Sportsரிஷப் பண்ட்டுக்கு பதில் இனி இந்திய அணியின் அடுத்த விக்கெட் காப்பாளர்...

ரிஷப் பண்ட்டுக்கு பதில் இனி இந்திய அணியின் அடுத்த விக்கெட் காப்பாளர் யார்?

-

இந்தியா வரும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான  4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் அடுத்த பெப்ரவரி மாதம் தொடங்கவுள்ளது.

இந்தியா- அவுஸ்திரேலியா இடையே முதலாவது டெஸ்ட் போட்டி பெப்ரவரி 9 ஆம் திகதி நாக்பூரில் தொடங்குகிறது. இந்நிலையில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேல் சிகிச்சைகாக டேராடூனில் உள்ள மருத்துவமனையில் இருந்து டெல்லி அல்லது மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு விரைவில் பண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரிஷப் பண்டுக்கு நீண்ட கால சிகிச்சை தேவைப்படுவதாக அவரது பயிற்சியாளர் தேவேந்திர சர்மா கூறியுள்ளார். காயத்தில் இருந்து பண்ட் முழுமையாக குணமடைய குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து அவுஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு புதிய விக்கெட் காப்பாளரை தேர்வு செய்வது குறித்து தேர்வு குழு ஆலோசித்து வருகிறது. இரண்டு புதிய விக்கெட் காப்பாளர்கள் அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது. ரிஷப் இடத்திற்கு இஷான் கிஷன், கே.எஸ்.பரத், இந்தியா ஏ அணியை சேர்ந்த உபேந்திர யாதவ் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில், இஷான் கிஷன் மற்றும் கே.எஸ்.பரத்துக்கு அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி தமிழன்

Latest news

இணையத்தைப் பயன்படுத்தும் குழந்தைகள் குறித்து காவல்துறை சிறப்பு அறிக்கை

ஆன்லைன் பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் காவல்துறை 15 பேரை கைது செய்துள்ளது. நியூ சவுத் வேல்ஸ் காவல்துறையினரால் நடத்தப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கையின்...

2026 ஆம் ஆண்டிலிருந்து விக்டோரியர்களுக்கு எளிதாகும் பொதுப் போக்குவரத்து

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விக்டோரியாவில் உள்ள அனைத்து streaming ஊடகங்களிலும் tap and go தொழில்நுட்பத்தை செயல்படுத்தப்போவதாக அரசாங்கம் கூறுகிறது. அதன்படி, ரயில் மற்றும் பேருந்து...

240 மில்லியன் டாலர் அபராதம் செலுத்தவுள்ள ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வங்கி

ஆஸ்திரேலியாவின் முக்கிய வங்கிகளில் ஒன்றான ANZ வங்கி, பல வருட மோசடிக்காக விதிக்கப்பட்ட $240 மில்லியன் அபராதத்தை செலுத்த ஒப்புக்கொண்டுள்ளது. நான்கு தனித்தனி நடவடிக்கைகள் தொடர்பாக ANZ...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...

மெல்பேர்ணில் மணிக்கு 225km வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்

நேற்று காலை மெல்பேர்ணில் மணிக்கு 225 கிலோமீட்டர் வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் உரிமத்தை போலீசார் பறிமுதல்...

ஆஸ்திரேலியா முழுவதும் பாலியல் ரீதியாக பரவும் நோய்கள் பற்றி எச்சரிக்கை

சமீபத்திய தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியாவில் syphilis மற்றும் gonorrhea நோயாளிகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. NSW பல்கலைக்கழகத்தில் உள்ள கிர்பி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி,...