Newsதீவிரமடையும் போர் - ஆயுதங்களைக் குவிக்க முனையும் உக்ரேன்

தீவிரமடையும் போர் – ஆயுதங்களைக் குவிக்க முனையும் உக்ரேன்

-

உக்ரேனின் ரஷ்ய எல்லையோரம் உள்ள கிழக்கு வட்டாரத்தில் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது.

உக்ரேன் அதிகமான ஆயுதங்களைக் குவிக்கத் தொடர்ந்து முயற்சியெடுத்து வருகிறது.

டொனட்ஸ்க் வட்டாரத்தில் இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லாய்மன் நகரை ரஷ்யப்படை கைப்பற்றியிருக்கிறது.

தமது தினசரி உரையில், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்க்கி (Volodymyr Zelenskyy) கிழக்கில் நிலவரம் விவரிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகக் கூறினார்.

எனினும் உக்ரேனியப்படை தொடர்ந்து தாக்குப்பிடிப்பதாக அவர் கூறினார்.

லுஹான்ஸ் வட்டாரத்தில் ரஷ்யப்படை செவரோ-டொனட்ஸ்க் (Severo-donetsk) நகருக்குள் சென்றிருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.

அந்நகரின் 90 விழுக்காட்டுக் கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தெற்கே இருக்கும் கெர்சோன் (Kherson) நகரம் அடுத்த ஆண்டுவாக்கில் ரஷ்யாவுடன் இணைந்துவிடும் என்று அந்நகரின் ரஷ்ய ஆதரவு அதிகாரி கூறினார்.

ரஷ்யாவின் வசமிருக்கும் அந்த நகரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...