Newsநீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

-

பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு ஆஸ்திரேலியா இழப்பீடு வழங்கவிருக்கிறது.

இருநாட்டிற்கும் இடையே கசப்படைந்துள்ள உறவைச் சரிசெய்ய அது உதவும் என்று கான்பெரா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) இன்று (11 ஜூன்) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இழப்பீடு குறித்து அறிவித்தார்.

பிரெஞ்சு ராணுவக் கப்பல் குழுமமான Naval Group-க்குச் சுமார் 583 மில்லியன் டொலர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட பல பில்லியன் டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைச் சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா ரத்துசெய்தது.

அதற்குப் பதில் அது அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் AUKUS எனும் தற்காப்புப் பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டது.

அந்த உடன்பாட்டின்கீழ் மூன்று நாடுகளும் கப்பல்களை இணைந்து தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பிரான்சின் பங்களிப்பை அதிகம் மதிப்பதாய்ப் பிரதமர் அல்பனீசி தெரிவித்தார்.

விரைவில் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) அழைப்பையேற்று பாரிஸ் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Latest news

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

விக்டோரியாவில் நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்ட Frankston மருத்துவமனை

Peninsula பல்கலைக்கழக மருத்துவமனையான Frankston மருத்துவமனை, புதுப்பித்தல் பணிகள் முடிந்ததைத் தொடர்ந்து, நேற்று ஜனவரி 20 ஆம் திகதி நோயாளிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டது. விக்டோரியன் மாநில அரசு...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

நிழல் அமைச்சரவையிலிருந்து 3 நேஷனல்ஸ் செனட்டர்கள் திடீரென நீக்கம்

மத்திய அரசு அறிமுகப்படுத்திய புதிய வெறுப்புப் பேச்சுச் சட்டங்களை ஆதரிப்பதற்காக லிபரல் கட்சியுடன் உடன்படாததால், மூன்று நேஷனல்ஸ் செனட்டர்கள் நிழல் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். செனட்டர்கள்...

NSW இல் பல புலம்பெயர்ந்த ஓட்டுநர்களுக்கு புதிய ஓட்டுநர் உரிம விதிகள்

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஓட்டுநர் உரிமச் சட்டங்களின் கீழ், நியமிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் NSW மாநிலத்தில் ஓட்டுநர்...