News700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி -...

700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கிருமி – ஜெர்மனி ஆய்வில் அதிர்ச்சி தகவல்

-

ஏறக்குறைய 700 ஆண்டுகளுக்கு முன்பு 200 மில்லியன் மக்களைக் கொன்ற கொடிய தொற்றுநோய்களில் ஒன்றான பிளாக் டெத்-தின் தோற்றத்தைக் கண்டுபிடித்திருப்பதாக ஜெர்மனி விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ஆச்சர்யமான தகவலை ஸ்காட்லாந்தின் ஸ்டிர்லிங் பல்கலைக்கழகமும், ஜெர்மனியின் மேக்ஸ் பிளாங்க் நிறுவனம், டூபிங்கன் பல்கலைக்கழகம் இணைந்து நேச்சர் இதழில் வெளியிட்டிருக்கின்றன.

இந்த ஆய்வு தொடர்பாக அந்த இதழில் வெளியிடப்பட்டிருக்கும் கட்டுரையில், “பிளாக் டெத் தொற்றுநோயை முதன்முதலில் பரப்பிய பாக்டீரியா மத்திய ஆசியாவின் நவீன கிர்கிஸ்தானில் உள்ள மூன்று கல்லறைகளில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் 1346 முதல் 1353 வரை புபோனிக் பிளேக் நோய் உலகின் பெரும் பகுதிகளில் அழிவை ஏற்படுத்தியது. சில இடங்களில் 60 சதவிகித மக்கள் இந்த நோயால் இறந்ததாக நம்பப்படுகிறது. இது தொடர்பான ஆய்வில், ஸ்டிர்லிங் பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் பிலிப் ஸ்லாவின், இசிக் குல் ஏரிக்கு அருகிலுள்ள சூ பள்ளத்தாக்கில் 1338, 1339-ம் ஆண்டுகளில் மூன்று கல்லறைகளைக் கண்டுபிடித்தார்.

அதைத் தொடர்ந்து அந்த மூன்று கல்லறைகளில் நெஸ்டோரியன் கிறிஸ்தவ சமூகத்தில் புதைக்கப்பட்ட மூன்று பெண்களின் பற்களிலிருந்து, யெர்சினியா பெஸ்டிஸ் பிளேக் பாக்டீரியாவின் முதல் டி.என்.ஏ தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் மீட்டெடுத்திருக்கின்றனர்.

அந்த டி.என்.ஏ-வை ஆய்வுசெய்தபோது, நோய்க் கிருமியின் மரபணு தன்னை மறுகட்டமைத்து அது பிளாக் டெத் எனும் தொற்றை ஏற்படுத்தியதையும், இன்று இருக்கும் பெரும்பாலான பிளேக் நோய்களுக்கும் அந்த நோய்க்கிருமியின் மரபணுதான் வழிவகுத்தது என்பதையும் கண்டுபிடித்திருக்கின்றனர்” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் ஆய்வாளர், மற்றும் முதன்மை எழுத்தாளரான மரியா ஸ்பைரோ, ‘புபோனிக் பிளேக் மத்திய தரைக்கடல் முழுவதும் பழைய சில்க் ரோடு வர்த்தகப் பாதை வழியாகப் பரவியது. அதற்கு முன்பு 500 ஆண்டுகள் வரை நீடித்த கொடிய நோய்களின் அலையால், இது `இரண்டாவது பிளேக் தொற்றுநோய்’ என்று அழைக்கப்படுகிறது. தொடக்கத்தில் ஐரோப்பாவில் பிளேக் பரவுவதற்கு வர்த்தகம் ஒரு முக்கியக் காரணியாக இருந்தது என்பது ஆய்வில் தெரியவந்தது.

Latest news

ஆஸ்திரேலியாவில் பெட்ரோல் வாகன உரிமையாளர்கள் இரண்டு முறை வரி செலுத்த வேண்டுமா?

வரும் நாட்களில் விதிக்க திட்டமிடப்பட்டுள்ள சாலை பயனர் வரி, மின்சார வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அமைச்சர் ஜிம் சால்மர்ஸ் கூறியுள்ளார். அதன்படி, பெட்ரோல் வாகன பயனர்களுக்கு...

விக்டோரிய மக்களுக்கு $4 மில்லியன் மதிப்புள்ள இலவச பயிற்சி வகுப்புகள்

விக்டோரியன் அரசு, ஊழியர்களுக்கும் வணிகங்களுக்கும் தேவையான டிஜிட்டல் திறன்களை வழங்குவதற்காக ஒரு புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, $4.2 மில்லியன் டிஜிட்டல் வேலைகள் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் இப்போது...

விக்டோரியாவில் 1000 புதிய வேலை வாய்ப்புகள்

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று கிறிஸ்துமஸுக்கு முன்பு 3,500 க்கும் மேற்பட்டவர்களை வேலைக்கு அமர்த்த தயாராகி வருகிறது. Australia Post தனது பணியாளர்களை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த...

LGBTQ சமூகத்தை ஆதரிக்க விக்டோரியன் அரசாங்கத்தின் சமீபத்திய நடவடிக்கை

வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவிக்கும் விக்டோரியன் LGBTQ சமூகங்களை ஆதரிப்பதற்காக விக்டோரியன் அரசாங்கம் ஒரு புதிய ஆதரவு சேவையைத் தொடங்கியுள்ளது. இந்தப் புதிய சேவை 'Switchboard Victoria'...

சர்க்கரை இல்லாமல் காபி குடித்தால் உடலுக்கு நல்லதா?

Caffeine கலந்த காபி குடிப்பதால் ஆயுட்காலம் அதிகரிப்பதாகவும், இதய நோயால் ஏற்படும் இறப்பு அபாயத்தைக் குறைப்பதாகவும் புதிய ஆய்வு ஒன்று தெரியவந்துள்ளது. Tufts பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதைக்...

ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரு தொல்பொருள் பொருட்கள்

உக்ரைனில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யப்பட்ட இரண்டு தொல்பொருள் பொருட்கள் உக்ரைனுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. உக்ரைனின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் சிட்னியில் நடந்த விழாவில்...