Newsஉக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் - ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

உக்ரைனில் உச்சக்கட்ட போர் பதற்றம் – ஜெர்மனி சான்ஸ்லர் எடுத்துள்ள தீர்மானம்

-

உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமடைந்து வருகின்ற நிலையில் ஜெர்மனி சான்ஸ்லர் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளார்.

இந்த நிலையில் பிரான்ஸ் ஜனாதிபதி மக்ரான், ஜெர்மனி சான்ஸ்லர் ஓலாப் ஸ்கோல்ஸ் மற்றும் இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோர் எதிர்வரும் 16ஆம் திகதி உக்ரைன் தலைநகர் கீவுக்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

3 ஐரோப்பிய தலைவர்களும் ஜெலென்ஸ்கியை நேரில் சந்தித்து உக்ரைன் துறைமுகங்களில் கண்ணிவெடி அகற்றுதல் மற்றும் தானியங்களை இறக்குமதி செய்வது குறித்து விவாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உக்ரைன் நாட்டின் மீது கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி போரை தொடங்கிய ரஷ்யா தலைநகர் கீவ் மற்றும் நாட்டின் 2-வது மிகப்பெரிய நகரமான கார்கிவ்வை கைப்பற்ற தீவிரமாக முயற்சித்தது.

ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தால் ரஷிய படைகளின் இந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

அதை தொடர்ந்து ரஷியா தனது கவனத்தை கிழக்கு உக்ரைனில் உள்ள டான்பாஸ் பிராந்தியம் மீது திருப்பியது. முந்தைய தவறான செயல்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்ட ரஷ்ய படைகள் டான்பாஸ் பிராந்தியத்தை கைப்பற்றுவதில் துல்லியமான தாக்குதல் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறான சூழலில் இந்த தலைவர்கள் உக்ரைன் செல்ல திட்டமிட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதென செய்தி வெளியாகியுள்ளது.

Latest news

Paracetamol பற்றி டிரம்ப் கூறிய பொய்யான தகவல்கள்

பொதுவான வலி நிவாரணி பற்றிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கூற்றை விஞ்ஞானிகள் நிராகரித்துள்ளனர். அமெரிக்காவில் Tylenol என்ற பிராண்ட் பெயராலும் ஆஸ்திரேலியாவில் Paracetamol என்ற பிராண்ட்...

மீண்டும் பரிசீலனையில் உள்ள கூர்மையான ஆயுதச் சட்டங்கள்

கூர்மையான ஆயுதங்கள் தொடர்பான சட்டங்களை மறுபரிசீலனை செய்து புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த மேற்கு ஆஸ்திரேலிய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பெர்த்தில் ஒரு விருந்தில் இளைஞர்கள் குழுவிற்கு இடையே...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...

விக்டோரியா மாநிலத்தில் அதிகரித்துவரும் குற்றச் செயல்கள்

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, விக்டோரியா தற்போது கடுமையான குற்ற அலையின் மத்தியில் உள்ளது. மாநிலம் முழுவதும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட மிக அதிகமாக...

பெர்த்தில் உள்ள சீன உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்து!

பெர்த்தில் உள்ள ஒரு பிரபலமான சீன உணவகத்தின் சமையலறையில் எரிந்து கொண்டிருந்த எரிவாயு அடுப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. முந்தைய நாள் உணவகம் மூடப்பட்டபோது, ​​எதிர்பாராத விதமாக...

சர்வதேச மாணவர்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மற்றொரு திட்டம்

பிராந்திய மற்றும் பெருநகர கல்வி வழங்குநர்களுக்கு இடையே சர்வதேச மாணவர்களின் விநியோகத்தை சமநிலைப்படுத்த ஆஸ்திரேலிய அரசாங்கம் புதிய அமைச்சரவை வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அமைச்சகத்தின் புதிய அறிவுறுத்தல்கள்...