Sydneyஆஸ்திரேலிய கடலில் உலகின் மிகப்பெரிய தாவரம்

ஆஸ்திரேலிய கடலில் உலகின் மிகப்பெரிய தாவரம்

-

ஆஸ்திரேலிய கடலில் 4,500 ஆண்டுகள் பழமையான உலகின் மிகப்பெரிய தாவரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள ஷார்க் விரிகுடாவில் கடலுக்கு அடியில் உலகின் மிகப்பெரிய தாவரம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் மேற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் இந்த அபூர்வமான தாவரத்தை கண்டுபிடித்தனர்.

மரபணுக் கருவிகளை பயன்படுத்தி ஷார்க் விரிகுடாவில் உள்ள கடற்புல்வெளிகளின் பன்முகத்தன்மையை அறிந்துகொள்ள முயன்றபோது, 180 கி.மீ. பரப்பளவில் பரந்து விரிந்துள்ள இந்த தாவரத்தை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் ஆச்சரியத்துடன் கூறுகின்றனர். இந்த கடற்புல் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அவர்கள் மதிப்பிட்டுள்ளனர்.

பிளிண்டர்ஸ் பல்கலைக்கழகத்தின் சூழலியல் நிபுணரும், ஆய்வின் இணை ஆசிரியருமான மார்ட்டின் பிரீட் கூறுகையில், “இந்த ஒற்றைத் தாவரம் உண்மையில் மலட்டுத்தன்மையுடையதாக இருக்கலாம். அதற்கு மகரந்த சேர்க்கை இல்லை. இருப்பினும் அது எப்படி இவ்வளவு காலம் உயிர் வாழ்கிறது மற்றும் செழித்து வளர்கிறது என்பது உண்மையில் புதிராக உள்ளது” என்றார்.

Latest news

குழந்தை பராமரிப்பு மானியம் (CCS) இடைவெளி கட்டணம் தொடர்பான புதிய சட்டம்

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல், ஆஸ்திரேலியாவில் குடும்ப பகல்நேர பராமரிப்பு (FDC) மற்றும் வீட்டு பராமரிப்பு (IHC) சேவைகளுக்கான குழந்தை பராமரிப்பு...

எதிர்க்கட்சி கூட்டணிக்குள் தீவிரமடைந்து வரும் கருத்து மோதல்கள்

இந்த வார அதிர்ச்சியூட்டும் கூட்டணிப் பிளவுக்குப் பிறகு, லிபரல் கட்சியை வழிநடத்தும் தனது நிலையில் "முழு நம்பிக்கையுடன்" இருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் Sussan Ley கூறுகிறார். கூட்டணி...

நியூசிலாந்து நிலச்சரிவில் சிக்கிய பல பள்ளிக் குழந்தைகளை இன்னும் காணவில்லை

நேற்றைய நிலச்சரிவில் காணாமல் போனவர்களைத் தேடும் பணியை நியூசிலாந்து அவசர சேவைகள் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது. நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள Mount Maunganui அடிவாரத்தில்...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி

நியூ சவுத் வேல்ஸில் உள்ள Lake Cargelligo-இல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொவிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இடத்தில் மர்ம நபரொருவர் நடத்திய இந்தத் துப்பாக்கிச்சூட்டில் இரு...

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசியாவில் கண்டுபிடிப்பு

உலகின் பழமையான குகை ஓவியம் இந்தோனேசிய கடற்கரையில் உள்ள முனா தீவில் ஒரு குகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது ஒரு சுண்ணாம்புக் குகையின் சுவரில்...