Newsஉலகத்துடன் ஆஸ்திரேலியாவுக்குள்ள உறவுகளை மீட்டெடுப்பேன்: ஆன்டனி அல்பனீசி

உலகத்துடன் ஆஸ்திரேலியாவுக்குள்ள உறவுகளை மீட்டெடுப்பேன்: ஆன்டனி அல்பனீசி

-

உலகத்துடன் ஆஸ்திரேலியா கொண்டுள்ள உறவுகளை மீட்டெடுக்கப்போவதாக ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்கவிருக்கும் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) உறுதி கூறியுள்ளார்.

மேலும் பருவநிலை மாற்றத்தைக் கொண்டுவருவதில் பின்தங்கியுள்ள நாடு என்ற ஆஸ்திரேலியாவின் பெயரை துடைத்தொழிக்கபோவதாகவும் அவர் உறுதி கூறினார். ஒரு நியாயமான ஆட்சியை தங்கள் கட்சி வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நேற்று (21 மே) நடந்த தேர்தல் தமது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று கூறிய அவர், தங்கள் ஆட்சி நாட்டிலும் முக்கிய மாற்றத்தைக் கொண்டு வரும் என உறுதி கூறினார்.

கட்சியின் முக்கிய தேர்தல் கொள்கைகளில் ஒன்று பருவநிலை மாற்றப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பது.

அடிக்கடி தீ மூளும் யூக்கலிப்டஸ் (Eucalyptus) காடுகள், புகை சூழ்ந்த நகரங்கள், அழிந்துவரும் பவளப்பாறைகள் போன்றவை பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களுக்கு ஆஸ்திரேலியாவை உதாரணமாகக் காட்டும் நிலைக்குக் கொண்டுவந்துள்ளன. அதை மாற்ற அல்பனீசி உறுதி கூறியுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...