Newsநீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு இழப்பீடு வழங்கும் ஆஸ்திரேலியா

-

பிரான்சுடனான நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தை இரத்து செய்ததற்கு ஆஸ்திரேலியா இழப்பீடு வழங்கவிருக்கிறது.

இருநாட்டிற்கும் இடையே கசப்படைந்துள்ள உறவைச் சரிசெய்ய அது உதவும் என்று கான்பெரா நம்பிக்கை கொண்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) இன்று (11 ஜூன்) நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் இழப்பீடு குறித்து அறிவித்தார்.

பிரெஞ்சு ராணுவக் கப்பல் குழுமமான Naval Group-க்குச் சுமார் 583 மில்லியன் டொலர் வழங்கப்படும் என அவர் தெரிவித்தார்.

அந்த நிறுவனத்துடன் செய்துகொண்ட பல பில்லியன் டாலர் நீர்மூழ்கிக் கப்பல் ஒப்பந்தத்தைச் சென்ற ஆண்டு ஆஸ்திரேலியா ரத்துசெய்தது.

அதற்குப் பதில் அது அமெரிக்காவுடனும் பிரிட்டனுடனும் AUKUS எனும் தற்காப்புப் பங்காளித்துவ உடன்பாட்டைச் செய்துகொண்டது.

அந்த உடன்பாட்டின்கீழ் மூன்று நாடுகளும் கப்பல்களை இணைந்து தயாரிப்பது உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் இணக்கம் தெரிவித்துள்ளன.

இந்தோ-பசிபிக் வட்டாரத்தில் பிரான்சின் பங்களிப்பை அதிகம் மதிப்பதாய்ப் பிரதமர் அல்பனீசி தெரிவித்தார்.

விரைவில் பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோனின் (Emmanuel Macron) அழைப்பையேற்று பாரிஸ் செல்ல ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Latest news

63,000 கார்களை திரும்பப் பெறும் BMW

ஏர்பேக் அமைப்பில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, 60,000க்கும் மேற்பட்ட பிஎம்டபிள்யூ கார்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்துத் துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி, பல BMW...

இத்தாலிக்குச் செல்லும் ஆஸ்திரேலியர்களுக்கு $3000 அபராதம்

இத்தாலியில் உள்ள ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை எப்போதும் தங்களிடம் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இத்தாலிக்கு விஜயம் செய்யும் போது வெளிநாட்டு கடவுச்சீட்டை பயண இடங்களுக்கு எடுத்துச்...

மேற்கு ஆஸ்திரேலியாவில் தொடங்கும் State Nomination Migration

மேற்கு ஆஸ்திரேலியாவில் புதிய நிதியாண்டிற்கான State Nomination Migration திட்டம் (SNMP) இப்போது தொடங்கியுள்ளது. மேற்கத்திய அவுஸ்திரேலிய அரசாங்கம் இந்த திட்ட வருடத்திற்கான விண்ணப்பக் கட்டணமாக $200...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

விதிகளை மீறி கேமராவில் பதிவாகிய 30,000 பேர்

தெற்கு ஆஸ்திரேலியாவின் புதிய கேமரா அமைப்பில் ஒரு மாதத்திற்குள் சுமார் 31,000 வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டும்போது தங்கள் தொலைபேசிகளைப் பயன்படுத்துகின்றனர். கடந்த ஏப்ரல் மாதம் டோரன்ஸ்வில்லி,...

குயின்ஸ்லாந்து மக்களுக்கு ஒரு மோசடி அழைப்பு பற்றி அறிவிப்பு

குயின்ஸ்லாந்து காவல்துறை, காவல்துறை அதிகாரிகளாகக் காட்டிக் கொள்ளும் அடையாளத் திருட்டுக் குழுக்கள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி செய்பவர்கள் நம்பகமான அல்லது நன்கு அறியப்பட்ட...