Newsமுதன்முதலாக விண்வெளிக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் மறைவு!

முதன்முதலாக விண்வெளிக்கு சென்று வந்த அமெரிக்க விண்வெளி வீரர் மறைவு!

-

மனிதகுலத்தின் இன்றுவரை மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுவது நிலவில் மனிதன் இறங்கியது தான். அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ‘அப்பல்லோ’ என்ற திடத்தின் மூலம் இதை சாதித்து காட்டியது. அதற்கு முதல் முயற்சியாக நாசா நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனையை பல முறை நடத்தியது.

அதன்படி 1968-ம் ஆண்டு ஒக்டோபர் 11-ம் திகதி முதல் முறையாக ‘அப்பல்லோ 7’ என்ற விண்கலத்தில் மனிதர்களை வெற்றிகரமாக விண்ணுக்கு அனுப்பியது நாசா. டொன் எப் ஐசெல், வோல்டர் எம். ஷிரா மற்றும் வோல்டர் கன்னிங்ஹாம் ஆகிய 3 விண்வெளி வீரர்கள் ‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் 11 நாட்கள் விண்வெளியை சுற்றி வந்தனர்.

அதோடு அவர்கள் தங்கள் விண்வெளி பயணத்தை தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பவும் செய்தனர். பின்னர் ஒக்டோபர் 22-ந் திகதி அவர்கள் அதே விண்கலத்தில் பத்திரமாக பூமிக்கு திரும்பினர். இதன் மூலம் விண்வெளி சென்று திரும்பிய முதல் அமெரிக்க விண்வெளி வீரர்கள் என்ற பெருமையை அவர்கள் பெற்றனர்.

‘அப்பல்லோ 7’ விண்கலத்தில் விண்வெளி சென்று வந்த விண்வெளி வீரர்களான டொன் எப் ஐசெல், வோல்டர் எம். ஷிரா ஆகிய இருவரும் ஏற்கனவே இறந்துவிட்ட நிலையில், கடைசி நபராக வோல்டர் கன்னிங்ஹாம் மாத்திரம் உயிருடன் இருந்து வந்தார்.

இந்த நிலையில் உடல்நலக்குறைவால் நேற்று அவர் தனது 90 ஆவது வயதில் உயிரிழந்தார். அமெரிக்கக் கடற்படையிலும் சிறப்புப் படையிலும் விமானியாக பணியாற்றிய கன்னிங்ஹாம், ஓய்வு பெறுவதற்கு முன் போர் விமானியாக 54 பயணங்களை மேற்கொண்டுள்ளார். அதன் பிறகு 1963-ம் ஆண்டு அவர் நாசாவின் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நன்றி தமிழன்

Latest news

இன்ஸ்டகிராம் பதிவால் சுட்டுக் கொல்லப்பட்ட அழகி

ஈகுவடாரில் அழகிப்போட்டியில் கலந்துகொண்ட பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. லாண்டி பராகா கோய்புரா என்ற 23 வயது இளம்பெண், 2022யில் மிஸ் ஈகுவடார் போட்டியில் பங்கேற்று...

உக்ரைன் மீது மீண்டும் டிரோன் தாக்குதல் செய்த ரஷ்ய படைகள்

உக்ரைன் மீது ரஷ்யா தொடங்கிய போர் 2 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில பகுதிகளை ரஷ்ய படைகள் கைப்பற்றின. இந்த நிலையில் உக்ரைனின்...

குயின்ஸ்லாந்தில் உயிருடன் புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் பண்ணை ஒன்றில் உயிருடன் புதைக்கப்பட்டதாக கருதப்படும் நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள Mount Mee பகுதியில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில்...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

Cashless முறைக்கு செல்லும் ஆஸ்திரேலியாவின் துரித உணவு நிறுவனம்

ஆஸ்திரேலியாவின் முக்கிய துரித உணவு நிறுவனமான Nandos, அந்த தயாரிப்புகளை பணமில்லா கொடுப்பனவுகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளது. ரொக்கமில்லா பொருட்களாக விற்க முடிவு செய்யப்பட்டுள்ளதால் இணையத்தில் தீவிர...

ஆஸ்திரேலியாவில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை

அவுஸ்திரேலியாவில் வேலை வழங்குவதாக கூறி ஏமாற்றும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன. சமீபத்திய ஸ்கேம்வாட்ச் அறிக்கையின்படி, கடந்த நிதியாண்டில் போலி ஆன்லைன் வேலைகளால் ஆஸ்திரேலியர்கள் $24.7 மில்லியன் இழந்துள்ளனர். வாழ்க்கைச் செலவு...