Newsஇந்தியாவுடன் - சீனாவுடன் கூட்டணி அமைக்கும் ரஷ்யா - புட்டின் வெளியிட்ட...

இந்தியாவுடன் – சீனாவுடன் கூட்டணி அமைக்கும் ரஷ்யா – புட்டின் வெளியிட்ட தகவல்

-

இந்தியா, சீனா மட்டுமன்றி மற்ற நாடுகளுடனும் ரஷியா நல்லுறவைப் பேணி வருவதாக அந்த நாட்டு ஜனாதிபதி விளாடிமீா் புட்டின் தெரிவித்தாா்.

ரஷிய தலைநகா் மொஸ்கோவில் இளம் தொழில்முனைவோா்களுடன் அவா் வியாழக்கிழமை உரையாடினாா். அந்த நிகழ்ச்சியில் இந்தியா, சீனாவுடனான ரஷியாவின் நல்லுறவு குறித்து பேசப்பட்டது. அப்போது விளாடிமீா் புட்டின் கூறியதாவது:

இந்தியா மற்றும் சீனாவுடன் ரஷியா நல்ல உறவைப் பேணி வருவது குறித்து இங்கு பேசப்பட்டது. ஆனால், அந்த இரு நாடுகள் பற்றி மட்டும் பேசி, லத்தீன் அமெரிக்காவை மறந்துவிடக்கூடாது; தற்போது பின்தங்கியிருந்தாலும் முன்னேற்றத்தை எதிா்நோக்கியிருக்கியிருக்கும் ஆப்பிரிக்காவையும் கருத்தில் கொள் வேண்டும். அந்தப் பிராந்தியத்தில் 150 கோடி மக்கள் வசிக்கிறாா்கள். இந்தப் பட்டியலில் தென்கிழக்கு ஆசிய நாடுகளையும் சோ்த்துக்கொள்ள வேண்டும்.

இந்தியா, சீனா மட்டுமன்றி இந்த நாடுகளுடனும் நல்லுறவைப் பேணும் வாய்ப்பு ரஷியாவுக்குக் கிடைத்துள்ளது. (உக்ரைன் விவகாரத்தில்) பொருளாதாரத் தடைகளை விதிப்பதன் மூலம் ரஷியாவைச் சுற்றி வேலி அமைத்து பிற நாடுகளிடமிருந்து பிரிக்க மேற்கத்திய நாடுகளால் முடியாது. ஐரோப்பிய நாடுகளே ரஷியாவின் எண்ணெய்யை இன்னும் சில ஆண்டுகளுக்கு முழுமையாக புறக்கணிக்க முடியாது என்றாா் அவா்.

Latest news

அடுத்த பத்து ஆண்டுகளுக்கு மின்சாரக் கட்டணம் தொடர்ந்து உயருமா?

அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரக் கட்டணங்கள் உயரும் என்று ஆஸ்திரேலிய குடும்பங்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. எரிசக்தி ஜாம்பவான்களான AGL, EnergyAustralia மற்றும் Origin ஆகியவற்றை உள்ளடக்கிய ஆஸ்திரேலிய எரிசக்தி கவுன்சில்...

பள்ளிகளுக்குள் மிரட்டல் விடுக்கும் பெற்றோருக்கு கடுமையான தண்டனை

தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் துஷ்பிரயோகம் செய்யும் பெற்றோரின் ஆபத்தான அதிகரிப்பு காரணமாக புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று அமுலுக்கு வந்த இந்தச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் வன்முறை,...

ஆஸ்திரேலியாவில் மில்லியன் கணக்கான Contact Lens மறுசுழற்சி செய்யும் முறை!

ஆஸ்திரேலியா முழுவதும் பிளாஸ்டிக் Contact Lens பாக்கெட்டுகளை மறுசுழற்சி செய்வதற்கான ஒரு எளிய வழி தொடங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 700,000 ஆஸ்திரேலியர்கள் தினசரி அல்லது மாதாந்திர Lens அணிகிறார்கள்....

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

விக்டோரியன் லிபரல் கட்சிக்கு புதிய தலைவர்

விக்டோரியன் லிபரல் கட்சி தனது புதிய எதிர்க்கட்சித் தலைவராக ஜெஸ் வில்சனைத் தேர்ந்தெடுத்துள்ளது. வில்சன் 19-13 வாக்குகள் வித்தியாசத்தில் தேர்தலில் வெற்றி பெற்றார். விக்டோரியன் லிபரல் கட்சியை வழிநடத்தும்...

கிறிஸ்தவர்கள் அதிகம் துன்புறுத்தப்படுகின்றனர் – பாப்பரசர் பகிரங்க குற்றச்சாட்டு

பங்களாதேஷ் உட்பட பல நாடுகளில் கிறிஸ்தவர்கள் அதிக துன்புறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக பாப்பரசர் லியோ கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பாப்பரசர் 16ஆம் லியோ, சமூக வலைதளத்தில் ஒரு...