Newsஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை - வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு?

ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறை – வெளிநாட்டவர்களுக்கு வாய்ப்பு?

-

ஆஸ்திரேலியாவில் ஊழியர் பற்றாக்குறையால் வர்த்தகங்கள் கடுமையான சவால்களை எதிர்நோக்குவதாக தெரியவந்துள்ளது.

போதிய ஊழியர்கள் இல்லாததால் திட்டமிட்டபடி அவற்றால் சேவை வழங்க முடியவில்லை. குறைந்த நேரத்துக்கு மட்டுமே வர்த்தகம் செய்ய முடிவதால் எதிர்பார்த்த லாபத்தை ஈட்ட முடியவில்லை.

இதனால் ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமரான ஆண்டனி அல்பனிசிக்கு நெருக்குதல் ஏற்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையை உயர்த்த நிறுவனங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

2017ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டிலும் அதிகபட்சம் 160,000 வெளிநாட்டு ஊழியர்களை ஆஸ்திரேலிய நிறுவனங்கள் வேலையில் அமர்த்தலாம்.

ஆனால் கொவிட்-19 நெருக்கடிநிலை ஏற்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலியா அதன் எல்லைகளை மூடியது. இதன் காரணமாக வெளிநாட்டு ஊழியர்களின் வரவு தடைபட்டது.

தற்போது படிப்படியாக வழக்கநிலை திரும்புவதால் கூடுதல் ஊழியர்கள் தேவைப்படுகின்றனர்.

Latest news

டுபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான இந்திய விமானம் விபத்து – விமானி உயிரிழப்பு

டுபாயில் நடைபெற்று வரும் விமான கண்காட்சியில் இந்திய விமானப்படையின் தேஜஸ் விமானம் நேற்று, 21ம் திகதி விபத்துக்குள்ளாகியுள்ளது. டுபாயில் இந்திய விமானப்படையின் விமான கண்காட்சி கடந்த நவம்பர்...

GST-ஐ அதிகரிக்குமாறு அரசுக்கு IMF அறிவுறுத்தல்

சரக்கு மற்றும் சேவை வரியை (GST) அதிகரிக்குமாறு ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கு சர்வதேச நாணய நிதியம் (IMF) அறிவுறுத்தியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் அதன் வருடாந்திர பொருளாதார மதிப்பாய்வின்...

நாடாளுமன்றத்திற்குள் பாலியல் துன்புறுத்தல் – விக்டோரிய பெண் MP குற்றம்

விக்டோரியாவின் விலங்கு நீதி நாடாளுமன்ற உறுப்பினர் Georgie Purcell நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு அறிக்கையை வெளியிட்டார். தான் அனுபவித்த பாலியல் துன்புறுத்தல் குறித்த விவரங்களை அவர் வெளிப்படுத்தியதாக...

நாயின் மலக்குடலில் போதைப்பொருளை மறைத்து வைத்திருந்த பெண்

தனது செல்ல நாயின் ஆசனவாயில் Methylamphetamine பையை செருக முயன்றதற்காக 44 வயது பெண்ணுக்கு கிட்டத்தட்ட $2,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. Joondalup மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இந்த உத்தரவைப்...

பிரேசிலில் நடைபெற்ற காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் திடீர் தீ விபத்து

பிரேசிலில் உள்ள Belém நகரில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் 21 பேர் படுகாயம்...

மாசுபடும் அபாயம் காரணமாக திரும்பப் பெறப்பட்ட Deli Meats

நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்தில் Deli இறைச்சிகள் மாசுபடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவசரமாக திரும்பப் பெறப்பட்டது. இந்த பொருட்கள் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. உணவு...