SportsIPL மினி ஏலம் இன்று ஆரம்பமானது!

IPL மினி ஏலம் இன்று ஆரம்பமானது!

-

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் இன்று பிற்பகல் 2.30 மணியளவில் ஆரம்பமானது.

ஏலப்பட்டியலில் 132 வெளிநாட்டு வீரர்கள் உட்பட மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன், சேம் கர்ரன் மற்றும் நிகோலஸ் பூரன், ஹெரி புரூக், மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், தமிழக வீரர் ஜெகதீசன் உள்ளிட்ட வீரர்களுக்கு அதிக வாய்ப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு அணி நிர்வாகத்தில் அதிகபட்சமாக 25 வீரர்களை தேர்வு செய்யமுடியும். அதன்படி அணி நிர்வாகங்கள் தக்கவைத்துக் கொண்ட வீரர்களை தவிர்த்து மேலும் 87 வீரர்களை மாத்திரம் தான் அணிகள் தேர்வு செய்ய முடியும், அதில் 30 பேர் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

இந்த ஏலத்தில் 10 அணிகளின் கைவசமுள்ள தொகை எவ்வளவு என்பது குறித்த விவரம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ.20.45 கோடி (இந்திய ரூபா)

சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ரூ.42.25 கோடி (இந்திய ரூபா)

பஞ்சாப் கிங்ஸ் – ரூ.32.2 கோடி (இந்திய ரூபா)

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – ரூ.23.35 கோடி (இந்திய ரூபா)

மும்பை இந்தியன்ஸ் – ரூ .20.55 கோடி (இந்திய ரூபா)

டெல்லி கேபிட்டல்ஸ் – ரூ .19.45 கோடி (இந்திய ரூபா)

குஜராத் டைட்டன்ஸ் – ரூ.19.25 கோடி (இந்திய ரூபா)

ராஜஸ்தான் ரோயல்ஸ் – ரூ .13.2 கோடி (இந்திய ரூபா)

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ .8.75 கோடி (இந்திய ரூபா)

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – ரூ .7.05 கோடி (இந்திய ரூபா)

நன்றி தமிழன்

Latest news

முர்ரே ஆற்றில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள்

நியூ சவுத் வேல்ஸ்/விக்டோரியன் எல்லையில் உள்ள மில்டுரா அருகே முர்ரே நதிக்கு அப்பால் உள்ள புதர் நிலத்தில் மனித மண்டை ஓட்டின் பகுதி எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திங்கட்கிழமை...

பயணிகளுக்கு சிறப்பு தள்ளுபடியை வழங்கும் இரண்டு ஆஸ்திரேலிய விமான நிறுவனங்கள்

ஆஸ்திரேலியாவின் இரண்டு முக்கிய விமான நிறுவனங்களான Qantas மற்றும் Jetstar, இந்த ஆண்டு சிறப்பு தள்ளுபடிகளை வழங்கத் தொடங்கியுள்ளன. அதன்படி, உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு இந்த...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு கிடைக்கவுள்ள பணப் பலன்கள்

அரசாங்க விசாரணையைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய வங்கிகள் 93 மில்லியன் டாலர்களை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பெரிய அளவிலான...

காஸாவில் இதுவரை 60,000 பேர் பலி – ஆயிரக்கணக்கானோர் மாயம்

காஸா பகுதியில் இஸ்ரேலின் இராணுவத் தாக்குதலில் ஒக்டோபர் 7, 2023 முதல் இன்றுவரை குறைந்தது 60,000 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, என்கிளேவின் சுகாதார அமைச்சரகம் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு...

தன் மகன்களை வேற்றுகிரகவாசிகள் என நினைத்து கொல்ல முயன்ற தாய்

தனது இரண்டு மகன்களைக் குத்திக் கொல்ல முயன்ற தாய்க்கு 15 ஆண்டுகள் மனநலக் கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடிலெய்டில் வசித்து வந்த ஒரு பெண், தனது இரண்டு மகன்களையும்...

வேப் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளதா?

வேப்பிங் தடை இளைஞர்களிடையே புகைபிடிப்பதை அதிகரித்துள்ளது என்பதைக் குறிக்கும் ஆராய்ச்சியை மத்திய அரசு நிராகரித்துள்ளது. ஜூலை 2024 இல் தொடங்கிய வேப் விற்பனையின் படிப்படியான தடைக்குப் பிறகு...