Newsஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் தீவிர முயற்சியில் இலங்கையர்கள் - விடுக்கப்பட்டு அவசர எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்கும் தீவிர முயற்சியில் இலங்கையர்கள் – விடுக்கப்பட்டு அவசர எச்சரிக்கை

-

இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக நாட்டை விட்டு வெளியேறும் சட்டவிரோதக் இடப்பெயர்வாளர்கள் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வருவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்களை வேறு நாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி அவர்களிடம் இருந்து பணம் பறிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக பாதுகாப்புப் படையினர் தற்போது அம்பலப்படுத்தியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது.

இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நாட்டில் நிலவும் பிரச்சினை காரணமாக நாட்டை விட்டு வெளியேற முயற்சித்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபாய் முதல் 1 மில்லியன் ரூபாய் வரை பணத்தை கடத்தல்காரர்கள் பெற்றுக்கொள்வதாகவும் படகிற்குள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்புப் படையினருக்கு இடப்பெயர்வாளர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

அதேபோல், சிறிய படகுகள் மூலம் கரையில் இருந்து நடுக்கடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகிற்கு இடப்பெயர்வாளர்களை அழைத்துச் செல்வதற்கு 80 ஆயிரம் முதல் ஒரு இலட்சம் ரூபாய் வரை வசூலிக்கப்படுவதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சட்டவிரோதமாக படகு மூலம் அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த 15 இலங்கையர்கள் கடந்த தினம் ஆஸ்திரேலிய கரையோர பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் இருந்து படகுகள் மூலம் ஆட்களை ஏற்றிச் செல்லும் போது, கடத்தல் காரர்களே அவர்களை பாதுகாப்பு தரப்பினரிடம் காட்டிக்கொடுத்து விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Latest news

வினோதமான தாக்குதலில் சேதமடைந்த 30 கார்கள்

மெல்பேர்ணின் கிழக்குப் பகுதியில் நடந்த பேரழிவு தரும் தாக்குதலில் 30க்கும் மேற்பட்ட கார்கள் சேதமடைந்துள்ளன. Anzac தினத்தன்று நிறுத்தப்பட்டிருந்த கார்களே இவ்வாறு சேதமடைந்துள்ளன. பல கேமராக்களில் ஒரு பெண்...

ஆஸ்திரேலியர்களுக்கு 600 வேலைவாய்ப்புகளை உருவாக்க Amazon திட்டம்

அமெரிக்காவில் உள்ள Amazon ஆஸ்திரேலியா 600க்கும் மேற்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு தற்காலிக வேலை வாய்ப்புகளை வழங்க தயாராகி வருகிறது. நாடு முழுவதும் பருவகால தொழிலாளர்களாக ஆட்சேர்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

புதிய போப் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

திய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக மே 7 ஆம் திகதி தொடங்கும் ரகசிய மாநாட்டில் ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் கூடுவார்கள் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2005 மற்றும்...

ஆஸ்திரேலியாவில் TikTok-இல் வைரலான டிரம்ப் விதி

ஆஸ்திரேலியர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களை ரத்து செய்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சில ஆஸ்திரேலியர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ததாக சமூக...

புதிய போப் தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

திய போப்பைத் தேர்ந்தெடுப்பதற்காக மே 7 ஆம் திகதி தொடங்கும் ரகசிய மாநாட்டில் ரோமன் கத்தோலிக்க கார்டினல்கள் கூடுவார்கள் என்று வத்திக்கான் தெரிவித்துள்ளது. முன்னதாக, 2005 மற்றும்...

ஆஸ்திரேலியாவில் TikTok-இல் வைரலான டிரம்ப் விதி

ஆஸ்திரேலியர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களை ரத்து செய்து வருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி, சில ஆஸ்திரேலியர்கள் அமெரிக்காவிற்கான பயணங்களுக்காக முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளை ரத்து செய்ததாக சமூக...