News22 பேர் பயணம் செய்த விமானம் திடீரென மாயம்!

22 பேர் பயணம் செய்த விமானம் திடீரென மாயம்!

-

நேபாளத்தில் தனியார் ஏர்லைன்ஸ் மூலம் இயக்கப்படும் விமானம் ஞாயிற்றுக்கிழமை, 22 பேருடன் காணாமல் போனதாக விமான நிறுவனம் மற்றும் அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. சிறிய விமானம் காத்மாண்டுவில் இருந்து வடமேற்கே 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பொக்காரா என்ற இடத்திலிருந்து வடமேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோம்சோம் நகருக்கு சென்று கொண்டிருந்தது. கனடாவில் கட்டமைக்கப்பட்ட ட்வின் ஓட்டர் விமானங்களை இயக்கும் தாரா ஏர் (Tara Air), அதை இயக்குகிறது.

“விமானம் முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள ஜோம்சோம் வானத்தில் காணப்பட்டது, அதன் பின்னர் அது தொடர்பில் இல்லை” என்று ANI இடம் தாரா ஏர் நிறுவன தலைமை அதிகாரி நேத்ரா பிரசாத் சர்மா தெரிவித்தார்.

விமானத்தில் 4 இந்தியர்கள் மற்றும் 3 ஜப்பானியர்கள் இருந்தனர். மீதமுள்ள நேபாளி குடிமக்கள் மற்றும் விமானத்தில் பணியாளர்கள் உட்பட மொத்தம் 22 பயணிகள் இருந்ததாக அரசு தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.

இமயமலை தேசமான நேபாளத்தின் ஐந்தாவது பெரிய மாவட்டமான முக்திநாத் கோயிலுக்கான யாத்திரையில், மலைப்பகுதியான முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெட்டின் “திட்டி” பகுதியில் விமானம் விபத்துக்குள்ளானதாக சந்தேகிக்கப்படுகிறது.

கடந்த 2016 ஆம் ஆண்டில், தாரா ஏர் மூலம் இயக்கப்படும் ட்வின் ஓட்டர் டர்போபிராப் விமானம் மியாக்டியின் மேற்கு மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்தனர். மூன்று பணியாளர்களைத் தவிர, ஒரு சீனர் மற்றும் ஒரு குவைத் நாட்டவர் உட்பட 20 பயணிகள் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தனர்.

மலையின் தாயகமான நேபாளத்தில், உள்நாட்டு விமான விபத்துக்கள் அடிக்கடி பதிவாகிகின்றன. திடீரென் மாறக்கூடிய வானிலை மற்றும் கடினமான மலைப் பகுதிகளில் உள்ல விமான ஓடுதளங்கள் காரணமாக, விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.
“திட்டி பகுதியின் உள்ளூர்வாசிகள் அசாதாரண சத்தம் கேட்டதாக எங்களுக்குத் தெரிவித்தனர். நாங்கள் தேடுதல் நடவடிக்கைக்காக ஹெலிகாப்டரை அப்பகுதிக்கு அனுப்புகிறோம்,” என்று முஸ்டாங்கின் மாவட்ட காவல்துறை அலுவலகத்தின் டிஎஸ்பி ராம் குமார் டானி ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். .

உலகின் மிக உயரமான மலையின் தாயகமான நேபாளத்தில், உள்நாட்டு விமான வலையமைப்பில் விபத்துக்கள் அடிக்கடி பதிவாகிகின்றன. மாற்றக்கூடிய வானிலை மற்றும் கடினமான மலைப் பகுதிகளில் விமான ஓடுதளங்கள் இருப்பதால், விபத்துக்கள் அடிக்கடி ஏற்படுகின்றன.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...