Sportsரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

-

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Latest news

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

“இந்தப் படிவத்தை ஒரு நல்ல செயலால் நிரப்புங்கள்” – பிரதமர் அல்பானீஸ்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...