Newsஜெர்மனி குடியுரிமைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

ஜெர்மனி குடியுரிமைக்காக நீண்ட காலம் காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கு வெளியான தகவல்

-

ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசாங்கம், ஆட்சி அமைப்பதற்கு முன்பிருந்தே குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் கொண்டு வர திட்டம் வைத்திருப்பதாக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், FDP கட்சியின் புலம்பெயர்தல் கொள்கை நிபுணரான Dr. Ann-Veruschka Jurischஇடம், அது குறித்து சில கேள்விகள் எழுப்பப்பட்டன.

குடியுரிமைச் சட்டங்களில் மாற்றங்கள் எப்போது கொண்டு வரப்படும் என்பது முதலான சில விடயங்கள் குறித்து அவர் கூறிய தகவல்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

ஜேர்மனியில் வாழ்வோரில் சுமார் 14 சதவிகிதம்பேர் வெளிநாட்டு பாஸ்போர்ட் ஒன்றைத்தான் வைத்திருக்கிறார்கள். அதாவது, 11.8 மில்லியன் பேர்…

அவர்களில் ஒரு பகுதியினர் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள். அவர்கள் ஜேர்மானிய குடிமக்களானபோது அவர்கள் தங்கள் சொந்த நாட்டு பாஸ்போர்ட்டை வைத்துக்கொள்ள அவர்களால் முடிந்தது. ஆனால், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாத பெரும் எண்ணிக்கையிலானவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறவேண்டுமானால், அவர்கள் தங்கள் சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டைக் கைவிட முன்வரவேண்டும்.

ஆகவே, பலர் தங்கள் சொந்த நாட்டின் பாஸ்போர்ட்டை இழக்க மனமில்லாததால் ஜேர்மனியில் வாழும் வெளிநாட்டவர்களாகவே வாழ்ந்து வருகிறார்கள். குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம் கொண்டுவரப்பட்டு, ஜேர்மன் குடியுரிமை கிடைத்தாலும் தங்கள் சொந்த பாஸ்போர்ட்டையும் வைத்துக்கொள்ளலாம் என்ற நிலை வருவதற்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

இந்த குடியுரிமைச் சட்டங்கள் நவீனப்படுத்தப்படப்போவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்த Jurish, கூட்டணிக் கட்சிகளுக்குள் அது குறித்த பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துவருவதாக தெரிவித்தார்.

இந்த ஆண்டு இறுதிவாக்கில் குடியுரிமைச் சட்டங்களில் மாற்றம் செய்யப்படும் என கூறப்பட்டாலும், குறிப்பாகச் சொல்லவேண்டுமானால், 2023ஆம் ஆண்டின் துவக்கத்தில் உண்மையாகவே இந்த மாற்றங்கள் நடைமுறைக்கு வரக்கூடும் என தோன்றுகிறது.

குடியுரிமைச் சட்டம் ஒன்று புதிதாக இயற்றப்படுவதற்கு முன், அதிலுள்ள சின்னச் சின்ன விடயங்களை கவனிக்கவேண்டியுள்ளது. குறிப்பாக, பல தலைமுறைகளுக்கு மக்கள் பல நாட்டு பாஸ்போர்ட்டுகள் வைத்திருக்கும் நிலைமையை உருவாக்கிவிடக்கூடாது என்பதில் FDP உறுதியாக உள்ளது.

அதாவது, உதாரணமாக, முதல் தலைமுறை புலம்பெயர்ந்தோரும் அவர்களுடைய பிள்ளைகளும் இரட்டைக் குடியுரிமை கோரலாம். ஆனால், அவர்களுடைய பேரப்பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளின் பிள்ளைகளுமோ, அவர்கள் தங்கள் தாத்தா பாட்டியின் குடியுரிமையை வைத்துக்கொள்ள விரும்புகிறார்களா, அல்லது அவர்களுக்கு ஜேர்மன் குடியுரிமை வேண்டுமா? இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள் என்ற கேள்விக்குட்படுத்தப்படுவார்கள்.

இதுபோக, மொழித்தேவைகளில் சில சலுகைகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், மிகப்பெரிய பிரச்சினை ஒன்று உள்ளது. அத்தனை பேருக்கும் குடியுரிமை வழங்கவேண்டுமானால், குடியுரிமை விண்ணப்பங்களை பரிசீலிப்பதற்கே மிக நீண்ட காலம் தேவைப்படுகிறது.

ஆக, உத்தேசமாக 2023இல் சட்ட மாற்றங்கள் வந்தாலும், நடைமுறையில், வெளிநாட்டவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெற சிறிது காலம் பிடிக்கும் என்றே தோன்றுகிறது.

Latest news

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நியூ சவுத் வேல்ஸ் அரசு

நியூ சவுத் வேல்ஸில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு நீண்டகால கல்விச் சலுகைகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ஒரு...

ஆஸ்திரேலியாவில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் என அறிகுறி

தொடர்ந்து புவி வெப்பமடைதல் ஆஸ்திரேலியாவில் உணவு மற்றும் நீர் பற்றாக்குறைக்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் தேசிய காலநிலை இடர் மதிப்பீடு (NCRA) அறிக்கை, 2025...

தினசரி Sunscreen பயன்பாடு வைட்டமின் குறைபாட்டை ஏற்படுத்தக்கூடும்

தினமும் Sunscreen பயன்படுத்துவது வைட்டமின் டி குறைபாட்டின் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. சன்ஸ்கிரீனைப் பயன்படுத்துவது தோல் புற்றுநோயைத் தடுக்கலாம் என்றாலும், தினமும் SPF50+ சன்ஸ்கிரீனைப்...

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள்

இந்த கிறிஸ்துமஸ் பருவத்தில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகள் தேவைப்படுகின்றன. கிறிஸ்துமஸுக்கு இன்னும் 100 நாட்கள் மட்டுமே உள்ளதாகவும், 2,500க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் தேவைப்படுவதாகவும்...

பணவீக்கத்தை விட அதிகமாகும் மின்சாரக் கட்டணம்

வீட்டுச் செலவுகள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் பணவீக்கத்தை விட 27.16 சதவீதம் அதிகமாக உயர்ந்துள்ளதாக ஒரு புதிய அறிக்கை காட்டுகிறது. எரிசக்தி...

மெல்பேர்ணில் ரயில் மேல் போராட்டம் நடத்திய பெண்

மெல்பேர்ணின் மேற்கில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலில் ஏறிய ஒரு போராட்டம் செய்த ஒரு பெண்ணை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று காலை 7.30 மணியளவில், Footscray-இல் உள்ள Maribyrnong...