Newsஇலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 91 பேருக்கு நேர்ந்த கதி!

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்ற 91 பேருக்கு நேர்ந்த கதி!

-

இலங்கையிலிருந்து சட்டவிரோதமாக படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்க முயன்றதாக 91 பேரை இருவேறு நடவடிக்கைகளின் மூலம் நேற்று இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

புத்தளம் மாவட்டத்தின் மாரவில பகுதியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் முதலில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் சிலாபம் கடல் பகுதியில் மீன்பிடி படகிலிருந்த 76 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடல்மார்க்கமாக சட்டவிரோதமாக தப்பிச்செல்ல முயன்றவர்கள் என சந்தேகிக்கப்படும் 13 ஆண்கள், ஒரு சிறுவன் மற்றும் ஆட்கடத்தலுடன் தொடர்புடைய நபர் என 9 முதல் 58 வயதுக்குட்பட்ட 15 ஆண்கள் அப்பகுதியில் உள்ள விடுதியொன்றில் தங்கியிருந்து நிலையில் கடற்படையின் பொறுப்பில் எடுக்கப்பட்டனர்.

அத்துடன், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சிற்றூர்தியொன்றையும் மகிழுந்து ஒன்றையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இதேவேளை, சிலாபம் கடற்கரையில் நேற்று பிற்பகல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த கடற்படை கட்டளைப்பிரிவின் குழுவினர் சந்தேகத்திற்கிடமான பல நாள் மீன்பிடி படகொன்றை அவதானித்து அதனை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

அதன்போது, 58 ஆண்கள், 5 பெண்கள், 6 குழந்தைகள் மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் என ஒன்று முதல் 62 வயதுக்குட்பட்ட 76 பேர் கடற்படையினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டதுடன், பல நாள் மீன்பிடிக் படகும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

மாரவிலவில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் யாழ்ப்பாணம், திருகோணமலை, முல்லைத்தீவு மற்றும் மாரவில ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிலாபம் கடற்பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம், கல்பிட்டி, மாரவில, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டு, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாகவும் மிகவும் ஆபத்தான வகையிலும் நாட்டிலிருந்து வெளியேற்ற முயலும் ஆட்கடத்தல்காரர்களுக்கு இரையாகி தமது உயிர்களையும் உடமைகளையும் பணயம் வைப்பதைத் தவிர்க்குமாறும் கடற்படை பொதுமக்களை கேட்டுக் கொள்கிறது.

மேலும், இதற்காக பயன்படுத்தப்படும் படகுகள் காலாவதியான மீன்பிடி படகுகள் எனவும், அவற்றின் ஊடாக சட்டவிரோதமாக குடிபெயர முற்படுவது அதிக ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் கடற்படை எச்சரித்துள்ளது.

Latest news

கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தும் புதிய AI தொழில்நுட்பம்

செய்யறிவு தொழில்நுட்பங்கள் தற்போது அதிக வளர்ச்சியைக் கண்டு, பல வகையான செய்யறிவு தொழில்நுட்பங்கள் இப்போது இணையத்தில் பயன்பாட்டில் உள்ளன. அந்த வரிசையில் கூகுள் நிறுவனம் தனது...

2024 இல் ஆஸ்திரேலிய நுகர்வோர் சட்டத்தை மீறுபவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்கள்

ஆன்லைன் விளம்பரங்களில் ஃபேஷன் நட்சத்திரங்களைச் சித்தரிப்பதால் நுகர்வோர் தவறாக வழிநடத்தப்படுவதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நுகர்வோர் ஆணையம் ஃபேஷன் நட்சத்திரங்களின் 118 சமூக ஊடக கணக்குகளை...

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படும் விக்டோரியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அறிக்கைகள் தெரிவிக்கின்றன. சமீபத்திய விக்டோரியன் புற்றுநோய் பதிவேட்டின் தரவுகளின்படி, குறைந்தது 6660 விக்டோரியர்கள் கண்டறியப்படாத புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். புற்று...

பணவீக்கத்திற்கு முதன்மைக் காரணம் மத்திய மற்றும் மாநில அரசுகளின் அதிகப்படியான செலவுதான்

மத்திய அரசு - மாநில மற்றும் உள்ளூர் அரசுகளின் அதிகப்படியான செலவுகள் நாட்டின் பணவீக்கத்தை நேரடியாகப் பாதித்துள்ளதாக முன்னணி கடன் மதிப்பீட்டு நிறுவனம் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. கோவிட்...

மத்திய அரசுக்கும் விக்டோரியா அரசுக்கும் இடையே கருத்து மோதல்கள் – பல தேசிய பூங்காக்கள் ஆபத்தில்

முர்ரே-டார்லிங் பேசின் திட்டம் தொடர்பாக மத்திய அரசுக்கும் விக்டோரியா மாநில அரசுக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் பல தேசிய பூங்காக்களை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளன. விக்டோரியா மாநிலத்தின் உயிரியல்...

பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்களுக்கு ஒரு குறுஞ்செய்தி ஆதரவு சேவை

குடும்ப வன்முறை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து தப்பியவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் நிவாரணம் வழங்க புதிய ஆலோசனை சேவை தொடங்கப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் கடினமான பகுதிகளில் வசிக்கும்...