Breaking Newsஆண்டின் முதல் 3 நாட்களில் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 130 பேர் பலி!

ஆண்டின் முதல் 3 நாட்களில் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 130 பேர் பலி!

-

அமெரிக்காவில் சமீப ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்காத நாளே கிடையாது என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ‘மாஸ் சூட்டிங்’ என்று அழைக்கப்படும் அதிக உயிர்பலிகளை ஏற்படுத்துகிற துப்பாக்கிச்சூடு சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில் இந்த ஆண்டு தொடங்கிய முதல் 3 நாட்களில் மாத்திரம் அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கண்காணிக்கும் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, 2 குழந்தைகள் மற்றும் 11 சிறுவர்கள் உள்பட 131 பேர் துப்பாக்கியால் தற்செயலாக அல்லது வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் 3 குழந்தைகள் மற்றும் 34 சிறுவர்கள் உள்பட 313 பேர் காயமடைந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஏற்படும் வானிலை மாற்றங்கள்

வரும் நாட்களில் அடிலெய்டு, சிட்னி, மெல்போர்ன் மற்றும் ஹோபார்ட் பகுதிகளுக்கு வெப்பமான வானிலை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் அடிலெய்டைச் சுற்றியுள்ள வெப்பநிலை 30 டிகிரி...

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் மேலும் அதிகரிக்கும் நீரில் மூழ்கி இறக்கும் போக்கு

ஈஸ்டர் விடுமுறை நாட்களில் ஆஸ்திரேலியாவில் ஐந்தாவது நீரில் மூழ்கி மரணம் பதிவாகியுள்ளது. நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில் கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் இன்று அடித்துச்...

Werribee-இல் பிறந்த சிங்கக் குட்டிக்கு ஏற்பட்ட சோகம்

விக்டோரியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையில் பிறந்த சிங்கக் குட்டி இறந்ததாக கூறப்படுகிறது. 'பிரீசியஸ்' என்று பெயரிடப்பட்ட இந்த குட்டியின் இறப்புக்குக் காரணம், பெண் சிங்கம் எதிர்பாராத விதமாக...

வேட்டையாட சென்ற இடத்தில் விபரிதம் – தந்தையை சுட்ட மகன்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய டேபிள்லேண்ட்ஸில் வேட்டையாடச் சென்றிருந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். 70 வயதான தந்தையும் 47 வயது மகனும் இன்று காலை வேட்டையாடிக் கொண்டிருந்ததாக...

ஆஸ்திரேலியாவில் நிதி மோசடியால் அதிகம் பாதிக்கப்படுவது ஆண்களா? பெண்களா?

ஆஸ்திரேலியர்களில் 10 பேரில் ஒருவர் அட்டை மோசடியை அனுபவித்துள்ளதாக சமீபத்திய தரவு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 2023-24 நிதியாண்டிற்கான ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. கிரெடிட்...

மெல்பேர்ணில் காணாமல் போன குழந்தை

விக்டோரியாவில் உள்ள டான்டெனாங் மலைத்தொடரில் விளையாடிக் கொண்டிருந்தபோது காணாமல் போன ஒரு குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணியளவில் மெல்போர்னில் உள்ள ஒலிண்டா பிளேஸ்பேஸில் விளையாடிக்...