Newsஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் - பிரதமர் கோரிக்கை

ஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் – பிரதமர் கோரிக்கை

-

ஆஸ்திரேலியாமீது விதிக்கப்பட்ட தடைகளைச் சீனா அகற்றவேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவாண்டுகளில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசியது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகயும், இரும்பு தாதுப் பொருள்களை வாங்கும் முக்கிய வாடிக்கையாளருமாகச் சீனா விளங்குகிறது.

இருப்பினும் அண்மை ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு நன்றாக இல்லை. ஆஸ்திரேலியாவுடன் ஏற்பட்டுள்ள 14 சர்ச்சைகளைக் காரணங்காட்டி சீனா அதன்மீது தடைகளை விதித்தது.

கொரோனா நோய்ப்பரவலின் ஆரம்பம் குறித்து சீனாவில் விசாரணை மேற்கொள்ளும்படி ஆஸ்திரேலியா கோரியதும், தேசியப் பாதுகாப்புக்காக வெளிநாட்டு முதலீடுகளைச் சோதனைக்கு உட்படுத்தியதும் அந்தச் சர்ச்சைகளில் அடங்கும்.

நேற்று முன்தினம் (ஜூன் 12) ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ் (Richard Marles), சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹவை (Wei Fenghe), Shangri-La கலந்துரையாடலில் சந்தித்துப் பேசியிருந்தார்.

ஒரு மணிநேரம் நீடித்த அந்த உரையாடல், ஒரு முக்கிய முதற்படி என்று மைல்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

புதிய NSW வீட்டுத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள்

நியூ சவுத் வேல்ஸின் Camellia-இல் உள்ள ஒரு தொழில்துறை பகுதியில் 10,000 புதிய வீடுகளைக் கட்டும் திட்டம் பல்வேறு தரப்பினரால் விமர்சிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் 2027 ஆம்...

மாணவர் விசா தாமதங்கள் மற்றும் நிராகரிப்புகளைத் தவிர்ப்பதற்கான உதவிக்குறிப்புகள்

மாணவர் விசா விண்ணப்பதாரர்களுக்கான அத்தியாவசிய ஆலோசனைகள் குறித்து ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சகம் மீண்டும் ஒரு ஆலோசனையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மாணவர் விசாக்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சரியாக...

மக்கள் பக்கம் சாய்ந்து செயல்பட முயற்சிக்கும் BOM Web

ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட புதிய வலைத்தளத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வந்ததால், இந்த புதிய...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

தேசிய ஊடகங்கள் குறித்து மத்திய காவல்துறைத் தலைவரின் சிறப்பு அறிக்கை

இளம் பெண்கள் ஆன்லைனில் வன்முறைச் செயல்களுக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவதைத் தடுக்க, மத்திய காவல்துறை ஒரு புதிய பணிக்குழுவை நிறுவத் தயாராகி வருகிறது. மோசடி நபர்கள் ஆன்லைனில் பெண்களை...

ICU-வில் அனுமதிக்கப்பட்ட இந்திய கிரிகெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர்

உயிருக்கு ஆபத்தான காயத்தால் பாதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர், தற்போது நலமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒக்டோபர் 25 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான...