Newsமீண்டும் அத்துமீறும் சீனா...எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

மீண்டும் அத்துமீறும் சீனா…எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

-

இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ராணுவ படைகளை குவித்துள்ளது இந்தியா. டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்வதற்கு வசதியாக பாலம், சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா துவங்கி உள்ளது. லடாக் ஏரியின் குறுக்கே, இந்திய எல்லையில் இருக்கும் இமய மலைத் தொடர் பகுதியில் சீனா அமைத்து வரும் இந்த பாலத்தால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இமயமலை தொடருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்தியா – சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் நடத்தக் கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா தற்போது நடந்து வருவதற்கு இந்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு அரசு தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் 38 பேரும், சீன வீரர்கள் 45 பேரும் உயிரிழந்ததாக மற்ற தகவல்கள் தெரிவித்தன.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...