Newsசுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம் அமுலுக்கு வரும் நடைமுறைகள்

-

சுவிட்ஸர்லாந்தில் இந்த மாதம், சிலருக்கு நல்ல செய்திகளையும் சிலருக்கு ஏமாற்றங்களையும் அளிக்க இருக்கிறது.

அவ்வகையில், 2022ஆம் ஆண்டு, மே மாதத்தில் சுவிட்சர்லாந்தில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள் குறித்து பார்க்கலாம்.

தீவிரவாதத்துக்கு எதிராக பொலிசாருக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரம் நீட்டிக்கப்படுகிறது. அதன்படி அவர்கள், தீவிரவாத தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மின்னணு கண்காணிப்பு மற்றும் வீட்டுச்சிறை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

மார்ச் 21 முதல் உக்ரைன் அகதிகள் சுவிட்சர்லாந்தில் பொதுப்போக்குவரத்தை இலவசமாக பயன்படுத்தி வருகிறார்கள். அந்த சலுகை, ஜூன் மாதம் 1ஆம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது.

இனி வெளிநாடு செல்பவர்கள், தங்களுக்கு இரண்டாவது டோஸ் கோவிட் தடுப்பூசி பெற்றுக்கொள்ளவேண்டுமானால், அதற்கான செலவை தாங்களே ஏற்றுக்கொள்ளவேண்டும் என பெடரல் பொது சுகாதாரத்துறை அற்வித்துள்ளது.

ஜூன் 21 வட பகுதிகளில் கோடையின் துவக்க நாளாக குறிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கோடை, வழக்கத்தை விட அதிக வெப்பம் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆராய்ச்சிமையம் தெரிவித்துள்ளது.

ஜேர்மனி, ஆஸ்திரியா, பிரான்ஸ், இத்தாலி மற்றும் Liechtenstein ஆகிய நாடுகளிலிருந்து சுவிட்சர்லாந்துக்கு பணிக்கு வருவோர், வீட்டிலிருந்தவண்ணம் பணி செய்தல் முதலான விதிகள் ஜூன் 30உடன் முடிவுக்கு வருகின்றன.

Latest news

பிரித்தானியாவில் விலங்குகள் நலனில் புரட்சிகர மாற்றம்

“பிரித்தானியாவில் விலங்குகள் நலனை மேம்படுத்தும் நோக்கில், ‘தலைமுறையில் காணாத மிகப்பெரிய சீர்திருத்தங்களை’ அந்நாட்டு அரசாங்கம் நேற்று (22) அறிவித்துள்ளது. இதன்படி, நாய்களைக் கொடூரமான முறையில் இனப்பெருக்கம் செய்யும்...

ஆஸ்திரேலிய அரசின் புதிய சட்டங்களுக்கு மனித உரிமை ஆர்வலர்கள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் சிட்னி Bondi கடற்கரை தாக்குதலைத் தொடர்ந்து, நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு துப்பாக்கிப் பயன்பாடு மற்றும் போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் புதிய சட்டங்களை அவசரமாக...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...

Bondi தாக்குதலுக்குப் பிறகு அல்பானீஸ் வெளியிட்டுள்ள புதிய விதிகள்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, வெறுப்பு, பிரிவினை மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் பல புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளதாக...

மெல்பேர்ணில் கார் திருட்டில் ஈடுபட்ட இரு சிறுமிகள்

மெல்பேர்ணில் கார் திருட்டு தொடர்பாக இரண்டு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று அதிகாலை 2 மணியளவில் பிரஸ்டனில் உள்ள பெல் தெருவில் திருடப்பட்ட நீல நிற டொயோட்டா...

NSW-வில் Pub மீது மோதிய கார் – 7 பேர் காயம்

நியூ சவுத் வேல்ஸின் Capertee-இல் உள்ள ராயல் ஹோட்டல் Pub மீது கார் மோதியதில் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை...