News4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

4 வருடங்களின் பின் பிலோலா திரும்பிய பிரியா – முருகப்பன் குடும்பம்!

-

நான்கு வருடங்களுக்கும் மேலாக தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த இலங்கையைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களாக பிரியா – முருகப்பன் (பிலோலா குடும்பம்) குடும்பத்தினர் இறுதியாக குயின்ஸ்லாந்தின்மத்திய நகரான பிலோலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

பிரியா, அவரது கணவர் நடேஸ் மற்றும் ஆஸ்திரேலியாவில் பிறந்த அவர்களது மகள்களான கோபிகா (6), மற்றும் தர்ணிகா(4) ஆகியோர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பிற்பகல் பிலோலாவை சென்றடைவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையிலிருந்து புகலிடம் கோரி ஆஸ்திரேலியாவுக்கு சென்ற குறித்த குடும்பத்தினர், அங்கு தங்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் கடுமையான சட்ட நடவடிக்கைகளை எதிர்கொண்டதுடன், மெல்போர்னிலிருந்து கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டனர்.

எனினும், அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றம் அவர்கள் பிலோலாவுக்குத் திரும்புவதற்கு வழி வகுத்துள்ளது.

இந்த குடும்பம் வீடு திரும்புவதில் தாம் பெருமிதம் கொள்வதாக அந்நாட்டு பிரதமர் என்டனி அல்பானீஸ் தெரிவித்தார்.

மார்ச் 2018 இல் பிலோலாவிலிருந்து இக்குடும்பம் அழைத்துச் செல்லப்பட்டு, குடிவரவு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டது.

அவர்களைத் மீண்டும் பிலோலாவுக்கு அழைத்துவருவதற்காக உள்ளூர் மக்கள்1,500 நாட்களுக்கும் மேலாக பிரசாரத்தை முன்னெடுத்திருந்தனர்.

குடும்பத்திற்கு ஆதரவாக ஹோம் டு பிலோ பிரசாரகர் ஏஞ்சலா ஃபிரடெரிக்கின் Change.org மனுவில் கிட்டத்தட்ட 600,000 பேர் கையெழுத்திட்டனர்.

மேலும் 53,000 க்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் நாடு முழுவதும் உள்ள ஆதரவாளர்களிடமிருந்து கிடைக்கப்பெற்றன.

இந்நிலையில், 2019 இல், இக்குடும்பத்தை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் கூட்டு முயற்சியை நீதிமன்றங்கள் தடுத்தன.

2021 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், குடிவரவு அமைச்சர் அலெக்ஸ் ஹாக் அவர்களை பெர்த்தில் உள்ள சமூக காவலுக்கு மாற்றும் வரை, அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிறிஸ்துமஸ் தீவு தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, இடைக்கால உள்விவகார அமைச்சர், ஜிம் சால்மர்ஸ், இடம்பெயர்தல் சட்டத்தின் 195A பிரிவின் கீழ் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி குடும்பத்தை மீண்டும் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தார்.

Latest news

14-மணிநேர Optus செயலிழப்பிற்கு பண இழப்பீடு வழங்க முடிவு

கடந்த நவம்பர் 8ஆம் திகதி சுமார் 14 மணி நேரத்துக்கும் மேலாக ஏற்பட்ட சேவைத் தோல்வியால் சிரமத்துக்குள்ளான வாடிக்கையாளர்களுக்கு இழப்பீடு வழங்கத் தொடங்கியுள்ளதாக Optus Communications...

ஓய்வூதிய பலன் தாமதங்கள் குறித்த செனட் விசாரணை

ஓய்வூதிய பலன்களைப் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து விசாரணை நடத்த செனட் நகர்ந்துள்ளது. குறிப்பாக பழைய கருணைத் தொகை மற்றும் காப்பீட்டுத் தொகையை செலுத்தாதது தொடர்பான புகார்களின்...

9/10 ஆஸ்திரேலியர்கள் பூர்வீக பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என கூறுகிறார்கள்

பழங்குடியின மக்கள் வாக்கெடுப்பு தோல்வியடைந்தாலும், பழங்குடியின மக்களின் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என பெரும்பான்மையான ஆஸ்திரேலியர்கள் நம்புவதாக புதிய கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. 10...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

ஆஸ்திரேலியா முழுவதும் நாஜி சல்யூட்களை கிரிமினல் குற்றமாக மாற்ற ஏற்பாடுகள்

நாட்டில் யூத எதிர்ப்பு மற்றும் இனவெறி அதிகரித்து வருவதால், நாஜி வணக்கத்தை குற்றமாக்குவதில் மத்திய அரசு கவனம் செலுத்தியுள்ளது. நாஜி நெறிமுறைகளை நாடு முழுவதும் அமல்படுத்துவது எதிர்காலத்தில்...

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த ஊதிய உயர்வு உள்ள துறைகள் இதோ!

கடந்த 12 மாதங்களில் அவுஸ்திரேலியாவில் அதிக மற்றும் குறைந்த சம்பள அதிகரிப்புகளை கொண்ட துறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சமூக சேவைகள் மற்றும் அபிவிருத்தி தொடர்பான வேலைகளில் சம்பளம் 08...