Articleபிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா...யார் இவர் ?

பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா…யார் இவர் ?

-

பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் ஸ்ரீதர் சேனா பங்கேற்று, பிரிஸ்பேன் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து படைக்க உள்ளார். யார் இந்த ஸ்ரீதர் சேனா என்பதை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கள் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை வென்றவர் தான் இந்த ஸ்ரீதர் சேனா. முன்னதாக சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளரான ஸ்ரீதர் சேனாவிற்கு தனது கைகளாலேயே வெற்றி கோப்பையை வழங்கினார் இசையமைப்பாளர் அனிருத்.

ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஸ்ரீதர் சேனாவை, தான் இசையமைத்து, கதாநாயகனாக நடித்த அன்பறிவு என்ற படத்தில் பாடகராக அறிமுகம் செய்து வைத்தார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இருந்தாலும் ஸ்ரீதர் சேனா விரைவில் அனிருத்தின் இசையில் ஒரு பாடல் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

கிறிஸ்துமஸ் இசை நிகழ்ச்சிக்குப் பிறகு மேற்கு ஆஸ்திரேலியாவில் தொற்று நோய் அபாயம்

மேற்கு ஆஸ்திரேலிய சுகாதார அதிகாரிகள் தட்டம்மை அபாயம் குறித்து சிறப்பு எச்சரிக்கையை விடுத்துள்ளனர். பெர்த்தில் கிறிஸ்துமஸ் கரோல் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒருவருக்கு தட்டம்மை நோய்...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

பார்சிலோனா கால்பந்து வீரர் சுட்டுக் கொலை

ஈக்குவடாரில் உள்ள பார்சிலோனா டி குவாயாகில் கிளப்பின் கால்பந்து வீரரான Mario Alberto Pineida Martínez சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார். Mario Alberto Pineida Martínez சர்வதேச...

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...