Articleபிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா...யார் இவர் ?

பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா…யார் இவர் ?

-

பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் ஸ்ரீதர் சேனா பங்கேற்று, பிரிஸ்பேன் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து படைக்க உள்ளார். யார் இந்த ஸ்ரீதர் சேனா என்பதை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கள் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை வென்றவர் தான் இந்த ஸ்ரீதர் சேனா. முன்னதாக சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளரான ஸ்ரீதர் சேனாவிற்கு தனது கைகளாலேயே வெற்றி கோப்பையை வழங்கினார் இசையமைப்பாளர் அனிருத்.

ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஸ்ரீதர் சேனாவை, தான் இசையமைத்து, கதாநாயகனாக நடித்த அன்பறிவு என்ற படத்தில் பாடகராக அறிமுகம் செய்து வைத்தார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இருந்தாலும் ஸ்ரீதர் சேனா விரைவில் அனிருத்தின் இசையில் ஒரு பாடல் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

$4,500 மதிப்புள்ள புற்றுநோய் மருந்தை $35க்கு வழங்கத் தயாராகும் ஆஸ்திரேலிய அரசாங்கம் 

மார்பகப் புற்றுநோய் நோயாளிகளுக்குப் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய மருந்தான டுகாடினிப்பை, எதிர்காலத்தில் மருந்து நன்மைகள் திட்டத்தில் (PBS) சேர்க்க மத்திய அரசு தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இது செயல்படுத்தப்பட்டால்,...

“போராட்டங்கள் தடைசெய்யப்பட்டுள்ளன” – NSW பிரதமர் கடுமையான விதிகள்

Bondi கடற்கரை பயங்கரவாத தாக்குதலின் ஒரு வார ஆண்டு நிறைவையொட்டி போராட்டங்களைத் திட்டமிடும் எவருக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நியூ சவுத் வேல்ஸ்...

Bondi நினைவேந்தல் – கட்டிடங்களின் உச்சியில் துப்பாக்கி சுடும் வீரர்கள்

ஆஸ்திரேலியாவில் Bondi நினைவேந்தல் நிகழ்வை கண்காணிக்க, காவல்துறையினர் துப்பாக்கிகளுடன் கட்டிடங்களின் உச்சியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.  15 உயிர்களை பலி வாங்கிய போண்டி துயர சம்பவம் நிகழ்ந்து ஒரு வாரம்...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

குழந்தைகளுக்கான ஹார்மோன் சிகிச்சைகளை நிறுத்த NT அரசாங்கம் முடிவு

வடக்குப் பிரதேச அரசாங்கம், அந்தப் பிரதேசத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு அரசாங்கத்தால் நிதியளிக்கப்படும் பாலியல்-மாற்ற ஹார்மோன் சிகிச்சை மற்றும் 'பருவமடைதல் தடுப்பான்கள்' வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது. சுகாதார...

பிரபலமான கோல்ட் கோஸ்ட் பூங்காவில் பெண் ஒருவர் மீது தாக்குதல்

கடந்த வெள்ளிக்கிழமை மாலை 5:30 மணியளவில் பர்லீ ஹெட்ஸ் தேசிய பூங்காவில் நடந்து சென்று கொண்டிருந்த 38 வயது பெண் ஒருவர், அடையாளம் தெரியாத ஒருவரால்...