பு கண்காட்சி

நெதர்லாந்தின் Amsterdam நகரில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை சிறப்பு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு செம்மறி ஆடுகளின் பிற்சேர்க்கையிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் ஒரு கன்னியாஸ்திரி...

200 ஆண்டுகள் பழமையான ஆணுறையை காட்சிப்படுத்த ஒரு சிறப்பு கண்காட்சி

நெதர்லாந்தின் Amsterdam நகரில் 200 ஆண்டுகள் பழமையான ஆணுறை சிறப்பு கண்காட்சியாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு செம்மறி ஆடுகளின் பிற்சேர்க்கையிலிருந்து உருவாக்கப்பட்டது என்றும் ஒரு கன்னியாஸ்திரி...

ஈராக் சிறையில் இருந்து ஆஸ்திரேலிய பொறியாளர் விடுதலை

ஈராக்கில் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்த ஆஸ்திரேலிய பொறியாளர் Robert Pether ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். Robert Pether Baghdad-இல் ஈராக் மத்திய வங்கியை வடிவமைத்துக்கொண்டிருந்தபோது, ​​அவரது...