Articleபிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா...யார் இவர் ?

பிரிஸ்பேன் ரசிகர்களை சந்திக்க வரும் ஸ்ரீதர் சேனா…யார் இவர் ?

-

பிரிஸ்பேனில் வரும் ஆகஸ்ட் 28 ம் தேதி இன்னிசை மாலை 2022 என்ற நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். சிறப்பு விருந்தினர்களில் ஒருவராக பாடகர் ஸ்ரீதர் சேனா பங்கேற்று, பிரிஸ்பேன் ரசிகர்களுக்கு இன்னிசை விருந்து படைக்க உள்ளார். யார் இந்த ஸ்ரீதர் சேனா என்பதை தான் நாம் இங்கே பார்க்க போகிறோம்.

விஜய் டிவியில் மிக பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். கடந்த ஆண்டு நடைபெற்ற சூப்பர் சிங்கள் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டு, டைட்டிலை வென்றவர் தான் இந்த ஸ்ரீதர் சேனா. முன்னதாக சூப்பர் சிங்கர் சீசன் 8 ன் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளருக்கு பிரபல இசையமைப்பாளரான அனிருத்தின் இசையில் பாட வாய்ப்பு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதே போல் இறுதிப் போட்டியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றியாளரான ஸ்ரீதர் சேனாவிற்கு தனது கைகளாலேயே வெற்றி கோப்பையை வழங்கினார் இசையமைப்பாளர் அனிருத்.

ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஸ்ரீதர் சேனாவை, தான் இசையமைத்து, கதாநாயகனாக நடித்த அன்பறிவு என்ற படத்தில் பாடகராக அறிமுகம் செய்து வைத்தார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி. இருந்தாலும் ஸ்ரீதர் சேனா விரைவில் அனிருத்தின் இசையில் ஒரு பாடல் பாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest news

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு – ஆஸ்திரேலிய விமான போக்குவரத்துக்கு எச்சரிக்கை

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, வானில் சுமார் 2 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் பரவியதை அடுத்து, ஆஸ்திரேலியாவில் விமானப் போக்குவரத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் ஜாவா...

Ai சொல்வதையெல்லாம் உண்மையென்று நம்பக்கூடாது – சுந்தா் பிச்சை

செயற்கை நுண்ணறிவு (AI) செயலிகள் சொல்வதையெல்லாம் மக்கள் “கண்மூடித்தனமாக நம்பக் கூடாது” என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பாபெட்டின் தலைமை செயல் அதிகாரி சுந்தா் பிச்சை...

ஜப்பானில் பாரிய தீ விபத்து – 170 வீடுகள் தீக்கிரை

ஜப்பானில் உள்ள ஓய்டா நகரில் சுமார் 170 வீடுகள் தீ பற்றி எரிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துறைமுகத்தில் பரவிய தீ அருகில் இருந்து வீடுகளுக்கும் பரவியதாக முதற்கட்ட...

ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்களுக்கு மேல் வீணாக்கும் ஆஸ்திரேலிய பொது மருத்துவமனைகள்

ஆஸ்திரேலியாவில் உள்ள பொது மருத்துவமனைகள் ஆண்டுக்கு $1.2 பில்லியன் வீணாக்குவதாக ஒரு அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. Grattan Institute அறிக்கை, பொது மருத்துவமனைகள் தேவையற்ற நீண்ட மருத்துவமனை தங்குதல்...

சிட்னியில் சாலையை கடக்கும்போது கார் மோதி பலியான கர்ப்பிணிப் பெண்

ஆஸ்திரேலியாவில், சாலையைக் கடக்கும்போது கார் மோதி பலியானார் இந்தியப் பெண்ணொருவர். கூடுதல் சோகம் என்னவென்றால், அவர் எட்டு மாத கர்ப்பிணி! கடந்த வெள்ளிக்கிழமை, அதாவது, நவம்பர் மாதம்...

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta விடுத்துள்ள எச்சரிக்கை

சமூக ஊடகத் தடை நெருங்கி வருவதால் Meta, லட்சக்கணக்கான ஆஸ்திரேலிய இளைஞர்களுக்கு Instagram, Facebook மற்றும் Threads-இல் இருந்து தங்கள் தரவை "download or delete"...