News700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி -...

700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி – ஜெர்மனி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், டூபிங்கன் பல்கலைக்கழகம் இணைந்து நேச்சர் இதழில் வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆய்வு தொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், “பிளாக் டெத் தொற்றுநோயை முதன்முதலில் பரப்பிய பாக்டீரியா மத்திய ஆசியாவின் நவீன கிர்கிஸ்தானில் உள்ள மூன்று கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் 1346 முதல் 1353 வரை புபோனிக் பிளேக் நோய் உலகின் பெரும் பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது. சில இடங்களில் 60 சதவிகித மக்கள் இந்த நோயால் இறந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பான ஆய்வில், ஸ்டிர்லிங் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் பிலிப் ஸ்லாவின், இசிக் குல் ஏரிக்கு அருகிலுள்ள சூ பள்ளத்தாக்கில் 1338, 1339-ம் ஆண்டுகளில் மூன்று கல்லறைகளைக் கண்டுபிடித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த மூன்று கல்லறைகளில் நெஸ்டோரியன் கிறிஸ்தவ சமூகத்தில் புதைக்கப்பட்ட மூன்று பெண்களின் பற்களிலிருந்து, யெர்சினியா பெஸ்டிஸ் பிளேக் பாக்டீரியாவின் முதல் டி.என்.ஏ தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்திருக்கின்றனர்.

அந்த டி.என்.ஏ-வை ஆய்வுசெய்தபோது, நோய்க் கிருமியின் மரபணு தன்னை மறுகட்டமைத்து அது பிளாக் டெத் எனும் தொற்றை ஏற்படுத்தியதையும், இன்று இருக்கும் பெரும்பாலான பிளேக் நோய்களுக்கும் அந்த நோய்க்கிருமியின் மரபணுதான் வழிவகுத்தது என்பதையும் கண்டுபிடித்திருக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர், மற்றும் முதன்மை எழுத்தாளரான மரியா ஸ்பைரோ, ‘புபோனிக் பிளேக் மத்திய தரைக்கடல் முழுவதும் பழைய சில்க் ரோடு வர்த்தகப் பாதை வழியாகப் பரவியது. அதற்கு முன்பு 500 ஆண்டுகள் வரை நீடித்த கொடிய நோய்களின் அலையால், இது `இரண்டாவது பிளேக் தொற்றுநோய்’ என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஐரோப்பாவில் பிளேக் பரவுவதற்கு வர்த்தகம் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது என்பது ஆய்வில் தெரியவந்தது.

Latest news

பாலினச் சமத்துவத்தைப் பொறுத்ததே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை – அமைச்சர் Benny Wong

புதிய அனைத்துலக உத்தியின்கீழ் பாலினச் சமத்துவத்தைப் பொறுத்தே ஆஸ்‌திரேலியாவின் வெளியுறவுக் கொள்கை, அரசதந்திரம், வர்த்தகம், உதவித் திட்டங்கள் அமையும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் பென்னி...

ஆஸ்திரேலியாவில் சுறா தாக்கி 17 வயது சிறுமி மரணம்

ஆஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில் உள்ள ஒரு பிரபலமான சுற்றுலாத் தலத்தின் நீரில் சுறா தாக்கி ஒரு பெண் நீச்சல் வீரர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். பிரிஸ்பேர்ணுக்கு வடக்கே...

பாக்டீரியா அச்சுறுத்தல் காரணமாக குடிநீரை கொதிக்க வைத்து பருகுமாறு அறிவுறுத்தல்

நியூ சவுத் வேல்ஸின் மத்திய கடற்கரையில் வசிப்பவர்கள் கொதிக்க வைத்த தண்ணீரை உட்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளில் குழாய் நீரில் E.coli என்ற பாக்டீரியா கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து...

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி உயிரிழப்பு

ஜெர்மனியில் நடந்த கார் விபத்தில் 11 வயது இலங்கைச் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த விபத்தில் இறந்தவர் "கனகராஜா மோனிதா" என்ற...

விக்டோரியன் பெண்களுக்கு இலவச இனப்பெருக்க சுகாதார சேவை

விக்டோரியன் பெண்களுக்கு அத்தியாவசிய சுகாதார சேவைகளை இலவசமாக வழங்க மாநில அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பெண்களின் இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் இலவச சிறப்பு சிகிச்சை அளிக்க...

குயின்ஸ்லாந்து பகுதிகளுக்கு மேலும் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மக்களுக்கு புயல்கள் மற்றும் கனமழைக்கான ஆபத்து தொடர்ந்து இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். பருவமழை அழுத்தம் தீவிரமாக இருப்பதால், இந்த வாரம் முழுவதும்...