Businessமிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு 8ம் இடம் - இலங்கை 100வது...

மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டுகளில் ஆஸ்திரேலியாவுக்கு 8ம் இடம் – இலங்கை 100வது இடம்!

-

2023-ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி அவுஸ்திரேலியாவுக்கு 08வது இடம் கிடைத்துள்ளது.

ஆஸ்திரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர் உலகம் முழுவதும் 185 நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்யலாம்.

அவுஸ்திரேலியாவுடன் கனடா, கிரீஸ், மால்டா ஆகிய நாடுகளும் 08ஆவது இடத்தில் உள்ளன.

இந்த ஆண்டும் ஜப்பான் பாஸ்போர்ட் உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டாக மாறியுள்ளது.

ஜப்பானிய குடியுரிமை பெற்ற ஒருவர் 193 நாடுகளுக்கு சுதந்திரமாக செல்லலாம் என்று கூறப்படுகிறது.

சிங்கப்பூர் மற்றும் தென் கொரியா இரண்டாவது இடத்தில் உள்ளன. உலகில் சக்தி வாய்ந்த கடவுச்சீட்டைக் கொண்ட நாடுகளில் இலங்கை 100ஆவது இடத்தில் உள்ளது.

இலங்கை கடவுச்சீட்டைக் கொண்ட ஒருவர் உலகில் உள்ள 42 நாடுகளுக்கு சுதந்திரமாக பயணிக்க முடியும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...