Newsமீண்டும் அத்துமீறும் சீனா...எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

மீண்டும் அத்துமீறும் சீனா…எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

-

இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ராணுவ படைகளை குவித்துள்ளது இந்தியா. டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்வதற்கு வசதியாக பாலம், சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா துவங்கி உள்ளது. லடாக் ஏரியின் குறுக்கே, இந்திய எல்லையில் இருக்கும் இமய மலைத் தொடர் பகுதியில் சீனா அமைத்து வரும் இந்த பாலத்தால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இமயமலை தொடருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்தியா – சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் நடத்தக் கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா தற்போது நடந்து வருவதற்கு இந்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு அரசு தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் 38 பேரும், சீன வீரர்கள் 45 பேரும் உயிரிழந்ததாக மற்ற தகவல்கள் தெரிவித்தன.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....