Sportsரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

ரோஹித் சர்மா சந்தித்த மிகப்பெரிய அவமானம்!

-

ஐபிஎல் 2022ன் லீக் ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. பிளே ஆப்பிற்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் மற்றும் பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன.

நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் டெல்லி அணி தோல்வியை சந்தித்ததால் பிளே ஆப் போட்டியில் இருந்து வெளியேறியது. மும்பை அணி வெற்றி பெற்றதால் ஆர்சிபி 4வது அணியாக பிளே ஆப்பிற்கு தகுதி பெற்றுள்ளது. வரும் 25ம் தேதி எலிமினேட்டரில் லக்னோ அணியுடன் விளையாட உள்ளது.

5 முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி இந்த ஆண்டு மிகவும் மோசமான ஒரு அணியாக விளையாடியது. தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியுற்று முதல் அணியாக பிளே ஆப்பில் இருந்து வெளியேறியது. தனது முக்கியமான வீரர்களை ஏலத்தில் எடுக்க தவறியது தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இந்திய அணியின் அனைத்து வித கிரிக்கெட்டிற்கும் கேப்டனாக இருக்கும் ரோஹித் சர்மா இந்த ஆண்டு ஐபிஎல்-ல் கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சொதப்பி உள்ளார். ஐபிஎல் 2022-ல் 14 போட்டிகளில் மொத்தமாக 268 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அதிகபடச்சமாக 48 ரன்களுடன் 19.14 சராசரியாக கொண்டுள்ளார்.

2008ம் ஆண்டில் இருந்து நடைபெற்று வரும் ஐபிஎல்-ல் இந்த ஆண்டு மட்டும் தான் ரோஹித் சர்மா ஒரு அரைசதம் கூட அடிக்காமல் இருந்து உள்ளார். இது ரோஹித் சர்மாவிற்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு டி20 உலக கோப்பை நடைபெற உள்ள நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் மோசமான பார்ம் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இருப்பினும், வரும் போட்டிகளில் மீண்டும் பேட்டிங்கில் பழைய பார்மிற்கு திரும்புவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

Latest news

இந்தியாவில் நிபா குறித்து ஆஸ்திரேலியாவின் தீவிர கவலை

இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் நிபா வைரஸ் தொற்று இரண்டு பேருக்கு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, ஆசியா முழுவதும் உள்ள நாடுகள் மீண்டும் சுகாதார பாதுகாப்பை கடுமையாக்கியுள்ளன. இந்த...

இங்கிலாந்து திருச்சபையில் முதல் பெண் பேராயர் நியமனம்

இங்கிலாந்து திருச்சபையின் புதிய கென்டர்பரி பேராயராக சாரா முல்லாலி நேற்று முன்தினம் (28) உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டு இந்த உயரிய பதவியை வகிக்கும் முதலாவது பெண் என்ற...

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...

இந்தியாவில் பரவும் வைரஸ் கோவிட்டை விட மோசமானதா?

இந்தியாவின் மேற்கு வங்காள மாநிலத்தில் பதிவான கொடிய Nipah வைரஸ் பரவுவதால், முழு ஆசியப் பகுதியும் தற்போது அதிக ஆபத்தில் உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,...

ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணிக்கு புதிய கேப்டன்

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் Sophie Molineux நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கேப்டன் அலிசா ஹீலி அடுத்த மார்ச் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து...

12 ஆண்டுகளில் மில்லியன் கணக்கான டாலர்களை மோசடி செய்த அரசு ஊழியர் கைது

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் பல கவுன்சில்களில் பணிபுரிந்து 12 ஆண்டுகளாக அரசாங்க நிதியை மோசடி செய்ததற்காக 59 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த...