Sportsரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

-

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Latest news

20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் Centrelink சலுகைகள்

பல Centrelink சலுகைகளின் விகிதங்கள் 20 ஆம் திகதி முதல் அதிகரிக்கும் என்று Services Australia தெரிவித்துள்ளது. வயது ஓய்வூதியம், வேலை தேடுபவர், மாற்றுத்திறனாளி ஆதரவு ஓய்வூதியம்,...

நிதி நெருக்கடியில் உள்ள பல சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள்

ஆஸ்திரேலியாவில் 75 சதவீத சிறு மற்றும் நடுத்தர வணிகங்கள் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாக தெரியவந்துள்ளது. Airwallex என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. வரிகள்/வர்த்தகப் போர்கள்/மற்றும்...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

ஆசிய நாட்டுடன் புதிய கூட்டணியை அறிவிக்கிறார் Penny Wong

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய ஆஸ்திரேலியாவும் ஜப்பானும் ஒரு புதிய கூட்டணியை உருவாக்க வேண்டும் என்று வெளியுறவு அமைச்சர் Penny Wong கூறுகிறார். ஜப்பானிய வெளியுறவு...

நான்கு நாள் கல்வி முறையை அறிமுகப்படுத்தும் ஆஸ்திரேலிய பள்ளி

ஆஸ்திரேலியாவில் உள்ள கிரிம்சன் குளோபல் அகாடமி என்ற பள்ளி, மாணவர்கள் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே படிக்க அனுமதிக்கும் புதிய கற்றல் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இந்தப்...

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது முதியவர் அதிரடி கைது

பிரிஸ்பேர்ண் விமான நிலையத்தில் 62 வயது நபர் போதைப்பொருள் கடத்திய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து பிரிஸ்பேர்ணுக்கு 62 வயது முதியவர்...