Cinemaமுதல் நாளில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு...கமலுக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி

முதல் நாளில் விக்ரம் படத்திற்கு கிடைத்த வரவேற்பு…கமலுக்கு வாழ்த்து சொன்ன உதயநிதி

-

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் உலகம் முழுவதும் ரிலீசாகி உள்ளது. விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வெளியிட்டது. தமிழகத்தில் மட்டும் 650 க்கும் அதிகமான தியேட்டர்களில் விக்ரம் படம் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் நாளே விக்ரம் படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. படம் சர்வதேச அளவிற்கு இருப்பதாக அனைவரும் பாராட்டி உள்ளனர். இந்த சமயத்தில் நடிகர் கமல்ஹாசனை, உதயநிதி சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். அத்துடன் அவர் வெளியிட்டுள்ள பதிவில், உலகநாயகன் கமல்ஹாசன் சாரின் விக்ரம் திரைப்படம் இன்று வெளியாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சாரை நேரில் சந்தித்து ரெட் ஜெயிண்ட் மூவிஸ் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தோம். கமல் சாரின் கலைப் பயணத்தில் விக்ரம் நிச்சயம் மிகப் பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தும் என குறிப்பிட்டுள்ளார்.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...