Newsஉலகில் கொரோனா பாதிப்பே இல்லாத ஒரே நாடு.

உலகில் கொரோனா பாதிப்பே இல்லாத ஒரே நாடு.

-

கொரோனா பெருந்தொற்று உலகம் முழுவதும் 3 ஆண்டுகளாக பரவி இலட்சக்கணக்கானோரை பலி கொண்டு உள்ளது. இதில், வல்லரசு நாடுகளும் தப்பவில்லை. 2022-ம் ஆண்டு தொடக்கத்தில் 8 நாடுகளே கொரோனா பாதிப்பு எதுவும் இல்லாத பூஜ்ய பாதிப்பு எண்ணிக்கை கொண்ட நாடுகளாக இருந்தன.

அவற்றில் தெற்கு பசிபிக் சமுத்திர பகுதியில் உள்ள தீவுகளே அடங்கியிருந்தன. ஆனால், அந்த பட்டியலில் தற்போது மீதமிருக்கும் நாடு எது என பார்ப்போம்.

2022-ம் ஆண்டு ஒகஸ்டில் வடகொரியா கொரோனா பாதிப்புக்கு ஆளான தகவலை முதன்முறையாக அறிவித்தது. இதனை தொடர்ந்து, மீதமுள்ள கொரோனா பாதிப்பற்ற ஒரே நாடாக துர்க்மெனிஸ்தான் இன்றளவும் நீடித்து வருகிறது. இது எப்படி சாத்தியம்?

துர்க்மெனிஸ்தான் நாட்டில் கொரோனா பாதிப்புக்கான அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இல்லாதது என்பது பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்பு, அந்நாட்டின் அரசியல் நிலவரம் பற்றியும் புரிந்து கொள்ள வேண்டும்.

மத்திய ஆசிய பகுதியில் அமைந்துள்ள துர்க்மெனிஸ்தான் நாடானது, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் நாடுகளுடன் எல்லைகளை பகிர்ந்து கொண்டுள்ளது. மேற்கே கஸ்பியன் கடல் எல்லையாக அமைந்துள்ளது.

1991-ம் ஆண்டு சுதந்திர நாடாக ஆனது. எனினும், கொரோனா பாதிப்புகள் பரவ தொடங்கிய பின்பு அதுபற்றி உலக சுகாதார அமைப்புக்கு அந்நாடு அளித்த தரவுகள் உண்மையாக இருக்காது என நம்பப்படுகிறது.

இதுபற்றி லண்டன் பேராசிரியர் மார்ட்டின் மெக்கீ கூறும்போது, அந்நாட்டின் அதிகாரப்பூர்வ சுகாதார புள்ளி விவரங்கள் நம்ப கூடியவையாக இல்லை என கூறுகிறார்.

2020-ம் ஆண்டில் இருந்து, கொரோனா என்ற வார்த்தை பயன்பாட்டையே அந்நாடு தடை செய்தது. அதோடு, நாட்டுக்குள் நோய் நுழைந்து விடாத வகையில், கட்டுப்படுத்தும் திட்டம் கொண்டு வரப்பட்டது என சுகாதார அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அந்நாட்டில் 60 இலட்சம் மக்கள் வசிக்க கூடிய சூழலில், பெருந்தொற்றில் இருந்து தப்புவது என்பது கடினம் வாய்ந்த விடயம். ஏனெனில், எடுத்துக்காட்டாக அண்டை நாடான ஈரானை எடுத்து கொண்டால் 70 இலட்சம் பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டு அது, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், துர்க்மெனிஸ்தான் நாட்டுக்கு அறிகுறிகளுடன் வந்தவர்களுக்கு பரிசோதனையில் பாதிப்பு இருப்பது உறுதியானபோதும், அதன் முடிவுகள் அதிகாரப்பூர்வ முறையில் வெளியிடப்படுவது இல்லை என கூறப்படுகிறது.

வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் கூறும்போது, துர்க்மெனிஸ்தான் சுகாதார துறையில் பணியாற்றுவோர், கொரோனா அல்லது கொரோனா வைரசின் பாதிப்பு போன்ற வார்த்தைகளை தவிர்க்கின்றனர்.

கொரோனா பாதிப்பு என்பதற்கு பதிலாக, அவர்கள் வியாதி என்ற பெயரையும், நிமோனியா அல்லது இதய செயலிழப்பு போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி வந்துள்ளனர் என கூறுகின்றனர்.

