Newsமீண்டும் அத்துமீறும் சீனா...எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

மீண்டும் அத்துமீறும் சீனா…எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

-

இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ராணுவ படைகளை குவித்துள்ளது இந்தியா. டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்வதற்கு வசதியாக பாலம், சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா துவங்கி உள்ளது. லடாக் ஏரியின் குறுக்கே, இந்திய எல்லையில் இருக்கும் இமய மலைத் தொடர் பகுதியில் சீனா அமைத்து வரும் இந்த பாலத்தால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இமயமலை தொடருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்தியா – சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் நடத்தக் கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா தற்போது நடந்து வருவதற்கு இந்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு அரசு தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் 38 பேரும், சீன வீரர்கள் 45 பேரும் உயிரிழந்ததாக மற்ற தகவல்கள் தெரிவித்தன.

Latest news

சுகாதார நட்சத்திர மதிப்பீடுகள் குறித்த அரசாங்க முடிவு

Health Star Ratings முறையை அதிகரிப்பதற்கான இலக்குகளை அடைவதில் பொதி செய்யப்பட்ட உணவுத் துறை தோல்வியடைந்துள்ளதாக அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது. இந்த அமைப்பு தொடங்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. இந்தக்...

டிரம்ப் கொளுத்திய நெருப்பை ட்ரம்பே அணைத்தார்!

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய ஏற்றுமதியான மாட்டிறைச்சிக்கு வரி விதிக்கும் யோசனையை நிராகரித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஒரு நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். இது அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும்...

ஆஸ்திரேலியா உட்பட மூன்று கண்டங்களில் பயண இடையூறுகள்

Air New Zealand-இன் உலகளாவிய வலையமைப்பு ஒரு பெரிய செயல்பாட்டுத் தடைக்குப் பிறகு மூன்று கண்டங்களில் குறிப்பிடத்தக்க பயண இடையூறுகளைச் சந்தித்து வருகிறது. இந்த உறுதியற்ற தன்மை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

ஆஸ்திரேலியாவில் முதலையை செல்லப் பிராணியாக வளர்க்கலாமா?

முதலைகளை செல்லப்பிராணிகளாக வைத்திருப்பது தொடர்பான சட்டங்கள் வடக்குப் பகுதியில் தளர்த்தப்படுகின்றன. முதலைகளை செல்லப்பிராணிகளாக வளர்ப்பதை தடை செய்ய விக்டோரியா நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், வடக்குப் பிரதேசம் முதலை...

இரு குழந்தைகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட நபர் மர்மமான முறையில் மரணம்

இரண்டு இளம் குழந்தைகளின் மரணம் தொடர்பாக கொலைக் குற்றச்சாட்டில் ஜாமீனில் வெளியே வந்த ஒருவர் ஆறு வாரங்களுக்குள் இறந்து கிடந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அந்த நபர்...