Newsநீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

-

பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு ஆஸ்திரேலியா இழப்பீடு வழங்கவிருக்கிறது.

இருநாட்டிற்கும் இடையே கசப்படைந்துள்ள உறவைச் சரிசெய்ய அது உதவும் என்று கான்பெரா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) இன்று (11 ஜூன்) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இழப்பீடு குறித்து அறிவித்தார்.

பிரெஞ்சு ராணுவக் கப்பல் குழுமமான Naval Group-க்குச் சுமார் 583 மில்லியன் டொலர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட பல பில்லியன் டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைச் சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா ரத்துசெய்தது.

அதற்குப் பதில் அது அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் AUKUS எனும் தற்காப்புப் பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டது.

அந்த உடன்பாட்டின்கீழ் மூன்று நாடுகளும் கப்பல்களை இணைந்து தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பிரான்சின் பங்களிப்பை அதிகம் மதிப்பதாய்ப் பிரதமர் அல்பனீசி தெரிவித்தார்.

விரைவில் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) அழைப்பையேற்று பாரிஸ் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Latest news

தெற்கு ஆஸ்திரேலியாவில் 20 மில்லியன் டாலர் மதிப்புள்ள கோகோயின் பறிமுதல்

தெற்கு ஆஸ்திரேலியாவிற்கு $20 மில்லியன் மதிப்புள்ள கோகைனை ரகசியமாக இறக்குமதி செய்ய முயன்றதாக குற்றம் சாட்டப்பட்டு, அடிலெய்டைச் சேர்ந்த ஒரு பெண் நீதிமன்றத்தில் ஆஜரானார். துப்பறியும் நபர்கள்,...

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பலி – 38 பேரை காணவில்லை

பிலிப்பைன்ஸில் குப்பை மேடு சரிந்து விழுந்ததில் குறைந்தது ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் 38 பேர் காணாமல் போயுள்ளனர். வியாழக்கிழமை பிற்பகல் செபு நகரின் பினாலிவ் கிராமத்தில் மலை போல்...

பேரழிவு சூழ்நிலை காரணமாக பல V/Line சேவைகள் ரத்து

ஜனவரி 9, வெள்ளிக்கிழமை விக்டோரியாவின் வட மத்திய, வடக்கு நாடு, தென்மேற்கு மற்றும் Wimmera மாவட்டங்களுக்கு பேரழிவு தரும் தீ ஆபத்து மதிப்பீடுகள் இருக்கும் என்று...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...

பெர்த்தில் நேருக்கு நேர் மோதிய இரு மோட்டார் சைக்கிள்கள் – ஓட்டுநர்கள் பலி

பெர்த்தின் மேற்கு புறநகர்ப் பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட விபத்தில் இரண்டு ஆண்கள் உயிரிழந்துள்ளனர். Wembley-இல் உள்ள Pangbourne தெருவுக்கு அருகிலுள்ள Grantham தெருவில் இரவு 10.50...

சீனாவில் கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது அடக்குமுறை

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத நிலத்தடி தேவாலயங்கள் மீது கம்யூனிஸ்ட் அரசு தனது பிடியை இறுக்கி வருகிறது. செங்டூ நகரில் உள்ள புகழ்பெற்ற ‘ஏர்லி ரெயின்’ தேவாலயத்தின்...