Breaking Newsஆண்டின் முதல் 3 நாட்களில் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 130 பேர் பலி!

ஆண்டின் முதல் 3 நாட்களில் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் 130 பேர் பலி!

-

அமெரிக்காவில் சமீப ஆண்டுகளாகவே துப்பாக்கி கலாசாரம் பெருகி வருகிறது. அங்கு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடக்காத நாளே கிடையாது என்கிற அளவுக்கு நிலைமை மோசமாகி இருக்கிறது.

அதிலும் குறிப்பாக ‘மாஸ் சூட்டிங்’ என்று அழைக்கப்படும் அதிக உயிர்பலிகளை ஏற்படுத்துகிற துப்பாக்கிச்சூடு சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

இந்தநிலையில் இந்த ஆண்டு தொடங்கிய முதல் 3 நாட்களில் மாத்திரம் அமெரிக்கா முழுவதும் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் 130-க்கும் அதிகமானோர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவில் நடக்கும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை கண்காணிக்கும் துப்பாக்கி வன்முறை ஆவணக் காப்பகம் என்கிற அமைப்பு இதனை தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டு தொடங்கியதில் இருந்து, 2 குழந்தைகள் மற்றும் 11 சிறுவர்கள் உள்பட 131 பேர் துப்பாக்கியால் தற்செயலாக அல்லது வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். அதேபோல் 3 குழந்தைகள் மற்றும் 34 சிறுவர்கள் உள்பட 313 பேர் காயமடைந்துள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

NSW இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கத்திகளை விற்க தடை

நியூ சவுத் வேல்ஸில் கத்திகளை விற்பனை செய்வதற்கான வயது வரம்பை நிர்ணயிக்கும் புதிய சட்டத்திற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்திக்குத்து...

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் புதிய வீடுகளின் தேவை 1.2 மில்லியனாக இருக்கும் என ஆய்வு

2029 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் புதிய வீடுகளின் தேவை சுமார் 1.2 மில்லியனாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய வீட்டு வசதி கவுன்சில் சமீபத்தில்...

ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் கருப்பை புற்றுநோயால் இறக்கும் ஒரு ஆஸ்திரேலிய பெண்

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் தென்படும் பெண்கள் உடனடியாக மருத்துவ சேவையை நாட வேண்டும் என சுகாதாரத்துறை பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பை புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை...

வியட்நாமில் உணவு விஷமானதால் 500 பேர் மருத்துவமனையில் அனுமதி

தெற்கு வியட்நாமில் உள்ள ஒரு கடையில் பான் மியை சாப்பிட்ட 500க்கும் மேற்பட்டோர் உணவு விஷமாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஆறு முதல் ஏழு வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் எதிர்காலத்தில் புதிய வீடுகளின் தேவை 1.2 மில்லியனாக இருக்கும் என ஆய்வு

2029 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவின் புதிய வீடுகளின் தேவை சுமார் 1.2 மில்லியனாக இருக்கும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய வீட்டு வசதி கவுன்சில் சமீபத்தில்...

ஒவ்வொரு 8 மணி நேரத்திற்கும் கருப்பை புற்றுநோயால் இறக்கும் ஒரு ஆஸ்திரேலிய பெண்

கருப்பை புற்றுநோயின் அறிகுறிகள் தென்படும் பெண்கள் உடனடியாக மருத்துவ சேவையை நாட வேண்டும் என சுகாதாரத்துறை பெண்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. கருப்பை புற்றுநோய் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைமை...