News4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

-

நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களாக பிரியா – முருகப்பன் (பிலோலா குடும்பம்) குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின்மத்திய நகரான பிலோலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்களான கோபிகா (6), மற்றும் தர்ணிகா(4) ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பிலோலாவை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற குறித்த குடும்பத்தினர், அங்கு தங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டதுடன், மெல்போர்னிலிருந்து கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் அவர்கள் பிலோலாவுக்குத் திரும்புவதற்கு வழி வகுத்துள்ளது.

இந்த குடும்பம் வீடு திரும்புவதில் தாம் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு பிரதமர் என்டனி அல்பானீஸ் தெரிவித்தார்.

மார்ச் 2018 இல் பிலோலாவிலிருந்து இக்குடும்பம் அழைத்துச் செல்லப்பட்டு, குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டது.

அவர்களைத் மீண்டும் பிலோலாவுக்கு அழைத்துவருவதற்காக உள்ளூர் மக்கள்1,500 நாட்களுக்கும் மேலாக பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.

குடும்பத்திற்கு ஆதரவாக ஹோம் டு பிலோ பிரசாரகர் ஏஞ்சலா ஃபிரடெரிக்கின் Change.org மனுவில் கிட்டத்தட்ட 600,000 பேர் கையெழுத்திட்டனர்.

மேலும் 53,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், 2019 இல், இக்குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் கூட்டு முயற்சியை நீதிமன்றங்கள் தடுத்தன.

2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அவர்களை பெர்த்தில் உள்ள சமூக காவலுக்கு மாற்றும் வரை, அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இடைக்கால உள்விவகார அமைச்சர், ஜிம் சால்மர்ஸ், இடம்பெயர்தல் சட்டத்தின் 195A பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தை மீண்டும் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தார்.

Latest news

தேர்தல் செலவு வரம்பை எதிர்த்து ஆஸ்திரேலிய கோடீஸ்வரர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஆஸ்திரேலியாவில் அரசியல் கட்சிகளுக்கு நிதி நன்கொடைகளை வரம்பிடுவதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர கோடீஸ்வர தொழிலதிபர் கிளைவ் பால்மர் தயாராகி வருகிறார். இந்தப்...

நியூசிலாந்து ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாறுமா?

நியூசிலாந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்திரேலியாவின் 7வது மாநிலமாக மாற வேண்டுமா என்பது குறித்த நீண்டகால விவாதம் மீண்டும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகளாவிய அரசியல் சூழ்நிலைகளை எதிர்கொண்டு நியூசிலாந்தின் பாதுகாப்பை...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...

உலகில் புற்றுநோய் குறித்த புதிய WHO அறிக்கை

உலக சுகாதார நிறுவனம் உலகளாவிய புற்றுநோய் வழக்குகள் மற்றும் புற்றுநோய் குறித்த புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. 10 புற்றுநோய் நோயாளிகளில் 4 பேருக்கு புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல்...

கார் விபத்தில் பெரிய அளவிலான துப்பாக்கி கடத்தல் அம்பலம்

சிட்னியின் மத்திய கடற்கரையில் நடந்த ஒரு கார் விபத்தைத் தொடர்ந்து, பெரிய அளவிலான போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி கடத்தல் நடவடிக்கையை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். விபத்துக்குப் பிறகு சந்தேகத்திற்கிடமான...

ஆஸ்திரேலியாவில் 400,000 ஆக உயர்ந்துள்ள டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை

ஆஸ்திரேலியாவின் வயதான மக்கள் தொகை அதிகரித்து வருவதால், டிமென்ஷியா நோயாளிகளின் எண்ணிக்கை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது. சமீபத்திய தரவுகளின்படி, 445,000க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்கள் தற்போது...