கோவிட் அபாயத்தின் அதிகரிப்புடன், சீனாவிலிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஆஸ்திரேலியா புதிய நிபந்தனையை புதுப்பித்துள்ளது.
அதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு விமானத்தில் ஏறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பெறப்பட்ட கோவிட் பரிசோதனை அறிக்கையை சமர்பிப்பது கட்டாயமாக்கப்படும்.
இந்த புதிய விதி வரும் வியாழக்கிழமை (ஜனவரி 05) முதல் அமலுக்கு வருவதாக சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கோவிட்-பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த விதி அமெரிக்கா உட்பட பல நாடுகளாலும் புதுப்பிக்கப்பட்டது.
இது சீன சுற்றுலாப் பயணிகளுக்கு மறுப்பு அல்ல என்றும் சுகாதாரப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவே என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.