அந்நாட்டில், தலைநகர் அஸ்காபாத் நகரில் துருக்கிக்கான தூதர் கெமால் உக்குன் என்பவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டு உள்ளன. அதனால், அவரது மனைவி சொந்த நாடான துருக்கிக்கு சிகிச்சைக்காக அவரை அழைத்து செல்ல முயற்சித்து உள்ளார்.

அதற்காக துருக்கி மருத்துவர்களுக்கு மார்பு பகுதியில் எடுத்த எக்ஸ்ரே அறிக்கையை அனுப்பி வைத்து உள்ளார். ஆனால், உக்குன்னின் மரணத்திற்கு பின்னரே அவர் துருக்கிக்கு செல்வதற்கான அனுமதியே அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என அதிர்ச்சி தகவல் தெரிவிக்கின்றது.

சி.என்.என். பத்திரிகையில் வெளியான செய்தியில், ஐரோப்பிய மற்றும் மத்திய ஆசிய மனித உரிமைகள் கண்காணிப்பக இயக்குனர் ரேச்சல் டென்பர் கூறிய தகவலில், அந்த பகுதியில் மற்ற நாடுகளில் என்ன நடக்கிறது என பாருங்கள்.

அது துர்க்மெனிஸ்தான் நாட்டிடம் இருந்து எவ்வாறு வேறுபடுகிறது என பாருங்கள். அந்நாட்டுக்கும், அதன் அண்டை நாடுகளுக்கும் இடையேயான பெரிய வேறுபாடு என்பது அந்த ஜனாதிபதியின் மனப்பான்மையே ஆகும்.

அவரது வழக்கத்திற்கு மாறான குணநலன்களே அந்நாடு சுகாதாரத்துடன் உள்ளது போன்ற தோற்றம் ஏற்படுத்த அடிப்படையாக அமைந்து உள்ளது. அரசு தொலைக்காட்சியில், அவர் உடற்பயிற்சி கூடத்தில் பளு தூக்குவது போன்றோ அல்லது சைக்கிள் பயிற்சியில் ஈடுபடுவது போன்றோ தொடர்ந்து காட்டப்பட்டு வருகிறது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நன்றி தமிழன்

Latest news

Buy Now Pay Later-இல் வரவிருக்கும் மிகப்பெரிய மாற்றம்

தீங்கு விளைவிக்கும் கடன் ஒப்பந்தங்களால் நுகர்வோர் பாதிக்கப்படுவதைத் தடுக்க கடுமையான விதிமுறைகள் நோக்கமாகக் கொண்டிருப்பதால், Buy Now Pay Later வழங்குநர்களுக்கு பெரிய மாற்றங்கள் வரவுள்ளன. ஜூன்...

Qatar Airways-உடன் இணைந்து வானில் பறக்க்கும் Virgin Australia

Qatar Airways-உடனான கூட்டாண்மை மூலம் நீண்ட தூர சந்தையில் மீண்டும் நுழைவதன் மூலம் Virgin Australia சர்வதேச அரங்கிற்குத் திரும்பத் தயாராகி வருகிறது. ஜூன் 12, 2025...

குயின்ஸ்லாந்தில் பிரபலமடைந்துவரும் Osteoporosis தடுப்பு உடற்பயிற்சி

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பெரியவர்களிடையே எலும்புகளை வலுப்படுத்துதல் மற்றும் Osteoporosis-ஐ தடுப்பதை நோக்கமாகக் கொண்ட உடற்பயிற்சி வகுப்புகள் பிரபலமடைந்து வருகின்றன. ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் குறைந்த எலும்பு...

குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிராக 4 நாட்களாக போராடும் பொதுமக்கள்

டிரம்பின் குடியேற்றக் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் இப்போது நான்காவது நாளாகத் தொடர்கின்றன. போராட்டக்காரர்களை அடக்க சுமார் 300 மத்திய ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டத்தைக்...

காசாவுக்கு நிவாரண கப்பலுடன் சென்ற Greta Thunberg கைது

காசாவுக்குச் செல்லும் நிவாரண கப்பலான Madleen-இல் இருந்த 11 பேருடன் சேர்த்து, தானும் இஸ்ரேலிய படைகளால் இடைமறித்து கடத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் Greta Thunberg கூறியுள்ளார்....

G7 மாநாட்டின் போது அல்பானீஸ் மற்றும் டிரம்ப் இடையே சந்திப்பை அமைக்க அழுத்தம்

இந்த வாரம் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல என்று  கூட்டணித் தலைவர்கள் கூறுகின்றனர். உலகத் தலைவர்கள் கனடாவில் நடைபெறும் G7...