Newsஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை - வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு?

-

ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறையால் வர்த்தகங்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.

போதிய ஊழியர்கள் இல்லாததால் திட்டமிட்டபடி அவற்றால் சேவை வழங்க முடியவில்லை. குறைந்த நேரத்துக்கு மட்டுமே வர்த்தகம் செய்ய முடிவதால் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியவில்லை.

இதனால் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரான ஆண்டனி அல்பனிசிக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

2017ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிலும் அதிகபட்சம் 160,000 வெளிநாட்டு ஊழியர்களை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வேலையில் அமர்த்தலாம்.

ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடியது. இதன் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களின் வரவு தடைபட்டது.

தற்போது படிப்படியாக வழக்கநிலை திரும்புவதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

Latest news

Invasion Day குண்டுவெடிப்பு குறித்த விமர்சனங்களுக்கு போலீஸ் கமிஷனர் பதில்

பெர்த்தில் நடந்த படையெடுப்பு தின ஆர்ப்பாட்டத்தின் மீதான குண்டுவெடிப்பை கையாண்டதற்காக மேற்கு ஆஸ்திரேலிய காவல்துறை கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டுகளை முன்வைக்க 9...

எடை இழப்பு மருந்துகள் பற்றி எச்சரிக்கை

உணவுக் கோளாறு குழுக்கள் GLP-1 வகை எடை இழப்பு மருந்துகளின் விரைவான பிரபலம் குறித்து எச்சரிப்பதாகக் கூறப்படுகிறது. எடை இழப்பு சந்தைப்படுத்தல் வேண்டுமென்றே பாதிக்கப்படக்கூடிய மக்களை குறிவைப்பதாக...

இந்தோனேசியாவுடன் ஒரு முக்கியமான ஒப்பந்தத்திற்கு தயாராகும் பிரதமர் அல்பானீஸ்

இந்தோனேசியாவுடன் புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தயாராகி வருகிறார். நேற்று இந்தோனேசியாவின் ஜகார்த்தாவிற்கு விஜயம் செய்த பிரதமரை, அந்நாட்டு அதிபர் பிரபோவோ சுபியாண்டோ...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

பாகிஸ்தானில் பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு – 31 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தான், இஸ்லாமாபாத்தின் ஷேசாத் நகர் பகுதியிலுள்ள ஷியா பள்ளிவாசலில் நேற்று (06) வெடிகுண்டு வெடித்ததில் 31 பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த பள்ளிவாசலில் நேற்று தொழுகை நடந்துகொண்டிருந்தபோது, உடலில்...

“அடுத்த சில மாதங்கள் அரசாங்கத்திற்கு மிகவும் முக்கியமான நேரம்” – அரசியல் ஆய்வாளர்கள்

அடுத்த சில மாதங்கள் ஆஸ்திரேலிய பொருளாளர் ஜிம் சால்மர்ஸுக்கு ஒரு முக்கியமான நேரமாக இருக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொருளாதார சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவதில் அவரது திறமையும்,...