News மீண்டும் அத்துமீறும் சீனா...எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

மீண்டும் அத்துமீறும் சீனா…எல்லையில் ராணுவத்தை குவித்தது இந்தியா

-

இந்திய எல்லை பகுதியில் மீண்டும் சீனா தனது ஆக்கிரமிப்பு வேலைகளை துவங்கி உள்ளது. பாங்காங் ஏரியில் இரண்டாவது பாலம் அமைக்கும் பணிகளை சீனா துவங்கி உள்ளது. இதனால் சீனாவிற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது.

எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் ராணுவ படைகளை குவித்துள்ளது இந்தியா. டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்வதற்கு வசதியாக பாலம், சாலைகள் அமைக்கும் பணியை இந்தியா துவங்கி உள்ளது. லடாக் ஏரியின் குறுக்கே, இந்திய எல்லையில் இருக்கும் இமய மலைத் தொடர் பகுதியில் சீனா அமைத்து வரும் இந்த பாலத்தால் இந்தியாவின் பாதுகாப்பிற்கும், இமயமலை தொடருக்கு ஆபத்து ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2020 ம் ஆண்டு ஜுன் மாதம் இந்தியா – சீனா இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எல்லையில் பதற்றத்தை குறைப்பதற்காக சட்ட விரோதமாக கட்டுமான பணிகள் நடத்தக் கூடாது என ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறும் வகையில் சீனா தற்போது நடந்து வருவதற்கு இந்திய அரசு சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2020ம் ஆண்டு எல்லைப் பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவ வீரர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர், சீன வீரர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர். இரு நாட்டு அரசு தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்திய வீரர்கள் 38 பேரும், சீன வீரர்கள் 45 பேரும் உயிரிழந்ததாக மற்ற தகவல்கள் தெரிவித்தன.

Latest news

ஆஸ்திரேலியாவில் உள்ள McDonald’s உணவகங்களில் கவுண்டர்களுக்கு முன்னால் ஒரு பிளாஸ்டிக் கவர்

அவுஸ்திரேலியாவில், துரித உணவு உணவக சங்கிலி அதன் உணவகங்களின் கவுன்டர்களுக்கு முன்னால் பிளாஸ்டிக் கவரைப் பயன்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.

குயின்ஸ்லாந்து பொது போக்குவரத்து சேவைகளில் பெரிய மாற்றம்

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் பயணிகள் போக்குவரத்து பேருந்து சேவைகளுக்கான கட்டண முறையை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி, எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்,...

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல தசாப்தங்களுக்குப் பிறகு, ரிசர்வ் வங்கிக்கு இன்று திருத்த அறிக்கை

ஆஸ்திரேலியாவின் பெடரல் ரிசர்வ் வங்கியில் அறிமுகப்படுத்தப்பட உள்ள சீர்திருத்தங்கள் அடங்கிய அறிக்கையை மத்திய கருவூல அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் இன்று பெற உள்ளார்.

கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய நபருக்கு 3 வருட சிறைத்தண்டனை

கடந்த ஆகஸ்ட் மாதம் கன்பரா விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேகநபருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.