Newsதீவிரமடையும் போர் - ஆயுதங்களைக் குவிக்க முனையும் உக்ரேன்

தீவிரமடையும் போர் – ஆயுதங்களைக் குவிக்க முனையும் உக்ரேன்

-

உக்ரேனின் ரஷ்ய எல்லையோரம் உள்ள கிழக்கு வட்டாரத்தில் போர் உக்கிரம் அடைந்திருக்கிறது.

உக்ரேன் அதிகமான ஆயுதங்களைக் குவிக்கத் தொடர்ந்து முயற்சியெடுத்து வருகிறது.

டொனட்ஸ்க் வட்டாரத்தில் இருக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த லாய்மன் நகரை ரஷ்யப்படை கைப்பற்றியிருக்கிறது.

தமது தினசரி உரையில், உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்க்கி (Volodymyr Zelenskyy) கிழக்கில் நிலவரம் விவரிக்க முடியாத அளவுக்கு மோசமாக இருப்பதாகக் கூறினார்.

எனினும் உக்ரேனியப்படை தொடர்ந்து தாக்குப்பிடிப்பதாக அவர் கூறினார்.

லுஹான்ஸ் வட்டாரத்தில் ரஷ்யப்படை செவரோ-டொனட்ஸ்க் (Severo-donetsk) நகருக்குள் சென்றிருப்பதாக உக்ரேனிய அதிகாரிகள் கூறினர்.

அந்நகரின் 90 விழுக்காட்டுக் கட்டடங்கள் சேதம் அடைந்திருப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.

தெற்கே இருக்கும் கெர்சோன் (Kherson) நகரம் அடுத்த ஆண்டுவாக்கில் ரஷ்யாவுடன் இணைந்துவிடும் என்று அந்நகரின் ரஷ்ய ஆதரவு அதிகாரி கூறினார்.

ரஷ்யாவின் வசமிருக்கும் அந்த நகரில் பொது வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23...

ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பிரசவித்த அமெரிக்கப் பெண்

அமெரிக்காவில் பெண்ணொருவர் அரிதான ஒரே மாதிரியான 4 பிள்ளைகளை பெற்றெடுத்த நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. டெக்ஸாசை சேர்ந்த தம்பதி ஜோனதன் (37), மெர்சிடிஸ் சந்து (34). இவர்களுக்கு...

உக்ரைன்-ரஷ்யா போர் முனைக்கு சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – அம்பலமானது மோசடி

உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் போர் முனைகளுக்கு இலங்கையின் முன்னாள் இராணுவ வீரர்களை அனுப்பும் மோசடி தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைனில் உள்ள...

பால்டிமோர் பாலத்தின் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மற்றொரு சடலம்

அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்த மற்றுமொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புக் குழுக்களால் மீட்கப்பட்ட உடல் மார்ச் 26 அன்று பால்டிமோர்...

ஸ்மார்ட்போன்அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையில் இடம்பிடித்துள்ள ஆஸ்திரேலியா

ஸ்மார்ட்போன் அடிமைத்தனத்தின்படி நாடுகளின் தரவரிசையை உள்ளடக்கிய சமீபத்திய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஸ்மார்ட்போன்களுக்கு அதிகம் அடிமையான நாடுகளில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளதுடன், அந்த எண்ணிக்கை 36.8 சதவீதமாக...

NSW இல் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கத்திகளை விற்க தடை

நியூ சவுத் வேல்ஸில் கத்திகளை விற்பனை செய்வதற்கான வயது வரம்பை நிர்ணயிக்கும் புதிய சட்டத்திற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் அவுஸ்திரேலியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கத்திக்குத்து...