Cinemaமுதல் நாளில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு...கமலுக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி

முதல் நாளில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு…கமலுக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி

-

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. தமிழகத்தில் மட்டும் 650 க்கும் அதிகமான தியேட்டர்களில் விக்ரம் படம் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் நாளே விக்ரம் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் சர்வதேச அளவிற்கு இருப்பதாக அனைவரும் பாராட்டி உள்ளனர். இந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனை, உதயநிதி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் விக்ரம் நிச்சயம் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest news

2026 முதல் விக்டோரியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வார இறுதிப் பயணங்கள்

விக்டோரியா மாநிலம் அடுத்த ஆண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் இலவச பொதுப் போக்குவரத்து சேவைகளை வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் "Fairer Fares for...

ஹொங்கொங், சிங்கப்பூரில் வேகமடையும் கொரோனா புதிய அலை

ஆசிய நாடுகளில் கொரோனா புதிய அலை பரவிவரும் நிலையில் ஹொங்கொங் மற்றும் சிங்கப்பூரில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2019-ல் சீனாவில் தோன்றிய கொரோனா...

NSW நெடுஞ்சாலையில் நூற்றுக்கணக்கான கார்களை சேதப்படுத்திய உலோகத் துண்டுகள்

நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு பெரிய சாலையில் சுமார் 840 கிலோகிராம் உலோகத் துண்டுகளை ஒரு லாரி கொட்டியதில், 300க்கும் மேற்பட்ட கார்களின் டயர்கள்...

NSW நெடுஞ்சாலையில் நடந்த பயங்கர விபத்து – இருவர் உயிரிழப்பு 

NSW தூர தெற்கு கடற்கரையில் நடந்த ஒரு பயங்கர நெடுஞ்சாலை விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். இன்று பிற்பகல் 1.45 மணியளவில் Eden பகுதியில் உள்ள Princes...

பிரிஸ்பேர்ணில் ஐ.நா. அமைதி காக்கும் பயிற்சி மையத்தைத் தொடங்கியது ஆஸ்திரேலியா

பசிபிக் தீவு காவல்துறையினரை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படையினராக மாற்றுவதற்கு பயிற்சி அளிக்கும் உலகின் முதல் திட்டத்தை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ளது. ஆஸ்திரேலியா வெறும் அண்டை...

சிட்னி துறைமுகத்தில் பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறில் ஏறிய நபர்

சிட்னி துறைமுகத்தில் ஒரு பயணக் கப்பலின் நங்கூரமிடும் கயிறுகளில் ஏறிய ஒரு நபரை பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று பிற்பகல் 3 மணியளவில், Carnival Adventure பயணக் கப்பலை...