Newsசிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

சிரியாவில் தொடரும் துயரம்- மீண்டும் குளிர் காலநிலை!

-

துருக்கியில் நேற்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரங்கள் கடந்த நிலையிலும், இடிபாடுகளில் இருந்து தப்பியவர்கள் இன்னதும் மீட்கப்பட்டு வருகின்றனர்.

சுமார் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, துருக்கியைச் சுற்றியுள்ள பிராந்தியத்தைப் பாதித்த பயங்கரமான பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 5000 ஐ நெருங்குகியுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவின் பெரும் பகுதிகளில் 5,000க்கும் மேற்பட்ட கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இடிந்து விழுந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்கு அடியில் இருந்தவர்களை மீட்க மீட்புக் குழுவினர் கடுமையாக உழைத்து வருகின்றனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குப் பிறகு இடிபாடுகளில் இருந்து 14 வயது சிறுமி ஒருவரை மீட்க முடிந்தது.

அதே நேரத்தில், கடுமையான குளிர் சிரியா மற்றும் துருக்கியில் மீட்பு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமைந்தாலும், இன்னும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் மக்களின் உயிர்களை காக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக மீட்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், இடிபாட்டு எச்சங்களால் மூடப்பட்ட சாலைகள், நிலநடுக்கத்தால் சேதமடைந்த உள்கட்டமைப்புகள், வீழ்ச்சியடையும் வெப்பநிலை மற்றும் அசாதாரண வானிலை விளைவுகள் பாதிக்கப்பட்டவர்களை தேடுவதற்கும், மீட்பதற்கும் கடினமான சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளதாக உதவிக் குழுக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

நன்றி தமிழன்

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் ஒவ்வாமை விகிதங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் ஒருவர் ஒவ்வாமை நோயால் பாதிக்கப்பட்டு, ஆண்டுதோறும் $18.9 பில்லியன் நிதி இழப்புகளையும், $44.6 பில்லியன் நிதி சாராத தாக்கங்களையும் சந்திக்கின்றனர் என்று ஒரு...

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட சமீபத்திய அமைப்பு

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) பயங்கரவாத அமைப்பாக பட்டியலிடப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, ஸ்வீடன், பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட பல...

அதிகரித்து வரும் பணவீக்கம் வட்டி விகிதக் குறைப்புகளைப் பாதிக்குமா?

ஆஸ்திரேலிய புள்ளியியல் பணியகத்தின் (ABS) மாதாந்திர புள்ளிவிவரங்களின்படி, ஜூலை மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்ந்தது, நுகர்வோர் விலைகள் ஆண்டுதோறும் 2.8 சதவீதம் உயர்ந்தன. ஜூன் மாதத்தில் நுகர்வோர்...

நியூசிலாந்து அறிமுகப்படுத்திய புதிய விசா

நியூசிலாந்து அரசாங்கம் தொழில்முனைவோர் பணி விசாவை ஒழித்துவிட்டு வணிக முதலீட்டாளர் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்...

நியூசிலாந்து அறிமுகப்படுத்திய புதிய விசா

நியூசிலாந்து அரசாங்கம் தொழில்முனைவோர் பணி விசாவை ஒழித்துவிட்டு வணிக முதலீட்டாளர் விசாவை அறிமுகப்படுத்தியுள்ளது. நியூசிலாந்தின் பொருளாதாரத்தை வளர்க்க உதவும் அனுபவம் வாய்ந்த முதலீட்டாளர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்...

ஆஸ்திரேலியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குற்றங்கள்

ஆஸ்திரேலியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் தங்கள் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்து வருவதைப் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டுள்ளனர். ராய் மோர்கன் நடத்திய கருத்துக் கணிப்பின்படி, மில்லியன்...