Newsமீண்டும் அத்துமீறும் சீனா...எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

மீண்டும் அத்துமீறும் சீனா…எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

-

இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ராணுவ படைகளை குவித்துள்ளது இந்தியா. டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்வதற்கு வசதியாக பாலம், சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா துவங்கி உள்ளது. லடாக் ஏரியின் குறுக்கே, இந்திய எல்லையில் இருக்கும் இமய மலைத் தொடர் பகுதியில் சீனா அமைத்து வரும் இந்த பாலத்தால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இமயமலை தொடருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்தியா – சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் நடத்தக் கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா தற்போது நடந்து வருவதற்கு இந்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு அரசு தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் 38 பேரும், சீன வீரர்கள் 45 பேரும் உயிரிழந்ததாக மற்ற தகவல்கள் தெரிவித்தன.

Latest news

விக்டோரியாவில் ஒரு பெண்ணின் குளியலறையில் காணப்பட்ட ஒட்டுண்ணி புழு

ஒரு பெண்ணின் குளியலறையில் ஒட்டுண்ணி புழு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம், மத்திய விக்டோரியாவில் ஒரு பெண் தனது குளியல் தொட்டியின் அருகே எதோ அசைவது போல்...

ஆஸ்திரேலியாவில் பெரும் பிரச்சினையாக மாறியுள்ள வீட்டுவசதி நெருக்கடி

ஆஸ்திரேலியாவின் வீட்டுவசதி நெருக்கடியின் 'சோகமான யதார்த்தத்தை' எடுத்துக்காட்டும் ஒரு புகைப்படம் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் உள்ள ஒரு பூங்காவில் ஒரு பெண் தார்ப்பூச்சின் கீழ் தஞ்சம் புகுந்தது...

பெற்றோர் விசா விண்ணப்பங்களுக்கான புதிய ஆன்லைன் சேவை

பெற்றோர் விசா விண்ணப்பங்களுக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட காகிதப் படிவ முறையை மாற்றியமைத்து, விண்ணப்பதாரர்களுக்காக ImmiAccount என்ற புதிய ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் பழைய முறையிலேயே விண்ணப்பிக்க...

நியூ சவுத் வேல்ஸில் மேலும் அதிகமாகியுள்ள வெள்ள அபாயம்

நியூ சவுத் வேல்ஸில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள எச்சரிக்கை இன்னும் நீக்கப்படவில்லை. திங்கட்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி...

பெற்றோர் விசா விண்ணப்பங்களுக்கான புதிய ஆன்லைன் சேவை

பெற்றோர் விசா விண்ணப்பங்களுக்கு இதுவரை பயன்படுத்தப்பட்ட காகிதப் படிவ முறையை மாற்றியமைத்து, விண்ணப்பதாரர்களுக்காக ImmiAccount என்ற புதிய ஆன்லைன் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கும் பழைய முறையிலேயே விண்ணப்பிக்க...

நியூ சவுத் வேல்ஸில் மேலும் அதிகமாகியுள்ள வெள்ள அபாயம்

நியூ சவுத் வேல்ஸில் பல நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக வெள்ள எச்சரிக்கை இன்னும் நீக்கப்படவில்லை. திங்கட்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி...