Sportsரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

-

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Latest news

NSW-வில் வீட்டில் தயாரிக்கப்பட்ட ‘slam துப்பாக்கிகளை’ பறிமுதல் செய்த போலீசார்

நியூ சவுத் வேல்ஸ் தெற்கு கடற்கரையில், மூன்று குழல் துப்பாக்கி உட்பட, வீட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளை தயாரித்து விற்பனை செய்ததாக இரண்டு ஆண்கள் மீது குற்றம்...

இத்தாலிய புகழ்பெற்ற ஆடை வடிவமைப்பாளர் Giorgio Armani காலமானார்.

இத்தாலிய ஆடை வடிவமைப்பாளரும் Armani பேரரசின் நிறுவனருமான Giorgio Armani 91 வயதில் காலமானார். Milan-ஐ தளமாகக் கொண்ட இந்த வடிவமைப்பாளர் தனது Haute Couture வரிசைக்கு...

Berries உண்னும் ஆஸ்திரேலியர்களின் எண்ணிக்கையில் உயர்வு

ஆஸ்திரேலியாவில் பெர்ரிகளின் நுகர்வு அதிகரித்து வருவதால், பழ உற்பத்தியாளர்களால் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஒரு பூச்சிக்கொல்லியின் பாதுகாப்பு மதிப்பாய்வு தொடங்கியுள்ளது. அதிக ஊட்டச்சத்து உள்ளடக்கத்துடன், ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி மற்றும்...

14 ரஷ்யர்களை நாடு கடத்தும் ஆஸ்திரேலியா

உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பில் பங்கேற்ற 14 ரஷ்ய நபர்கள் மீது நிதி மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை (தடைகள்) பிறப்பிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் மனித...

14 ரஷ்யர்களை நாடு கடத்தும் ஆஸ்திரேலியா

உக்ரைன் மீதான சட்டவிரோத படையெடுப்பில் பங்கேற்ற 14 ரஷ்ய நபர்கள் மீது நிதி மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை (தடைகள்) பிறப்பிக்கப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் அறிவித்துள்ளது. ரஷ்யாவில் மனித...

தெற்கு ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தேனீ வளர்ப்புத் தொழில்

தேனீக் கூடுகளை கடுமையாக சேதப்படுத்தும் Varroa Mite, தெற்கு ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தப் பூச்சி இனம் தேனீக்களை அழிப்பதுடன், தேனீக்களுடன் தொடர்புடைய வைரஸ்களையும் பரப்புகிறது...