Newsஉக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் - ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

உக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் – ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

-

உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் ஜெர்மனி சான்ஸ்லர் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், ஜெர்மனி சான்ஸ்லர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் எதிர்வரும் 16ஆம் திகதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 ஐரோப்பிய தலைவர்களும் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி போரை தொடங்கிய ரஷ்யா தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்தது.

ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ரஷிய படைகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதை தொடர்ந்து ரஷியா தனது கவனத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் மீது திருப்பியது. முந்தைய தவறான செயல்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் துல்லியமான தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறான சூழலில் இந்த தலைவர்கள் உக்ரைன் செல்ல திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

Latest news

32 நாடுகளுக்கான ஆஸ்திரேலியர்களுக்கான பயண எச்சரிக்கைகள்

பயணப் போக்குகள் குறித்த சமீபத்திய பகுப்பாய்வு, 2026 ஆம் ஆண்டுக்குள் 10 மில்லியனுக்கும் அதிகமான ஆஸ்திரேலியர்கள் வெளிநாடுகளுக்குப் பயணம் செய்வார்கள் என்று வெளிப்படுத்தியுள்ளது. இருப்பினும், மத்திய அரசு...

சீனாவில் 2 விநாடிகளில் 700 கி.மீ. பயணித்த ரயில்

சீனா​வின் தேசிய பாது​காப்பு தொழில்​நுட்ப பல்​கலைக்​கழகத்​தின் ஆராய்ச்​சி​யாளர்​கள் ‘Magnetic levitation' எனப்​படும் காந்​தப்​புல தொழில்​நுட்​பத்​தின் அடிப்​படை​யில் 1 தொன் எடை கொண்ட ரயிலை இயக்கி சோதனை...

“இந்தப் படிவத்தை ஒரு நல்ல செயலால் நிரப்புங்கள்” – பிரதமர் அல்பானீஸ்

Bondi கடற்கரையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக சமூகத்தை ஒன்றிணைக்கும் நோக்கில் அரசாங்கம் ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளது. பிரதமர் அந்தோணி அல்பானீஸ் அவர்களால் ஊக்குவிக்கப்பட்ட இந்த...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

ஓட்டுநர்கள் Headlight Signal செய்வது சட்டப்பூர்வமானதா?

ஆஸ்திரேலியாவில் ஓட்டுநர்களிடையே ஒரு பொதுவான நடைமுறையாக இருக்கும், காவல்துறையின் வேக கேமராக்கள் குறித்து மற்ற ஓட்டுநர்களுக்கு அவர்களின் முகப்பு விளக்குகளை ஒளிரச் செய்வதன் மூலம் எச்சரிப்பது...

சமூக பாதுகாப்பு அதிகாரிகளுக்கு துப்பாக்கிகளை வழங்க NSW அரசாங்கம் திட்டம்

Bondi கடற்கரையில் சமீபத்தில் நடந்த துரதிர்ஷ்டவசமான பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் பல சிறப்பு முடிவுகளை அறிவித்துள்ளது. தாக்குதலுக்கு முன்னர் ஒரு யூத சமூகக் குழு காவல்துறையினருடன்...