Articleபிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா...யார் இவர் ?

பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா…யார் இவர் ?

-

பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் ஸ்ரீதர் சேனா பங்கேற்று, பிரிஸ்பேன் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து படைக்க உள்ளார். யார் இந்த ஸ்ரீதர் சேனா என்பதை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கள் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை வென்றவர் தான் இந்த ஸ்ரீதர் சேனா. முன்னதாக சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளரான ஸ்ரீதர் சேனாவிற்கு தனது கைகளாலேயே வெற்றி கோப்பையை வழங்கினார் இசையமைப்பாளர் அனிருத்.

ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஸ்ரீதர் சேனாவை, தான் இசையமைத்து, கதாநாயகனாக நடித்த அன்பறிவு என்ற படத்தில் பாடகராக அறிமுகம் செய்து வைத்தார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இருந்தாலும் ஸ்ரீதர் சேனா விரைவில் அனிருத்தின் இசையில் ஒரு பாடல் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...

பராக் மற்றும் மிஷேல் ஒபாமாவை அவமதிக்கும் வீடியோவைப் பகிர்ந்த டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் முன்னாள் அதிபர்கள் பராக் ஒபாமா மற்றும் மிஷேல் ஒபாமாவை குரங்குகளாக சித்தரிக்கும் காணொளியைப் பகிர்ந்து,...

சேமிப்புக் கணக்குகளுக்கான வட்டி விகிதங்களை அதிகரித்துள்ள இரு பெரிய வங்கிகள்

ரிசர்வ் வங்கி ரொக்க விகிதத்தை உயர்த்திய பிறகு, ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய வங்கிகளான காமன்வெல்த் வங்கி (CBA) மற்றும் Westpac ஆகியவை தேர்ந்தெடுக்கப்பட்ட சேமிப்புக் கணக்குகளுக்கான...