Newsதீவிரமடையும் போர் - ஆயுதங்களைக் குவிக்க முனையும் உக்ரேன்

தீவிரமடையும் போர் – ஆயுதங்களைக் குவிக்க முனையும் உக்ரேன்

-

உக்ரேனின் ரஷ்ய எல்லையோரம் உள்ள கிழக்கு வட்டாரத்தில் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது.

உக்ரேன் அதிகமான ஆயுதங்களைக் குவிக்கத் தொடர்ந்து முயற்சியெடுத்து வருகிறது.

டொனட்ஸ்க் வட்டாரத்தில் இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லாய்மன் நகரை ரஷ்யப்படை கைப்பற்றியிருக்கிறது.

தமது தினசரி உரையில், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்க்கி (Volodymyr Zelenskyy) கிழக்கில் நிலவரம் விவரிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகக் கூறினார்.

எனினும் உக்ரேனியப்படை தொடர்ந்து தாக்குப்பிடிப்பதாக அவர் கூறினார்.

லுஹான்ஸ் வட்டாரத்தில் ரஷ்யப்படை செவரோ-டொனட்ஸ்க் (Severo-donetsk) நகருக்குள் சென்றிருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.

அந்நகரின் 90 விழுக்காட்டுக் கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தெற்கே இருக்கும் கெர்சோன் (Kherson) நகரம் அடுத்த ஆண்டுவாக்கில் ரஷ்யாவுடன் இணைந்துவிடும் என்று அந்நகரின் ரஷ்ய ஆதரவு அதிகாரி கூறினார்.

ரஷ்யாவின் வசமிருக்கும் அந்த நகரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

மெல்பேர்ணில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச் சூடு

மெல்பேர்ணில் நேற்று ஒரு வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. வடமேற்கு மெல்பேர்ணின் Hillside புறநகர்ப் பகுதியில் உள்ள Penshurst Ctயில் உள்ள ஒரு வீட்டில் துப்பாக்கிச்...

ரொக்க விகிதம் குறித்த ரிசர்வ் வங்கியின் முடிவு

எதிர்பார்த்தது போலவே, ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை 0.25 சதவீதம் அதிகரித்து, 3.85 சதவீதமாகக் கொண்டு வந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி இன்று இதை அறிவித்துள்ளது. இதற்கிடையில், மத்திய...