Newsஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 91 பேருக்கு நேர்ந்த கதி!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 91 பேருக்கு நேர்ந்த கதி!

-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்றதாக 91 பேரை இருவேறு நடவடிக்கைகளின் மூலம் நேற்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் மாரவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் முதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் சிலாபம் கடல் பகுதியில் மீன்பிடி படகிலிருந்த 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் என 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள் அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நிலையில் கடற்படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிற்றூர்தியொன்றையும் மகிழுந்து ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்கரையில் நேற்று பிற்பகல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை கட்டளைப்பிரிவின் குழுவினர் சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன்போது, 58 ஆண்கள், 5 பெண்கள், 6 குழந்தைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் என ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், பல நாள் மீன்பிடிக் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாரவிலவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிலாபம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகவும் மிகவும் ஆபத்தான வகையிலும் நாட்டிலிருந்து வெளியேற்ற முயலும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது உயிர்களையும் உடமைகளையும் பணயம் வைப்பதைத் தவிர்க்குமாறும் கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

மேலும், இதற்காக பயன்படுத்தப்படும் படகுகள் காலாவதியான மீன்பிடி படகுகள் எனவும், அவற்றின் ஊடாக சட்டவிரோதமாக குடிபெயர முற்படுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

Latest news

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கிறிஸ்துமஸ் மகிழ்ச்சியைக் கொண்டாடும் பெத்லகேம்

காசா பகுதியில் போர் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக கிறிஸ்துமஸ் மரம் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, இயேசு கிறிஸ்துவின் பாரம்பரிய பிறந்த இடத்தில்...

கிறிஸ்துமஸ் பரிசு பார்சல்கள் பற்றிய எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் பரிசுப் பொட்டலங்களை ஆன்லைனில் அனுப்பும்போது வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்குமாறு ஆஸ்திரேலியா போஸ்ட் எச்சரித்துள்ளது. கிறிஸ்துமஸ் பரிசுகள் அதிக அளவில் விநியோகம் மற்றும் ஆண்டு இறுதி விற்பனையுடன்...

காட்டுத் தீ இருந்தபோதிலும் வெளியேற மறுக்கும் Dolphin Sands குடியிருப்பாளர்கள்

காட்டுத்தீ ஏற்படும் அபாயம் தொடர்ந்து இருந்தாலும், டாஸ்மேனியாவின் Dolphin Sands-இல் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பத் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது . காட்டுத்தீக்குப் பிறகு சில நாட்களுக்குப்...

NAPLAN League Tables குறித்து கல்வித் தலைவர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு

NAPLAN மதிப்பெண்களின் அடிப்படையில் பள்ளிகளை தரவரிசைப்படுத்துவதை நிறுத்துமாறு கல்வித் தலைவர்கள் News Corp Australia-இடம் வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளனர். தேசிய எழுத்தறிவு மற்றும் எண் மதிப்பீட்டுத் திட்டம்...

2 வருட சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் கடலுக்குள் விடப்பட்ட ‘Dennis’

மறுவாழ்வு அளிக்கப்பட்ட, அழிந்து வரும் நிலையில் உள்ள hawksbill ஆமை ஒன்று, கிரேட் பேரியர் ரீஃபில் மீண்டும் விடப்பட்டுள்ளது. Dennis என்று பெயரிடப்பட்ட கடல் ஆமை, ghost...

கோவிட்-19 போல உலகைப் பாதிக்கும் மற்றுமொரு வைரஸ்

கோவிட்-19 வைரஸுக்குப் பிறகு உலகில் அடுத்த தொற்றுநோயாக பறவைக் காய்ச்சல் இருக்கலாம் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். H5N5 பறவைக் காய்ச்சல் விகாரத்தால் முதல் மனித மரணத்திற்குப் பிறகு...