Newsஸ்தம்பிக்க போகும் இலங்கை - முழுமையாக முடங்கும் அபாயம்

ஸ்தம்பிக்க போகும் இலங்கை – முழுமையாக முடங்கும் அபாயம்

-

விரைவில் இலங்கை முழுமையாக மூடப்படும் அபாயம் உள்ளதென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாடு முழுமையாக முடங்கும் அபாயம் காணப்படுவதாக கல்விசாரா சேவை சங்கம் அறிவித்துள்ளது.

கண்டியில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போது, குறித்த சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன இதனைக் குறிப்பிட்டார்

எரிபொருள் கையிருப்பு குறைவாகவே காணப்படுவதாகவும், இதனால் அரச சேவையாளர்களுக்கு, கடமைகளுக்கு சமூகமளிக்க முடியாத நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனால், கூடிய விரைவில் நாடு முழுமையாக மூடப்படும் நிலை ஏற்படும் என அவர் குறிப்பிட்டார்

நாட்டை முடக்குவதாக அரசாங்கம் அறிவிக்காவிட்டாலும், தன்னிச்சையாகவே நாடு முடங்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

ஆட்சியாளர்களின் முறையற்ற தீர்மானங்களினாலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, கல்விசாரா சேவை சங்கத்தின் செயலாளர் அஜித் கே திலகரத்ன மேலும் குறிப்பிட்டார்.

இதேவேளை, நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின், ஒரு மின் பிறப்பாக்கி கட்டமைப்பு எதிர்வரும் சனிக்கிழமை முதல் மூடப்படும் என மின்சக்தி அமைச்சு அறிவித்துள்ளது

பராமரிப்பு நடவடிக்கைகள் காரணமாகவே மின் உற்பத்தி நிலையம் மூடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

Latest news

ஆஸ்திரேலியாவில் காந்தியின் 420 கிலோ வெண்கல சிலை திருட்டு

மெல்பேர்ண் நகரில் உள்ள ரோவில்லே பகுதியில் இந்திய சமூக மையத்தில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலை ஒன்று நிறுவப்பட்டுள்ளது.  426 கிலோ எடையுள்ள இந்த வெண்கல சிலையை,...

ரொக்க விகித உயர்விற்குப் பிறகு முக்கிய வங்கிகளின் வட்டி விகிதங்கள் எவ்வாறு மாறும்?

ரிசர்வ் வங்கி (RBA) வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு செய்ததைத் தொடர்ந்து, நான்கு முக்கிய வங்கிகளும் தங்கள் வீட்டுக் கடன் வட்டி விகிதங்களை உயர்த்த முடிவு...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...

தனியார் பள்ளி கட்டணம் 6% உயர்வு

ஆஸ்திரேலியாவில் தனியார் பள்ளிக் கட்டணங்கள் முந்தைய ஆண்டு பதிவு செய்யப்பட்ட தரவுகளை விட அதிகமாக உயர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது. ஒரு தனியார் பள்ளியில் 13 ஆண்டு பள்ளிக்...

விக்டோரியாவில் தொற்றுநோய் பரவல் – 20 இடங்கள் அடையாளம்

2026 ஆம் ஆண்டில் இதுவரை விக்டோரியாவில் நான்கு தட்டம்மை வழக்குகள் பதிவாகியுள்ளன. அதன்படி, மாநிலத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயத்தில் இருப்பதாக மாநில சுகாதார...