Newsஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி - நிலைமையைச் சமாளிப்பதில் சிக்கல்

ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி – நிலைமையைச் சமாளிப்பதில் சிக்கல்

-

ஆஸ்திரேலியா பாரிய எரிசக்தி நெருக்கடியைச் சந்திக்கத் தயாராகிக் கொண்டிருப்பதாக தெரியவந்துள்ளது.

குளிர்காலம் நெருங்கும் வேளையில் கிழக்குக் கரையோர வட்டாரத்தில் எரிசக்தித் தட்டுப்பாடு நிலவுகிறது. ஆஸ்திரேலிய எரிசக்தி அமைச்சர் கிரிஸ் போவன் (Chris Bowen) நிலைமையைச் சமாளிக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

எனினும் தேவையை நிறைவுசெய்வதில் சிரமம் ஏற்படும் என்று ஆஸ்திரேலிய எரிசக்தி ஆணையம் கூறுகிறது.

நாட்டில் குறைந்துவரும் வெப்பநிலையால் எரிசக்திக் கட்டமைப்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரியைக் கொண்டு இயங்கும் சில எரிசக்தி நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. ஆகவே நிலைமை இன்னும் மோசமாகியிருக்கிறது.

நேற்று வேறுவழியின்றி ஆஸ்திரேலிய எரிசக்தி ஆணையம் அவசரநிலை அதிகாரத்தைப் பிறப்பிக்கவேண்டியிருந்தது.

அதன்வழி இன்னும் கூடுதலான எரிசக்தியைக் கட்டமைப்புக்குள் செலுத்த மின்சார நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டது.

Latest news

ஆஸ்திரேலிய தமிழ் சங்க வருடாந்த பொதுக்கூட்டம்

ஆஸ்திரேலிய தமிழ் சங்கத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளனர். புதிய குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும்...

இந்தியாவுடன் ஆழமான ஒத்துழைப்பில் கவனம் செலுத்தும் ஆஸ்திரேலியா

முக்கியமான கனிமங்கள் துறையில் இந்தியாவுடன் ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதில் ஆஸ்திரேலியா கவனம் செலுத்துகிறது. உலகின் லித்தியத்தில் பாதிக்கும் மேற்பட்டதை ஆஸ்திரேலியா உற்பத்தி செய்கிறது என்று இந்தியாவிற்கான ஆஸ்திரேலிய உயர்...

நிறவெறியை எதிர்த்த மூன்று பேருக்கு அஞ்சலி செலுத்திய பிரதமர்

நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த மூன்று ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அஞ்சலி செலுத்தினார். தென்னாப்பிரிக்காவின் பிரிட்டோரியாவில் உள்ள சுதந்திர பூங்கா பாரம்பரிய தளம்...

இரத்தக் குழாய்களுக்குள் பயணிக்க கடுகு ரோபோக்கள்

கடுகு விதையளவில் காணப்படும் ரோபோக்களை சுவிஸ் சூரிக்கில் உள்ள ETH பல்கலை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள். குறித்த ரோபோக்கள் நோயாளிகளின் இரத்தக் குழாய்களுக்குள் பயணித்து சிகிச்சையளிக்க உதவும் வகையில்...

நைஜீரியாவில் பாடசாலைக்குள் நுழைந்து 100 மாணவர்கள் கடத்தல்

நைஜீரியாவின் கெபி மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் இருந்து 25 மாணவிகளை ஆயுத கும்பல் துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது. இதனை தடுக்க முயன்றபோது ஆசிரியர்...

குழந்தைகளின் பள்ளிப் படிப்பைத் தடுக்கும் உணவுப் பற்றாக்குறை

வறுமை காரணமாக உணவுப் பற்றாக்குறை பல குடும்பங்களைப் பாதிக்கிறது என்றும், இது ஆஸ்திரேலிய குழந்தைகளின் கல்வி நடவடிக்கைகளைப் பாதிக்கிறது என்றும் தொண்டு நிறுவனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. உணவு நிவாரண...