Newsகுரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து!

குரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு ஆபத்து!

-

குரங்கம்மையால் உலக அளவில் பொதுச் சுகாதாரத்திற்கு மிதமான அளவு ஆபத்து உள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் அது மனிதர்களுக்கிடையே அதிகம் பரவக்கூடிய கிருமியாக உருமாறி, கடுமையாக நோய்வாய்ப்படக்கூடியோரைத் தாக்கினால் பொதுச் சுகாதார அபாயம் அதிகரிக்கலாம் என்று அது கூறியது.

இதுவரை குரங்கம்மை நிரந்தர நோயாகக் கருதப்படாத 23 நாடுகளில் 257 சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அது நிரந்தர நோயாகக் கருதப்படாத நாடுகளில் திடீரென ஒரே சமயத்தில் குரங்கம்மைச் சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

அதற்குக் காரணம் அது சில காலமாகவே கண்டறியப்படாமல் பரவிக்கொண்டு இருந்திருக்கலாம் என்றும் அண்மையில் நடந்த நிகழ்வுகளில் அதன் பரவல் அதிகரித்திருக்கலாம் என்றும் நிறுவனம் கூறியது.

குரங்கம்மைச் சம்பவங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இதுவரை பெரும்பாலான சம்பவங்கள் பிரிட்டன், ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளில் உறுதிசெய்யப்பட்டுள்ளன.

Latest news

மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான வழியை வெளிப்படுத்தும் நுகர்வோர் ஆணையம்

கூடுதல் பணத்தை மிச்சப்படுத்த ஆஸ்திரேலியர்கள் எரிசக்தி சப்ளையர்களை மாற்றுமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். தேசியத் தலைவர் டேவிட் லிட்டில்பிரவுட், எரிசக்தி விலைகள் குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், எரிசக்தி...

விக்டோரியாவில் அதிகரித்து வரும் கத்திக்குத்து சம்பவங்கள்

விக்டோரியாவில் 2025 டிசம்பர் பிற்பகுதியிலிருந்து தொடர்ச்சியான கத்திக்குத்து சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆறு நாட்களுக்கு முன்பு ஃபிட்ஸ்ராய் மற்றும் கிளைடில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் இறந்ததைத்...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

ஆயிரக்கணக்கான சட்டவிரோத மின்சார வாகனங்களுக்கு அபராதம் விதிப்பு

குயின்ஸ்லாந்து முழுவதும் சட்டவிரோத மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் பயன்பாட்டை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட நடவடிக்கையில் 2000க்கும் மேற்பட்டோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நவம்பர் முதல் டிசம்பர் 23 வரை,...

குயின்ஸ்லாந்தில் 200மிமீக்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

நூற்றுக்கணக்கான மில்லிமீட்டர் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், குயின்ஸ்லாந்து மக்கள் திடீர் வெள்ளத்திற்கு தயாராக இருக்குமாறு எச்சரிக்கப்படுகிறார்கள். Carpentaria வளைகுடாவிலிருந்து கிழக்கு கடற்கரை வரை மாநிலத்தின் முழு...

மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதி விபத்து

சிட்னி வடக்கின் Rydeல் உள்ள ஒரு மருத்துவ மையத்தின் மீது பேருந்து மோதியதில் ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காலை 9...