Newsஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் - பிரதமர் கோரிக்கை

ஆஸ்திரேலியா மீதான தடைகளைச் சீனா அகற்றவேண்டும் – பிரதமர் கோரிக்கை

-

ஆஸ்திரேலியாமீது விதிக்கப்பட்ட தடைகளைச் சீனா அகற்றவேண்டும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீசி (Anthony Albanese) கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுடன் உறவுகளை மேம்படுத்த இந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இரு நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் மூவாண்டுகளில் முதன்முறையாகச் சந்தித்துப் பேசியது நல்லது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாகயும், இரும்பு தாதுப் பொருள்களை வாங்கும் முக்கிய வாடிக்கையாளருமாகச் சீனா விளங்குகிறது.

இருப்பினும் அண்மை ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர உறவு நன்றாக இல்லை. ஆஸ்திரேலியாவுடன் ஏற்பட்டுள்ள 14 சர்ச்சைகளைக் காரணங்காட்டி சீனா அதன்மீது தடைகளை விதித்தது.

கொரோனா நோய்ப்பரவலின் ஆரம்பம் குறித்து சீனாவில் விசாரணை மேற்கொள்ளும்படி ஆஸ்திரேலியா கோரியதும், தேசியப் பாதுகாப்புக்காக வெளிநாட்டு முதலீடுகளைச் சோதனைக்கு உட்படுத்தியதும் அந்தச் சர்ச்சைகளில் அடங்கும்.

நேற்று முன்தினம் (ஜூன் 12) ஆஸ்திரேலியத் தற்காப்பு அமைச்சர் ரிச்சர்ட் மைல்ஸ் (Richard Marles), சீனத் தற்காப்பு அமைச்சர் வெய் ஃபெங்ஹவை (Wei Fenghe), Shangri-La கலந்துரையாடலில் சந்தித்துப் பேசியிருந்தார்.

ஒரு மணிநேரம் நீடித்த அந்த உரையாடல், ஒரு முக்கிய முதற்படி என்று மைல்ஸ் தெரிவித்துள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் ஆபத்தில் உள்ள தபால் ஊழியர்களின் பாதுகாப்பு

Australia Post, பணியில் இருக்கும்போது நெடுஞ்சாலையில் உள்ள தபால் ஊழியர்களுக்கு ஆதரவளிக்குமாறு ஓட்டுநர்களைக் கேட்டுக்கொள்கிறது. கிறிஸ்துமஸ் விடுமுறை காலம் காரணமாக, குறிப்பாக டிசம்பரில், தபால் ஊழியர்களின் அதிக...

AI உருவாக்கிய அறிக்கை – நிறுவனத்திற்கு $440,000 அபராதம்

AI ஐப் பயன்படுத்தி ஒரு குறைபாடுள்ள அறிக்கையை தயாரித்ததாக ஒப்புக்கொண்ட பிறகு, ஒப்பந்தப் பணத்திற்கான பகுதியை மத்திய அரசுக்குத் திருப்பித் தர Deloitte ஒப்புக்கொண்டுள்ளது. வேலைவாய்ப்பு மற்றும்...

ஆஸ்திரேலியாவில் பிரபலமாகிவரும் Home Schooling முறை

ஆஸ்திரேலியாவில் தங்கள் குழந்தைகளுக்கு வீட்டிலேயே கல்வி கற்பிப்பதையோ அல்லது வீட்டுக்கல்வியையோ தேர்ந்தெடுக்கும் பெற்றோரின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் தோராயமாக 4 மில்லியன் மாணவர்களில்...

உலகிலேயே அதிக சூதாட்ட விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் அதிகப்படியான சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறு நிபுணர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர். ஆஸ்திரேலியா உலகின் முன்னணி சூதாட்ட நாடுகளில் ஒன்றாகும், மேலும் சூதாட்டம் வேடிக்கையாகத் தோன்றினாலும், அது பெரும்பாலும் பணத்தையும்,...

மெல்பேர்ணின் EV Charging பிரச்சனைக்கான தீர்வுகள்

மெல்பேர்ணின் Merri- bek பகுதியில் மின்சார (EV) வாகனங்களை சார்ஜ் செய்வதில் பலருக்கு இருக்கும் பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது. Merri- bek நகர சபை,  Vehicle Charging Solutions...

வேகமாக வளர்ந்து வரும் விக்டோரியாவின் மக்கள் தொகையை விட சிறைச்சாலை மக்கள் தொகை

விக்டோரியாவில் சிறைக்கைதிகளின் எண்ணிக்கை, மாநிலத்தின் மக்கள்தொகை வளர்ச்சியை விட வேகமாக அதிகரித்து வருவதாக ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 20 வருட காலப்பகுதியில் சிறைச்சாலைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை...