Newsநீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

-

பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு ஆஸ்திரேலியா இழப்பீடு வழங்கவிருக்கிறது.

இருநாட்டிற்கும் இடையே கசப்படைந்துள்ள உறவைச் சரிசெய்ய அது உதவும் என்று கான்பெரா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) இன்று (11 ஜூன்) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இழப்பீடு குறித்து அறிவித்தார்.

பிரெஞ்சு ராணுவக் கப்பல் குழுமமான Naval Group-க்குச் சுமார் 583 மில்லியன் டொலர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட பல பில்லியன் டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைச் சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா ரத்துசெய்தது.

அதற்குப் பதில் அது அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் AUKUS எனும் தற்காப்புப் பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டது.

அந்த உடன்பாட்டின்கீழ் மூன்று நாடுகளும் கப்பல்களை இணைந்து தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பிரான்சின் பங்களிப்பை அதிகம் மதிப்பதாய்ப் பிரதமர் அல்பனீசி தெரிவித்தார்.

விரைவில் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) அழைப்பையேற்று பாரிஸ் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Latest news

போர் நிறுத்தத்தை மீறி காஸாவில் தாக்குதல் நடத்திய இஸ்ரேல்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்மொழிந்த 20 அம்ச காசா போர் நிறுத்த அமைதி ஒப்பந்தத்தை இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் என்றுகொண்ட நிலையில் கடந்த வாரம்...

ஆஸ்திரேலிய குதிரைகளுக்கான எட்டு ஆண்டு சாதனையை முறியடித்தது Ka Ying Rising

உலகின் மிகவும் மதிப்புமிக்க குதிரைப் பந்தயமான The Everest-ஐ, ஹாங்காங்கை தளமாகக் கொண்ட பிரபல ஜெல்டிங் வீரர் கா யிங் "Ka Ying Rising" வென்றுள்ளார். Royal...

குயின்ஸ்லாந்தில் Takeaway Order-களில் கலந்துள்ள எலி விஷம்

தென்கிழக்கு குயின்ஸ்லாந்தில் பல்வேறு மருத்துவமனைகளில் ஐந்து பேர் உடல்நிலை சரியில்லாமல் வந்ததை அடுத்து, பல Takeaway Orderகளில் எலி விஷம் கலந்திருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் Logan...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....

மெல்பேர்ணில் மூன்று ஆளில்லாத வீடுகளில் சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள்

மெல்பேர்ண் முழுவதும் ஆளில்லாத மூன்று தனித்தனி வீடுகளில் ஏற்பட்ட சந்தேகத்திற்கிடமான தீ விபத்துகள் குறித்து விசாரணை நடந்து வருகிறது. நேற்று அதிகாலை 5 மணிக்கு முன்னதாக வீடுகள்...

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் புதிய முடிவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

ஆஸ்திரேலியாவின் தேசிய புலனாய்வு அதிகாரி அலுவலகத்தின் இயக்குநர் ஜெனரலாக Kathy Klugman நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய வரலாற்றில் ஒரு பெண் இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்....