Newsகச்சைதீவில் கைவைப்பது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்

கச்சைதீவில் கைவைப்பது இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும்

-

கச்சைதீவை மீளப்பெறுவதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிப்பதாக வடமாகாண அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.

நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், “கச்சதீவு மீட்பு தொடர்பாக தமிழக மீனவர் சார்ந்த கருத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தற்கு அண்ணாமலையும் ஆதரித்து இருந்தார்.

ஆனால் உண்மையான நிலை எனனவென்றால் ஸ்டாலினை பொறுத்தவரையில் உலகத் தமிழர்களின் தலைவராக நாம் பார்க்கின்றோம்.

உலகத் தமிழர்களாக பார்க்கின்ற பொழுது இலங்கைத் தமிழர்களும் ஒன்றுதான் இந்தியா தமிழர்களும் ஒன்றுதான்.

தமிழக மீனவர்களை தவிர நம் நாட்டினுடைய தெற்குப்பகுதி மீனவர்களுடைய பாதிப்பும் எங்களுடைய வடக்கு மீனவர்களுக்கு இருக்கின்றது.

மட்டக்களப்பிலிருந்து முல்லைத்தீவு வரையான கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் எங்களுடைய வளங்களை சுரண்டிக் கொண்டு செல்கின்றார்கள்.

இதனால் எங்களுடைய தமிழ் மீனவர்களும் பாதிக்கப்படுகின்றார்கள். இதன்காரணமாக சுயாதீனமாக நம்மவர்கள் கடற்தொழில் மேற்கொள்வதற்கு நெடுந்தீவு பகுதி கச்சதீவு பகுதிகளே களமாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் கச்சதீவை மீளப்பெறுவது என்பது எங்களுடைய மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதனை மிகவும் அனுதாபத்துடன் ஸ்டாலினிடம் தெரிவிக்கிறேன்” என்றார்.

Latest news

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...

இணையம் வழியாக நடந்த ஒரு பயங்கரமான குழந்தை துஷ்பிரயோக வலையமைப்பு

பிலிப்பைன்ஸை மையமாகக் கொண்ட ஒரு குழந்தை பாலியல் துஷ்பிரயோக வளையத்தை முறியடித்து, ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை 92 குழந்தைகளை மீட்பதில் வெற்றி பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகளில் ஈடுபட்ட...

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...

குழந்தைகள் பாதுகாப்புத் துறையில் மறைந்திருக்கும் நெருக்கடிக்கு நீண்டகால தீர்வு தேவை

குழந்தை பராமரிப்பு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான மத்திய அரசின் உத்தரவின் காரணமாக, நாடு முழுவதும் உள்ள குழந்தை பராமரிப்பு சேவைகள் கடுமையான அழுத்தத்தில் உள்ளதாக குழந்தை...

Shenzhen – Melbourne நேரடி விமான சேவை ஆரம்பம்

விக்டோரியாவின் சுற்றுலா சந்தைக்கு ஆண்டுக்கு 95,000 க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை புதிய நேரடி சீன விமானப் பாதை கொண்டு வரும் என்றும், இது மாநிலத்தின்...

myGov-ஐ Update செய்தால், 3 நாட்களில் பணம் பெறுவீர்கள்

கிட்டத்தட்ட ஒரு மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு அரசாங்கம் இன்னும் உரிமை கோரப்படாத மருத்துவப் பலன்களை வைத்திருப்பதாக Services Australia வெளிப்படுத்தியுள்ளது. myGov அமைப்பில் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களைப்...