Sportsபுதிய சாதனை படைத்த மெஸ்ஸி - FIFA உலகக்கிண்ணம்

புதிய சாதனை படைத்த மெஸ்ஸி – FIFA உலகக்கிண்ணம்

-

உலக்கிண்ண உதைபந்து போட்டி கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று அதிகாலை நடைபெற்ற அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகளுக்கிடையிலான போட்டியில் அர்ஜென்டினா அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிச்சுற்றிற்கு தகுதி பெற்றது.

இதனையடுத்து 7 ஆவது முறையாக அர்ஜென்டினா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

அர்ஜெண்டினா அணியின் தலைவரும் நட்சத்திர வீரருமான மெஸ்ஸி இந்த போட்டியில் கடைசியில் அடித்த கோல் மூலம் அணியை இறுதிச்சுற்றுக்கு கொண்டு சென்றதோடு அர்ஜெண்டினா அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

அந்த வகையில், மெஸ்ஸி 11 கோல்கள் அடித்துள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ணத்தில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் அடித்த கேப்ரியல் பாடிஸ்டுடாவை லியோனல் மெஸ்ஸி முந்தியுள்ளார்.

இந்நிலையில் இன்று பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகளுக்கிடையிலான அரையிறுதி போட்டி நடைபெற உள்ள நிலையில், எதிர்வரும், 18 ஆம் திகதி இறுதி போட்டி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி தமிழன்

Latest news

கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் பக்கவிளைவு பற்றி மருத்துவ நிபுணர்களின் விசேட அறிவிப்பு

கொரோனா தடுப்பூசியால் பக்கவிளைவு ஏற்படும் என்ற தகவல் பரவியுள்ள நிலையில், பிரபல மருத்துவ நிபுணர்கள் இது பற்றி பயப்படத் தேவையில்லையெனக் கூறியுள்ளனர். பிரிட்டனைச் சேர்ந்த, 'AstraZeneca' நிறுவனம்...

அடிக்கடி கோபப்படுபவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் அபாயம் அதிகம்

அடிக்கடி கோபம் கொள்வது மாரடைப்பு அபாயத்தை அதிகரிப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 280 ஆரோக்கியமான இளைஞர்களின் பங்கேற்புடன் American Heart Association-ன் ஆய்வுக் குழுவினால் இந்த ஆய்வு...

குழந்தைகள் மத்தியில் பரவும் மின்னணு சிகரெட் – கட்டுப்படுத்த அரசு முடிவு

விக்டோரியா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இலத்திரனியல் சிகரெட்டுகள் வேகமாகப் பரவுவதைக் கட்டுப்படுத்த பாடசாலை மட்டத்தில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து...

குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து பெரும் நிவாரணம்

குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் தங்கள் ஆற்றல் கட்டணத்தில் $1000 தள்ளுபடி பெற உள்ளனர். குயின்ஸ்லாந்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விரிவான...

ஒரு ஓட்டத்தால் வென்றது ஐதராபாத் அணி – IPL 2024

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச ஸ்டேடியத்தில் இடம்பெற்ற 50-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ்- ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. இதில்...

குயின்ஸ்லாந்தில் வசிப்பவர்களுக்கு மின்சார கட்டணத்தில் இருந்து பெரும் நிவாரணம்

குயின்ஸ்லாந்தில் உள்ளவர்கள் புதிய திட்டத்தின் கீழ் தங்கள் ஆற்றல் கட்டணத்தில் $1000 தள்ளுபடி பெற உள்ளனர். குயின்ஸ்லாந்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் மாநில அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட விரிவான...