Sportsரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

-

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Latest news

பட்டினியால் வாடும் 50,000 ஆஸ்திரேலியர்கள்

ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட 50,000 ஆஸ்திரேலியர்கள் அடிப்படை உணவுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிரமப்படுவதாக ஒரு கணக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது. OzHarvest என்ற தொண்டு நிறுவனம் சமீபத்தில் நடத்திய...

விக்டோரியன் கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத உடல்

விக்டோரியாவின் Mornington தீபகற்பத்தில் உள்ள Cape Schanck பகுதியில் ஒரு மனித உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்த உடல் அலையில் அடித்துச் செல்லப்பட்டு நீரில் மூழ்கி இறந்த ஒருவருடையது...

அதிக வரி வசூலைப் பதிவு செய்துள்ள விக்டோரியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024 நிதியாண்டில் சாதனை அளவு வரியை வசூலித்துள்ளது. ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் கூறுகையில், $802 பில்லியன் என்பது முந்தைய ஆண்டை விட $46.2 பில்லியன்...

ஹாமில்டனில் London plane மரங்களை அகற்றுவது குறித்த விவாதம்

விக்டோரியாவின் ஹாமில்டன் நகரில் 100 London plane மரங்களை அகற்றுவது குறித்து சூடான விவாதம் நடந்துள்ளது. மரங்களின் வேர்கள் நடைபாதைகள், கட்டிடங்கள் மற்றும் நீர் குழாய்களை சேதப்படுத்துகின்றன....

அதிக வரி வசூலைப் பதிவு செய்துள்ள விக்டோரியா

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024 நிதியாண்டில் சாதனை அளவு வரியை வசூலித்துள்ளது. ஆஸ்திரேலிய வரிவிதிப்பு அலுவலகம் கூறுகையில், $802 பில்லியன் என்பது முந்தைய ஆண்டை விட $46.2 பில்லியன்...

மின்-சைக்கிள் சார்ஜரால் தீப்பிடித்த வீடு

அடிலெய்டில் உள்ள ஒரு வீடு, மின்-பைக் சார்ஜரால் ஏற்பட்ட தீ விபத்தில் மோசமாக சேதமடைந்துள்ளது. நேற்று காலை 9 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டபோது, ​​ஒரு பெண்ணும்...