Newsமீண்டும் அத்துமீறும் சீனா...எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

மீண்டும் அத்துமீறும் சீனா…எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

-

இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ராணுவ படைகளை குவித்துள்ளது இந்தியா. டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்வதற்கு வசதியாக பாலம், சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா துவங்கி உள்ளது. லடாக் ஏரியின் குறுக்கே, இந்திய எல்லையில் இருக்கும் இமய மலைத் தொடர் பகுதியில் சீனா அமைத்து வரும் இந்த பாலத்தால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இமயமலை தொடருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்தியா – சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் நடத்தக் கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா தற்போது நடந்து வருவதற்கு இந்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு அரசு தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் 38 பேரும், சீன வீரர்கள் 45 பேரும் உயிரிழந்ததாக மற்ற தகவல்கள் தெரிவித்தன.

Latest news

விக்டோரியாவில் கட்டுப்பாட்டை இழந்த காட்டுத்தீ – பொதுமக்களுக்கு சிவப்பு அறிவிப்பு

விக்டோரியாவில் வசிப்பவர்கள் கிறிஸ்துமஸ் தினத்திலும், Boxing Day தினத்திலும் கடுமையான காட்டுத் தீயை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கிராமியன்ஸ் தேசிய பூங்கா பகுதியில்...

அதிக விடுமுறைகள் கொண்ட நாடுகளின் பட்டியலில் ஆஸ்திரேலியா

2025 ஆம் ஆண்டில், உலகில் அதிக விடுமுறை நாட்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் இலங்கையும் சேர்க்கப்பட்டுள்ளன. CN டிராவலர் வழங்கிய அறிக்கையின்படி, 2025 ஆம் ஆண்டில் உலகில்...

விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் பலி

தெற்கு பிரேசிலில் உள்ள கிராமடோ நகரில் தனியார் விமானம் விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்துள்ளனர். விமானத்தின் பைலட்டாக இருந்த பிரேசில் தொழிலதிபர் லூயிஸ்...

ஆஸ்திரேலியாவில் Protection Visa மோசடி செய்பவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை

Protection Visa (Subclass 866) தொடர்பாக ஆஸ்திரேலியாவில் மோசடி செய்பவர்களுக்கு அதிகபட்ச அபராதம் அல்லது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் மீண்டும்...

ஆஸ்திரேலியாவில் ஆங்கில ஊடகங்களை மறுக்கும் இந்திய அணி

ஆஸ்திரேலிய ஊடகங்களை இந்திய கிரிக்கெட் அணி புறக்கணிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த சனிக்கிழமை குத்துச்சண்டை தினமான ஊடகவியலாளர் சந்திப்பின் போது ரவி ஜடேஜா ஆங்கிலத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு...

இரண்டாவது கட்டமாக லாட்டரி மூலம் 3,000 பேருக்கு ஆஸ்திரேலியா PR வழங்க ஆரம்பம்

தொழிலாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கான லாட்டரி அடிப்படையிலான விசா வகையான Pacific Engagement Visaவின் இரண்டாம் கட்டம் ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற உள்ளது. அதன்படி,...