Sportsரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

-

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Latest news

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

செய்யறிவு தொழில்நுட்பங்கள் தற்போது அதிக வளர்ச்சியைக் கண்டு, பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது...

2024 இல் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறுபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

ஆன்லைன் விளம்பரங்களில் ஃபேஷன் நட்சத்திரங்களைச் சித்தரிப்பதால் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் ஃபேஷன் நட்சத்திரங்களின் 118 சமூக ஊடக கணக்குகளை...

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்று...

பணவீக்கத்திற்கு முதன்மைக் காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகப்படியான செலவுதான்

மத்திய அரசு - மாநில மற்றும் உள்ளூர் அரசுகளின் அதிகப்படியான செலவுகள் நாட்டின் பணவீக்கத்தை நேரடியாகப் பாதித்துள்ளதாக முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கோவிட்...

மத்திய அரசுக்கும் விக்டோரியா அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் – பல தேசிய பூங்காக்கள் ஆபத்தில்

முர்ரே-டார்லிங் பேசின் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் விக்டோரியா மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் பல தேசிய பூங்காக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. விக்டோரியா மாநிலத்தின் உயிரியல்...

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி ஆதரவு சேவை

குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிவாரணம் வழங்க புதிய ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் கடினமான பகுதிகளில் வசிக்கும்...