Sportsபார்டர் கவாஸ்கர் தொடர் - புதிய சாதனை படைத்த அஸ்வின்!

பார்டர் கவாஸ்கர் தொடர் – புதிய சாதனை படைத்த அஸ்வின்!

-

நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளான நேற்று, இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆவுஸ்திரேலிய அணி, முதல் இன்னிங்சில் 177 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்திய அணி தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். தமிழ்நாட்டைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், ஆவுஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியை 36 ரன்களுக்கு அவுட்டாக்கினார்.

இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருடைய 450-வது விக்கெட் ஆகும். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 3000 ரன்கள், 450 விக்கெட்டுகளை எடுத்த முதல் இந்தியர், முதல் ஆசிய வீரர் என்கிற சாதனையை அஸ்வின் படைத்துள்ளார்.

உலக அளவில் விரைவாக 450 விக்கெட்டுகள் எடுத்த வீரர்கள் வரிசையில், இலங்கை வீரர் முத்தையா முரளிதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 80 போட்டிகளில் 450 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்த நிலையில், அஸ்வின் 89 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை வீழ்த்தி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்திய அளவில் முன்னாள் வீரர் அணில் கும்ளே 619 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். இருப்பினும் அவர் 93 போட்டிகளில் 450 விக்கெட்டுகளை எடுத்த நிலையில், அஸ்வின் இந்த சாதனையை 89 போட்டிகளிலேயே எடுத்து அசத்தியுள்ளார்.

நன்றி தமிழன்

Latest news

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

பெர்த்தில் இருந்து வந்த விமானத்தில் தீ விபத்து

பெர்த்தில் இருந்து பாலி நோக்கிச் சென்ற AirAsia விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. AirAsia விமானம் QZ545 இன் இயந்திரத்திலிருந்து தீப்பிழம்புகள் வெடித்ததால், விமானிகள் விமானத்தை பெர்த்...

ஏலத்திற்கு வரும் உலகின் மிக உயரமான விக்டோரியன் Gothic கோபுரம்

53 மீட்டருக்கும் அதிகமான உயரமுள்ள ஒரு அசாதாரண ஆங்கில கோட்டை தான் ஐக்கிய இராச்சியத்தில் அமைந்துள்ள இந்த Hadlow Tower ஆகும். இந்த கோபுரம் 19 ஆம்...