Newsஅனைவருக்கும் நன்றி - ஆஸ்திரேலியர்களின் கோரிக்கையில் விடுதலையான பிரியா - நடேசன்...

அனைவருக்கும் நன்றி – ஆஸ்திரேலியர்களின் கோரிக்கையில் விடுதலையான பிரியா – நடேசன் குடும்பம்

-

அகதிக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பப்படுவதற்காக கடந்த நான்கு வருடங்களாக ஆஸ்திரேலியாவின் பல்வேறு தடுப்புமுகாம்களில் வைக்கப்பட்டிருந்த இலங்கைத் தமிழ் குடும்பமொன்று பெரும் போராட்டத்தின் பின்னர் இன்று அவர்கள் வாழ விரும்பிய இடத்திற்கு சென்று சேர்ந்திருக்கிறார்கள்.

தனித்தனியாக ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக வந்து, திருமணம் செய்துகொண்ட நடேசலிங்கம் மற்றும் பிரியா ஆகியோர், குவீன்ஸ்லாந்து Biloela பிரதேசத்தில் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்திருந்த நிலையில் – 2018 ஆம் ஆண்டு – அகதிக்கோரிக்கைகள் நிராகரிக்கப்பட்டு, குடிவரவு அமைச்சின் தடுப்பு முகாமுக்குக் கொண்டு செல்லப்பட்டார்கள். சட்ட ரீதியாக மேற்கொண்ட மேன் முறையீடுகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு, இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படவிருந்தனர்.

அவர்களது தடுப்புக்கு எதிராக, அவர்கள் வசித்த குவீன்ஸ்லாந்து Biloela பிரதேச மக்கள் உடனடியாகப் பெரும் போராட்டத்தை முன்னெடுத்தனர். “அமைதியான குடும்பமொன்றின் வாழ்வையும் இரண்டு குழந்தைகளின் எதிர்காலத்தையும் அரசு சீரழிக்கிறது” – என்று ஊடகங்கள் முதற்கொண்டு அனைத்துத் தரப்பிடமும் செய்திகளைக்கொண்டு சேர்த்தனர். நடேசலிங்கம் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு சுமார் ஆறு லட்சம் ஆஸ்திரேலியர்கள் கையெழுத்திட்டு அரசுக்கு அனுப்பிவைத்தார்கள். ஆஸ்திரேலிய அரசியல்வாதிகளுக்கு சுமார் ஐயாயிரத்து 300 தொலைபேசி அழைப்புக்கள் மற்றும் மின்னஞ்சல்கள் ஊடாக நடேசலிங்கம் குடும்பத்தினரை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.

தேசிய அளவில் இந்தக்குடும்பத்தின் பிரச்சினை விழிப்புணர்வானது. நடேசலிங்கம் – பிரியா குடும்பத்தினரை நாடு கடத்துவதற்கு நாட்களை எண்ணிக்கொண்டிருந்த ஆஸ்திரேலிய அரசின் முயற்சியை இயன்றளவு சட்ட ரீதியாக முறியடிப்பதற்கு, ஆஸ்திரேலியாவின் பல பொது அமைப்புக்கள் உதவ முன்வந்தன.

எல்லாவற்றையும் மீறி 2019 ஆம் ஆண்டு, நடேசலிங்கம் குடும்பத்தினர் சிறிலங்காவுக்கு விமானம் ஏற்றி அனுப்பப்பட்டனர். ஆனால, அவர்கள் சார்பில் சட்டத்தரணிகள் தாக்கல் செய்த, கடைசி நேர வழக்கின் மீது நீதிபதி வழங்கிய தீர்ப்பின் பேரில், டார்வினில் விமானம் தரித்தபோது, அதிலிருந்து இறக்கப்பட்ட நடேசலிங்கம் குடும்பத்தினர் மீண்டும் தடுப்புமுகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆஸ்திரேலிய அகதிகள் நல அமைப்பினர், நடேசலிங்கம் குடும்பத்தினர் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாம்கள் அனைத்தினதும் முன்னிலையில் தொடர்ச்சியாகப் போராட்டம் நடத்தினார்கள். அவர்களது விடுதலையைத் தொடர்ந்து வலியுறுத்தினார்கள்.

இந்தக் காலப்பகுதியில், குவீன்ஸ்லாந்துக்குச் சென்றிருந்த அப்போதைய எதிர்க்கட்சித்தலைவரும் இப்போதைய பிரதமருமான அன்ரனி அல்பனீஸி, லேபர் கட்சி ஆட்சிக்கு வந்தால், இந்தக் குடும்பத்தினை நிச்சயம் தடுப்புமுகாமிலிருந்து விடுதலை செய்து, குவீன்ஸ்லாந்து பிரதேசத்தில் வாழ அனுமதி வழங்குவேன் என்று உறுதியளித்தார்.

அந்த உறுதிமொழியின் பிரகாரம், நடேசலிங்கம் குடும்பத்தினரை குவீன்லாந்து பிரதேசத்தில் வசிப்பதற்கு, அரசு அனுமதியளிப்பதாக லேபர் அரசின் குடிவரவு அமைச்சர் கடந்த வாரம் அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, நடேசலிங்கம் குடும்பத்தினர் பேர்த்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று குவீன்ஸ்லாந்துக்கு கொண்டுவரப்பட்டனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...